Sunday, May 31, 2015

வைத்திய குறிப்புகள் 2

வைத்திய குறிப்புகள் 2

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.
அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பித்தவெடிப்பு
1.கிளிஞ்சல் சுண்ணாம்பையும் கொஞ்சம் விளக்கெண்ணையையும் சின்ன சட்டியிலே போட்டுச் சுட வைத்து இளஞ்சூட்டில் பித்தவெடிப்பில் தடவினால் வழு வழுப்பாகும் .
2. தேன்மெழுகை இளஞ்சூட்டில் இளக்கிப் பித்தவெடிப்பில் தடவி வரவும்

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு 
கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் 
போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து 
வந்தால் போதும்.


• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி 
வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு 
சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் 
குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை 
கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் 
கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி 
மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி 
சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து 
வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி 
நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று 
முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் 
துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல 
வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் 
வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் 
சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் 
காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் 
சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் 
மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 
மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு 
ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மருதாணி [HENNA]
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் 
ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது 
அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் 

கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய 
தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு 
பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.
...
இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை 

பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு 

முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் 

இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் 

தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் 
தணியும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு 
மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி 
இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் 
பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் 
கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை 
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு 
நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி 
வர விரைவில் கருந்தேமல் மறையும்.
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை 
அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல 
மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி 
அழகூட்டுவார்கள்.
தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை 
அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் 
நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் 
வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை 
அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து 

அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் 

அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு 
வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் 
போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து 
சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் 
போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் 
தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
தூக்கமின்மை
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் 
தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, 
தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் 
தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை 
உண்டாக்கும்.
கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது 
வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் 
தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.
படைகள்
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, 
கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 
501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் 
கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு 
கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் 
பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் 
இளநரையும் 
ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் 
எளிதாகத் தீர்வு காணலாம்.
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து 
வைத்துக் 
கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் 
எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு 
கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் 
ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை 
காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, 
பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 
ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?
நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் 
உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் 
தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் 
படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு 
என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு 
என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் 
உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
மலச்சிக்கல்:-
செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை 

சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி:-

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி 

குணமாகும்.

பித்த வெடிப்பு:-

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி

வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு:-
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து

சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு

உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்:-
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும்

சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்

குணமாகும்.
தேமல்:-
வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும்

தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்:-
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்

சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்:-
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில்

கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்

குணமாகும்.
மூக்கடைப்பு:-
ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு

சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர

மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்:-
எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு

இருமல் குணமாகும்
++++++++++++++++++++++++++++++++++++++++
திப்பிலி = திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோது இல்லாதது. 

குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், 

பித்தம், கோழை மூன்றறுக்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றினுள் 

கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. 

அதனை நீக்குவது திப்பிலி. 
இதன் பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், 

தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், 

நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் 

பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து 

எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய 

அறுபகையும் அகன்று அறும்.
++++++++++++++++++++++±+
1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு 

வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். வெறுமனே 

நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து 

அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு 

சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் 

பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

2. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு 

வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே 

பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள 

கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!

3. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து 

சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் 

கட்டுப்பாட்டில் வரும்.

4.இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை 

பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி 

கொஞ்சம் 

கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்
+++++++++++++++++++++++±

1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து 

தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை 

எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி 

நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் 

கோளாறுகள், இதய நோய் தீரும்.

4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு 

தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி 

வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை 

அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் 

சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். 

சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் 

பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் 

கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது
±++++++++±±++++++++++
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் 
செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் 
ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற 
முடியுமா..?!

==========================================
சித்த வைத்தியத்தால் முடியும்!
==========================================

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் 

இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை 

இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் 

துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும் 
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் 
ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும் எண்ணெய் மறு காதில் 
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க 
காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது 
என்று அர்த்தம் அதன் பிறகு 
கருஊமத்த இலையை அரைத்து மூக்கில
3 / 5 

சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி 

விடும்.

----------------------------------------------------------------------------------
பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் 
பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் 
எண்ணற்றநன்மைகள் நிறைந்துள்ளன.

ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் 

இது கோடையில் தான் அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் 

விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை 

வாங்கி குடியுங்கள்.

உடல் உஷ்ணம் :-

கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் 
குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.
சோர்வை நீக்கும் :-
கோடையில் அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சோர்வானது பதநீர் 
குடிப்பதால் நீங்கும்.
மலச்சிக்கல் :-
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள 
நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். 
மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.
ஆரோக்கியமான பற்கள் :-
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் 
இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.
பித்தம் குறையும் :-
கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் 
உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.
-------------------------------------------------------------------
ஓமவள்ளி சட்னி
கடாயில் சிறிது நெய் விட்டு ஜீரகம் ஓம வள்ளி இலைகளை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் வதக்கி, ஆற வைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைக்கவும்.

அதிமதுரம்

அதிமதுரம்..!
மருத்துவ குணங்கள்..!
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய 
மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. 
வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள 
அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். 
நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் 
பயன்படுத்தலாமே
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் 
மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ 
முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய 
முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட 
முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை 
அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை 
வெளியாகியுள்ளது.
செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு 
மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. 
மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...

ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு 
மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். 
கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து 
இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் 
அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் 
இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 
கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 
மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று 
தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு 
முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி 
செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து 
எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு 
மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று 
தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா 
பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, 
பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் 
இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் 
அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் 
தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு 
வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், 

ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் 
நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை 
நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து 
இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் 
பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல 
விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...

சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு 
படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல 
விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் 
இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...

அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு 
அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், 
வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் 
ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் 
சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு 
வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் 
குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 
கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் 
சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச 
வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் 
கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு 
தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். 
கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் 
விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் 
தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை 
மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் 
அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை 
பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி 
தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, 
இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து 
வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா 
நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் 
தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 
அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 
கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் 
போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை 
இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் 
வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக 
அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் 
மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, 
புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் 
சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி 
அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் 
அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 
கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் 
மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு 
வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். 
கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை 
எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர ....

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து 
எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான 
அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து 
வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் 
முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை 
நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் 
நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, 
தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் 
கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் 
ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 
தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, 
ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், 
நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து 
அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் 
ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் 
சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் 
உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் 
கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி 
விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு 
தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் 
கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட 
தொல்லைகளும் நீங்கிவிடும்.

பித்தப்பை / Gallbladder

பித்தப்பை கற்களுக்கு தீர்வு!
[ நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள். பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.
தற்போது 'லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை' நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.]
பித்தப்பை என்றால் என்ன?
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. இது கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்து இருக்கும். 7 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் அதில் உள்ள கொழுப்பு சத்து, கால்சியம், தண்ர், பித்தநீர், உருவாகிற போது பித்தப்பை செயல்படுகிறது. இது கல்லீரலில் இருந்து ஒரு மணிநேரத்தில் சுரக்கும் 40 மி.லி. பித்தநீரை சேகரிக்கும் பணியை செய்கிறது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.
நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.
இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும், நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எதனால் உருவாகிறது?
பல்வேறு காரணங்களால் பித்தபையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம். பித்தப்பையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏற்படும் வேதியியல் மாற்றத்திற்கு ஏற்ப கட்டிகள் உருவாகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இதில் பலவகை உண்டு. உதாரணமாக கொழுப்பு கற்கள், கால்சியம், பித்தநீர் கலந்த கற்கள் ஆகும்.
பெண்களை குறிவைக்கும் பித்தப்பை கற்கள்
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேதியியல் மாற்றத்தினால் ஏற்படும் உடல்பருமன், பிறநோய்களுக்கு அதிகமாக சாப்பிடும் மாத்திரைகளாலும், கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதாலும், கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் குடல்நோய் உள்ளவர்களுக்கும், டைபாயிடு மற்றும் பலநோய் கிருமிகளால் ஏற்படும் உபாதைகளின் போதும் குடல்புண் தொடர்ச்சியாக இருப்பது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போதும் வரலாம்.
பித்தநீர் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் வேறுசில காரணங்களாலும் பித்தப்பை கல் வர வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்:
வயிற்றில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாய்வு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை நோயின் அறிகுறி.
பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.
பொதுவாக, உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.
பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு, வாயுத் தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது, மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.
நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.
சிகிச்சை: பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.
பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100-ல் 10-பேருக்கே மருந்து குணமளிக்கிறது.
அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.
அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.
மிக்க நன்றி: Dr. ராஜ்குமார்


Saturday, May 30, 2015

பலாக்கொட்டை


பலம் தரும் பலாக்கொட்டை
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் 
ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை 
விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். 
அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் 
பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் 
உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் 
பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் 
உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து 
சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், 
ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் 
பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற 
தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த 
பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. 
இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி 
போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற 
தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், 
ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, 
செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. 
இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் 
நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. 
அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் 
பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் 
கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். 
விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் 
கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். 
தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, 
பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் 
ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள 
வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு 
ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை 
கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் 
அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் 
சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் 
குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் 
உண்டாகும். பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் 
உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் 
வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் 
குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே 
நல்லது.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சில குறிப்பு:

தொடர்ச்சியான முடி உதிர்வு, தலையில் அரிப்பு போன்ற தொந்தரவால் 
துவண்டு போகிறவர்களுக்குப் பலன் தருகிறது பலாக்கொட்டை. இதை 
காயவைத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பவுடர் அரை 
டீஸ்பூன், பயத்தமாவு ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் 2 டீஸ்பூன்... இந்த 
மூன்றையும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் சேர்த்துக் குழைக்க 
வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது வெந்நீரையும் சேர்த்து, 
தலையில் பூசி 10 நிமிடம் ஊறவிடுங்கள். பிறகு சீயக்காய் அல்லது 
ஷாம்பூவால் தலையை அலசினால் அரிப்பு குறைந்து, முடி கொட்டுவது 
நிற்கும். அடுத்து முடி வளர ஆரம்பிக்கும்.

பலாக்கொட்டையில் சில உணவுகள் ...
பலாக்கொட்டை பிரட்டல்
தேவையான பொருட்கள்
பலாகொட்டை - 15
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
கறிமசாலா பவுடர் -1டீஸ்பூன் (விரும்பினால்)
தண்ணீர்-11/2 கப்
உப்பு
எண்ணெய்
விழுதாக அரைக்க
வரமிளகாய் - 4
தேங்காய்த் துருவல்-1/4கப்
செய்முறை
பலாக்கொட்டையில் மேலுள்ள தோலை உரித்தபிறகே சமைக்கவேண்டும்.
இதைச் செய்கையில் கவனமாக உரிக்கவேண்டும், கொஞ்சம் ஏமாந்தாலும் பலாக்கொட்டையின் தோல் ஊசிபோல நகக்கண்ணில் ஏறிவிடும். எளிய வழி, அம்மிக்கல்லில் கொட்டைகளை தட்டி, உடைப்பது. உடைத்த பலாக்கொட்டைகளின் தோலை எளிதாக எடுத்துவிடலாம்.
பலாக் கொட்டைகளை தோலை உரித்து நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காய்- வரமிளகாயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் பலாக்கொட்டை, மஞ்சள்தூள் சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்க்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பலாக்கொட்டை வெந்ததும், கறிமசால் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி, பிரட்டலாக வரும்வரை சிறுதீயில் வதக்கி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை பிரட்டல் கறி தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு
பலாக்கொட்டையை நேரடியாக வேகவிட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து வேகும். அவசரமாக சமையல் செய்கையில் பலாக்கொட்டையை குக்கரில் வேகவைத்து எடுத்து பிரட்டலில் சேர்க்கலாம்

பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு-1/2 கப்
பலாக்கொட்டை-12 எண்ணிக்கையில்
மாங்காய்-1
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
புளி- சிறு உருண்டை
பூண்டு-2 பற்கள்
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்-3 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ-ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை-1 கொத்து
உப்பு-தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம்-தேவையான அளவு
காய்ந்த மிளகாய்-1
பெருங்காயம்-சிறிது
கறிவேப்பிலை-சிறிது
செய்முறை:
ஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு , பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
பலாக்கொட்டையின் மேல் தோலை எடுத்துவிட்டு நீரில் போட்டு ஊற வைக்கவும்.தோல் எடுக்கும்போது கவனமாக எடுக்கவும்.இல்லையென்றால் நகக்கண்ணில் பட்டுவிடும்.
ஒரு 10 நிமி. ஊறினால் போதும்.அதன் மற்றொரு தோலையும் நகத்தால் சுரண்டி எடுத்துவிடலாம்.
மாங்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பு,காரம் சரிப்பார்த்து மூடி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் பலாக்கொட்டைகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
நன்றாகக் கொதித்து பலாக்கொட்டைகள் பாதி வெந்த நிலையில் மாங்காய் துண்டுகளைப் போட்டு மூடி வேக வைக்கவும்.
இறுதியாக புளியைக் கரைத்து ஊற்றி கொதித்ததும் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.தேங்காய்ப் பூ இல்லாவிடில் பரவாயில்லை.
இப்போது பலாக்கொட்டை-மாங்காய் சாம்பார் தயார்.
இது சாதம்,இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்
.

பலாக் கொட்டை உருண்டை
தேவையான பொருட்கள்:
பலாக் கொட்டைகள்-30; கடலை மாவு-300கிராம்; பச்சை மிளகாய்-4; மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை; எண்ணெய்; உப்பு.
செய்முறை:
பலாக் கொட்டையை நன்கு அவிக்கவும். பின்னர், மேல்தோலை அகற்றிவிட்டு, மிக்ஸியில் அரைக்கவும். அல்லது மத்தால் மசிக்கவும். கடலை மாவை சலித்து, பலாக்கொட்டை மசியலை சேர்த்து சிறிதளவு தண்ணீரில் நன்கு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். மிளகாய்த்தூள, உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை , கொத்தமல்லித் தழையை நறுக்கி கலந்து வைக்கவும்.
15 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை மாவு-பலாக் கொட்டை மசியலை சிறுசிறு உருண்டைகளாக பிடித்துப் போட்டு பொன்நிறமாக வெந்ததும் எடுக்கவும். மொறுமொறு பலாக்கொட்டை உருண்டை தயார்.
மதியம் சோறுடனும் சாப்பிடலாம். மாலை நேரச் சிற்றுண்டிக்கும் ஏற்றது
.

பலாக்கொட்டைப் பொரியல்
தேவையானவை:
பலாக்கொட்டை-சுமார் 20 எண்ணிக்கை
மிளகாய்த்தூள்-ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்-சிறிது
உப்பு-தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பலாக்கொட்டையை சமைக்குமுன் மேலேயுள்ள ஷெல் போன்ற பகுதியை எடுத்துவிட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.இது ப்ரௌன் நிறத்தினாலான மற்றொரு தோலை எடுப்பதற்கு.
ஊறியதும் அதன் தோலை கட்டைவிரல் நகத்தால் உரித்தோ அல்லது சுரண்டியோ எடுத்துவிடவும்.சில மென்மையான பகுதிகளில் தோல் எடுக்க வராது.அதை விட்டுவிடலாம்.
பிறகு விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.அல்லது முழு அளவிலேயே போட்டுக்கொள்ளலாம்.பார்க்க சிறுசிறு முட்டைகள் போல் இருக்கும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு பலாக்கொட்டைகளைப் போட்டு ஒரு கிளறி கிளறி மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துப் பிரட்டிவிட்டு பலாக்கொட்டை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி வேகவைக்கவும்.
அது நன்றாக வெந்து வரும்வரை இடையிடையே கிண்டிவிடவும்.தண்ணீர் வற்றி,நன்றாக வெந்ததும் இறக்கவும்.இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.
விருப்பமானால் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கலாம்

பலாக்கொட்டை-பயற்றங்காய் பிரட்டல்
தேவையானவை:
பயற்றங்காய் - ¼ கிலோ
பலாக்கொட்டை – 10
சின்ன வெங்காயம் – 5(அ) 6
பச்சை மிளகாய் – 1
வெந்தயம் – ½ டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – ½ டீ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ டீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 ½ கப்
எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணை – 2 டீ ஸ்பூன்
கடுகு – ½ டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- ½ டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 4-5
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிடுங்கள். உட் தோலை விரும்பாதுவிட்டால் தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு தோலைச் சுரண்டி எடுத்துவிடுங்கள். ஆனால் அதில் அதிக ஊட்டச் சத்து உள்ளதை மறந்து விடாதீர்கள்.
பாலாக்கொட்டையை பாதியாக நீளவாட்டில் வெட்டி வையுங்கள்.
வெங்காயம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி விடுங்கள்.
வாணலியில் காய், பலாக்கொட்டை, வெட்டிய வெங்காயம் மிளகாய் இவற்றுடன் வெந்தயம், உப்பு, தூள் வகைகள் சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றி கலக்கி இறுக்கமான மூடி போட்டு அவியவிடுங்கள்.
பத்து நிமிடங்களின் பின் திறந்து தட்டைக் கரண்டியால் பிரட்டிவிட்டு, தீயை சற்றுக் குறைத்து வையுங்கள்.
இரண்டு நிமிடங்களின் பின் மூடியைத் திறந்து பிரட்டிவிடுங்கள்.
தீயை நன்றாகக் குறைத்து வைத்து காய் நன்கு வரண்டு வர தீயை அணைத்து எலுமிச்சம் சாறு விட்டு பிரட்டி இறக்குங்கள்.
தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சமைத்த காய்களைக் கொட்டி ஒரு தடவை பிரட்டி இறக்கிவிடுங்கள்.
கமகம மணத்துடன் பலாக்கொட்டை-பயற்றங்காய் பிரட்டல் தயார்.

உருளைக்கிழங்கு பலாக்கொட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
பலாக்கொட்டை - 25
பெரிய வெங்காயம் - 2 (சிறியது) / 1 (பெரியது)
தேங்காய்த்துருவல் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 2 சிறிய பல் / 1 பெரிய பல்
கொத்துமல்லித்தழை - (பொடிதாக நறுக்கியது) 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கையும், பலாக்கொட்டையும் வேகவைத்துத் தோலுரித்துச் சிறு துண்டுகளாக்கவும். (பலாக்கொட்டைக்கு அரைவேக்காடு போதுமானது.)
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடியும், உப்பும் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும்.
பின் உருளைக்கிழங்கும், பலாக்கொட்டையும் சேர்த்துக் கிளறி விடவும். அவ்வப்போது போதிய இடைவெளியில் கிளறி விடவும். முக்கால் பதம் வந்துள்ளபோது தேங்காய், சோம்பு விழுதாக அரைத்துச் சேர்க்கவும். பூண்டை நன்றாகத் தட்டிச் சேர்த்துக் கிளறவும்.
ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
நன்றி: திருமதி. பத்மா, அம்மா


பலாக்கொட்டை பொடிமாஸ்
தேவையானவை:
பலாக்கொட்டை - 15
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
உப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பலாக்கொட்டையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த பலாக்கொட்டையின் தோல்களை உரித்து கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்து தோல் உரித்த பலாக்கொட்டையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் பொடி செய்து வைத்திருக்கும் பலாக்கொட்டையை போட்டு எல்லாம் ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இந்த கலவையுடன் தேங்காய் துருவல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
எளிதாக செய்யக்கூடிய பலாக்கொட்டை பொடிமாஸ் தயார்.
நன்றி: திருமதி. பத்மா /திருமதி. பார்வதி
கத்தரிக்காய் -பலாக்கொட்டை புளிப்பு கூட்டு
தேவையானவை:
பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ,
பலாக்கொட்டை - 8,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க...
க.பருப்பு, தனியா - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1,
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் (எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்).
தாளிக்க...
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 1.
செய்முறை:
பலாக்கொட்டைகளை நன்றாக தட்டி தோலுடன் வேக வைக்கவும். ஆறிய பிறகு தோலை உரித்து எடுத்து விட்டு பலாக்கொட்டைகளை தனியே வைக்கவும். கத்தரிக்காயை துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும்.கடாயில் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, அதில் புளிக்கரைசலை கொட்டி கொதிக்க விடவும்.
கொதி வரும் போது மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் தூள் போட்டு கொதிக்க விடவும். பின்பு வேக வைத்த பலாக்கொட்டை, கத்தரிக்காயை சேர்க்கவும். அத்துடன் வறுத்து அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கவும். இறக்கும் போது 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்.

பலாக்கொட்டை சோயாப் பொரியல்
தேவை:
பலாக்கொட்டை 15,
சோயா 10 உருண்டைகள்,
பெரிய வெங்காயம் 2,
தக்காளி 4,
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை:
பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
/