Sunday, July 31, 2016

வாத எண்ணெய்


வாதஎண்ணெய்::::
#எண்பதுவகைவாதங்களும்அனைத்துசூலைநோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்டநோய்கள்கூடகுணமாகும்::::

௧) #எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)#காடிநீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)#மருந்துப்பொருட்கள்
சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, ஓமம், பெருங்காயம், கிராம்பு, வசம்பு, சதகுப்பை

௪) மருந்து சாப்பிட நாட்டுப் பசும்பால்

வாத எண்ணெய் செய்யும் முறை

அ) மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ) இந்த சூரணத்தில்  நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ) வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்  விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும் நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்.
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு வாத எண்ணெய் என்று பெயர்

ஈ) வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன் அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து  உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்

வெளி மருந்தாக இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம் / வலி
போன்ற அனைத்து வாத நோய்களும், அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும். இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது. அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.

Saturday, July 30, 2016

இருமல்

இருமல் என்பது என்ன?
ஏன் ஏற்படுகிறது?...

நுரையீரலின் இயக்கக் குறைவு காரணமாக அவற்றில் தேங்கியிருக்கும் சளிக் கழிவை வெளியேற்றும் முயற்சிதான் இருமல்!

சளி எப்படி நுரையீரலில் தேங்கியது?

• நுரையீரலுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் புகைப் பழக்கம் அதன் இயக்கக் குறைவிற்கு காரணமாகலாம்.

• உடல் ஏற்றுக் கொள்ள முடியாத குளிர் தன்மையில் சாப்பிட்ட உணவால் நுரையீரல் பலவீனமடையலாம்.

• நம்மால் செரிக்கவே முடியாத கடினப் பொருளான பாலை அதிக அளவில் பயன் படுத்துவதால் நுரையீரலின் சக்தி குறையலாம்.

• அன்றாடம் வெளியேற்றப் படாத மலக்குடல் கழிவுகள் நுரையீரலின் பணியை பாதிக்கலாம்.

• பசியற்றிருக்கும் போது உண்ணும் உணவு காற்றுக் கழிவாக மாற்றப்பட்டு, நுரையீரலை வந்தடையலாம்.

…இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அடிப்படை ஒன்று தான்.

நம் இயற்கை விதி மீறிய செயல்களால் நுரையீரல் பாதிப்படைந்து தன் தலையாய கடமையான கழிவுகளை வெளியேற்ற முடியாமல் திணறுகிறது.

இந்நிலையில் போதிய எதிர்ப்பு சக்தி உடலிற்கு கிடைக்கும்போது அது தன் வேலைக்குத் திரும்புகிறது. காய்ச்சப் படாத தூய தண்ணிரை அருந்தும் போது, நல்ல பழங்களை உண்ணும் போது, துய்மையான நீரான மழையில் முழுவதுமாக நனையும் போது உடல் பூரண எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது.

எங்கெல்லாம் கழிவுத் தேக்கம் உள்ளதோ அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி வலுவடையும் போது, நுரையீரல் தன் சளிக் கழிவை வெளியேற்ற முயலும்.
எப்படி வெளியேற்றும்?

சிறு குழந்தைகளாக இருந்தால் நுரையீரலின் சளி வாந்தி மூலமாகவும், மலம் மூலமாகவும் சிறிது சிறிதாக வெளியேறும். சளியின் அளவு அதிகமென்றால், இருமலைத் தோற்றுவித்து அதன் மூலம் வெளியேறும்.

பெரியவர்களுக்கு வாந்தி மூலமும், மலம் மூலமும் சளி வெளியேறுவது குறைவு. எனவே தான் இருமல் மூலம் வெளியேற்றுகிறது உடல்.
நுரையீரலில் தேங்கிய சளி உள்ளேயே இருப்பது நல்லதா? அல்லது வெளியேற்றப்படுவது நல்லதா?

கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியவை. அவை உடலிலேயே தங்க நேரிட்டால் ஒவ்வொரு உறுப்பையும், அதன் இயக்கத்தையும் பாதிக்கும்.

நாம் இருமலைத் தான் நோயாக கற்பனை செய்கிறோம். இன்னும், வெளியேற வேண்டிய சளியை, இருமலை அடக்குவதன் மூலம் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.
நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால், சளி தானாகவே இருமல் மூலம் வெளியேறி விடும். பின்பு இருமல் குறைந்து நுரையீரல் தன்னிலைக்குத் திரும்பும்.
ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை!

ரசாயன மருந்துகளைக் கொண்டு இருமலை அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன இந்த மருந்துகள்?

நுரையீரலில் திரவ வடிவில் வெளியேறத் தயாராக இருக்கும் சளியை இந்த ரசாயன மருந்துகள் வெப்பத்தை ஏற்படுத்தி உலரச் செய்கிறது. திரவ வடிவச் சளி இப்போது காய்ந்து விடுவதால் இருமல் வறட்டு இருமலாக மாறுகிறது.

"சளி நின்றுவிட்டது" என்று நாம் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து வெப்பத்தை ஏற்படுத்தும் மருந்துகளால் காய்ந்த சளி துகள்களாக (Powder) பொடியாக்கப்பட்டு நுரையீரலின் நுண் துளைகளில் படிய வைக்கப்படுகிறது.

சளி தற்காலிகமாக உருவ மாற்றம் அடைந்து விடுவதால்  ஒன்றிரண்டு நாட்களில் இருமல் முற்றிலும் நின்று போய் விடுகிறது.

இது தான் நாம் மேற்கொள்ளும் சிகிச்சையின் விளைவு.
அப்படியானால், காய்ந்து, உறைந்து போன சளி என்னவாகும்?.

பத்திரமாக உடலிலியே தங்கியிருக்கும். எப்போது வரை?
எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை.
நாம் சளிக்காகச் சாப்பிட்ட ரசாயன மருந்துகளை உடல் முதலில் வெளியேற்றி எஞ்சிய நச்சுக்களை கல்லீரலின் துணை கொண்டு சேமிக்கிறது.

படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் உடல், நல்ல உணவு, நல்ல நீர், சக்தியுள்ள பழங்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றலை உள்வாங்கி மீண்டும் எதிர்ப்பு சக்தியைத் தயார் செய்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி தயாராவதற்கு ஒரு வாரம் முதல் பல ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மீண்டும் கழிவு வெளியேற்றப் பணி துவங்குகிறது.

முன்பாவது, சளியை வெளியேற்றும் வேலை மட்டும் தான் இருந்தது. இப்போதோ நுரையீரலின் நுண்துளைகளில் அடைத்துக் கொண்டுள்ள உலர்ந்த துகள்களை ஈரப்படுத்தி பின்பு சளியாக மாற்றி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.

இப்போதுதான் இருமலோடு நெஞ்சு எரிச்சல், சளியோடு ரத்தத்துகள் வருதல் போன்றவை ஏற்படும். ரசாயனத்திற்கு பின்பான இந்தக் கழிவு வெளியேற்றம் முன்பை விட கடுமையானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.

இப்போது நாம் புதிதாக சளிப் பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறோம். மழையில் நனைவதாலோ பழங்கள் சாப்பிடுவதாலோ அல்லது காய்ச்சாத நல்ல நீர் குடிப்பதாலோ சளி பிடிப்பதில்லை.

ஏற்கனவே நம் முயற்சியால் உடலில் அடைத்து வைக்கப்பட்ட அதே சளி மீண்டும் வெளியேறுகிறது என்பதை நாம் உணர்வதே இல்லை.

இப்போதும் இருமலை நிறுத்த எல்லா வழி முறைகளையும் பின்பற்றுகிறோம். மருந்துகளால் சளியை காய்ந்த துகள்களாக்கி நுரையீரலில் மீண்டும் சேமித்து வைக்கிறோம்.

இதே நிலை தொடரும் போது குழந்தைகளுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் (முதல்நிலை சளி?) ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு காச நோய் (Tuberculosis), ஆஸ்துமா (Asthma), ஈசினோபிலியா (Eosinophilia), போன்ற இரண்டாம் கட்ட முற்றிய நோய்களாக மாறிவிடுகிறது.

தும்மலை அடக்குவோமானால் சைனஸ் உருவாகிறது. நிரந்தரத் தலைவலி, காரணமற்ற மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலி
... என அனைத்தும் ஒவ்வொன்றாய் ஏற்படுகிறது.
இன்னும் அடுத்தடுத்த நிலைகளில் தோல் வழியாக செதில்படை நோய் (Eczema), செதில் உதிர்தல் (Psoriasis), படர்தாமரை (Ringworm) போன்ற வெளிப்பாடுகளும் நிகழ ஆரம்பிக்கும்.

இவை அனைத்துமே எதிலிருந்து தோன்றியது?
1. இயற்கை விதி மீறல்
2. உறுப்புக்களின் இயக்க குறைவு
3. கழிவுகளின் தேக்கம்
4. மருந்துகளால் கழிவுகளை அடைத்து வைத்தல்
5. ரசாயனங்களால் கழிவுகளை உருமாற்றுதல்

... போன்ற தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கு நாமே நோய்களை சம்பாதித்துக் கொள்கிறோம்!

இயற்கை விதி மீறலை சரி செய்ய முயற்சி செய்யும் உடலை நாம் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்குகிறோம். நாம் என்ன செய்தாலும் உடல் ஒன்றை மட்டுமே செய்து வருகிறது.

அது தான் கழிவு வெளியேற்றச் செயல்!
உடல் எப்போதுமே கடமை தவறுவதில்லை.

 மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கும், நோய்களுக்கும் காரணம் அவனது உயிரில் உள்ள புரோகிராம் செய்யப்பட்ட நல்ல / பாவ பதிவுகளே காரணம் என நமது சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.

ஒரு கம்ப்யூட்டர் செயல்பட நம்மால் செய்யப்பட்ட புரோகிராம் செய்த சாப்ட்வேர்கள் அதில் பதியப்பட்டு அது எப்படி இயங்குகின்றதோ அதுபோல நமது வாழ்க்கை செயல்பட நம்மால் செய்யப்பட்ட வினைப்பதிவுகளே (புரோகிராம்களே) நம்முள் பதியப்பட்டு நாம் இயங்க காரணம் ஆகின்றது.

அதுபோல வியாதி என்பது செல்களில் உள்ள டி.என்.ஏ வில் உள்ளது.
அது கண்ணுக்கும், புறக்கருவிக்கும் எப்போதும் தெரியாது.
அதில் ஒன்று எழுந்தாலும், உயிரில் காட்டும்.

அது கண்ணுக்கும், கருவிக்கும், தெரியாது,
அந்த ஒன்றை வைத்து குறி மூலம் ஆன்மா பாதிப்பை உணர்ந்துக் கொள்ள முடியும், அந்த குறியை வைத்து தான் வியாதியை கண்டுபிடிக்கணும். ஏனென்றால் ஆன்மாவிற்கு வேறு வழியில்லை.

ஆகவே தான் அந்த குறிக்கு தக்க மருந்துகளை மருத்துவர்களின் அனுபவத்தில் நோய்க்கு ஏற்றவாறு கொடுக்க வந்த நோய் தற்காலிகமாக போய் விடும்.

இயற்கையான,மரபணு மாற்றம் இல்லா உணவுகளை உண்டு நிம்மதியாக வாழ்வோம்.

பகிர்வது மிக அவசியம்

Thursday, July 28, 2016

Nothing is Solid / Real

Nobel Prize winning physicists have proven beyond doubt that the physical world is one large sea of energy that flashes into and out of being in milliseconds, over and over again.

Nothing is solid.

This is the world of Quantum Physics.

They have proven that thoughts are what put together and hold together this ever-changing energy field into the ‘objects’ that we see.

So why do we see a person instead of a flashing cluster of energy?

Think of a movie reel.

A movie is a collection of about 24 frames a second. Each frame is separated by a gap. However, because of the speed at which one frame replaces another, our eyes get cheated into thinking that we see a continuous and moving picture.

Think of television.

A TV tube is simply a tube with heaps of electrons hitting the screen in a certain way, creating the illusion of form and motion.

This is what all objects are anyway. You have 5 physical senses (sight, sound, touch, smell, and taste).

Each of these senses has a specific spectrum (for example, a dog hears a different range of sound than you do; a snake sees a different spectrum of light than you do; and so on).

In other words, your set of senses perceives the sea of energy from a certain limited standpoint and makes up an image from that.

It is not complete, nor is it accurate. It is just an interpretation.

All of our interpretations are solely based on the ‘internal map’ of reality that we have, and not the real truth. Our ‘map’ is a result of our personal life’s collective experiences.

Our thoughts are linked to this invisible energy and they determine what the energy forms. Your thoughts literally shift the universe on a particle-by-particle basis to create your physical life.
Look around you.

Everything you see in our physical world started as an idea, an idea that grew as it was shared and expressed, until it grew enough into a physical object through a number of steps.

You literally become what you think about most.

Your life becomes what you have imagined and believed in most.

The world is literally your mirror, enabling you to experience in the physical plane what you hold as your truth … until you change it.

Quantum physics shows us that the world is not the hard and unchangeable thing it may appear to be. Instead, it is a very fluid place continuously built up using our individual and collective thoughts.

What we think is true is really an illusion, almost like a magic trick.

Fortunately we have begun to uncover the illusion and most importantly, how to change it.
What is your body made of?

Nine systems comprise the human body including Circulatory, Digestive, Endocrine, Muscular, Nervous, Reproductive, Respiratory, Skeletal, and Urinary.

What are those made up of?

Tissues and organs.

What are tissues and organs made of?

Cells.

What are cells made of?

Molecules.

What are molecules made of?

Atoms.

What are atoms made of?

Sub-atomic particles.

What are subatomic particles made of?

Energy!

You and I are pure energy-light in its most beautiful and intelligent configuration. Energy that is constantly changing beneath the surface and you control it all with your powerful mind.

You are one big stellar and powerful Human Being.

If you could see yourself under a powerful electron microscope and conduct other experiments on yourself, you would see that you are made up of a cluster of ever-changing energy in the form of electrons, neutrons, photons and so on.

So is everything else around you. Quantum physics tells us that it is the act of observing an object that causes it to be there where and how we observe it.

An object does not exist independently of its observer! So, as you can see, your observation, your attention to something, and your intention, literally creates that thing.

This is scientific and proven.

Your world is made of spirit, mind and body.

Each of those three, spirit, mind and body, has a function that is unique to it and not shared with the other. What you see with your eyes and experience with your body is the physical world, which we shall call Body. Body is an effect, created by a cause.

This cause is Thought.

Body cannot create. It can only experience and be experienced … that is its unique function.
Thought cannot experience … it can only make up, create and interpret. It needs a world of relativity (the physical world, Body) to experience itself.

Spirit is All That Is, that which gives Life to Thought and Body.

Body has no power to create, although it gives the illusion of power to do so. This illusion is the cause of much frustration. Body is purely an effect and has no power to cause or create.
The key with all of this information is how do you learn to see the universe differently than you do now so that you can manifest everything you truly desire.

Wednesday, July 27, 2016

கற்றாழை

கற்றாழை (Aloe vera)

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

தாம்பூலம்

[26/07 05:50] Rel MPP Sudhakar R: *அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்!*

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம்,சிலேத்துமம்" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

*வாழ்க....நம் பண்பாட்டு பெருமை*
[26/07 07:34] KKT Shobha: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருவாயிலிருந்து தெறித்த தாம்பபூலத்தை தூக்க கலக்கத்தில் இருந்த மடப்பள்ளி ஊழியர் வரதன் உண்டதால் கவிமழை பொழியும் காளமேகம் ஆனார்.
[26/07 07:34] KKT Shobha: வெற்றிலை பற்றி இன்னும் சில தகவல்கள்.
காம்பையும் நுனியையும் கிள்ளி விட்டு தான் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும்சீக்கிரமே அழுக தொடங்கும்.
வெற்றிலை தேவலோகத்திலிருந்து ஊர்வசியால் கொண்டு வரப்பட்டது என்று செல்லப்படுகிறது.
வெற்றிலை மென்றதும் முதலில் வரும் சாற்றை உமிழ்ந்து விட வேண்டும்.
அக்காலத்தில் அரசர்களுக்கு வெற்றிலை மடித்து தருவதற்கு என்றே தயார் நிலையில் பணியாள் இருப்பார். அடப்பக்காரன் என்று பெயர்.
[26/07 07:34] KKT Shobha: மின்வட்ட சுடராழி
வேங்கடக்கோன்
    தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்தவுடன்
   புகழ் பெறுவேன் ஆவேனே. .
என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
வெற்றிலை உண்டு துப்புவதை கலத்தில் ஏந்துவதற்கும் பணியாளர் இருந்தது தெரிகிறது.
கும்பகோணம் வெற்றிலை போலவே காசி(கங்கை கரை)வெற்றியையும் புகழ் வாய்ந்தது.

சித்த மருத்துவம்






Thursday, July 21, 2016

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள்

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.
 🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

🌵 உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

🐲 கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்🐾

☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

🐌 கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்🦂

🌲குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

🍁குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

🐉 கிருமிகள் உருவாகக் காரணம்🐛

🐞கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

🌴அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

🎋நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

👁  கண் நோய்:

🍃கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

🍀 பொதுக் காரணங்கள் :

🐹வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

🐰 சிறப்புக் காரணம் :

👶🏻சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

🌿 காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

🌿 வெள்ளெழுத்து

🍃கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

🍁முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

🍀கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

😨 தலைநோய் :

🍒உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

🍋தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

🍍ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

😨 கபால நோயின் வகை :

🕷வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

🍎தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

🍊 அம்மை நோய் :

🍏அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

🍇மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌽அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

🍒 இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.🐉

🎃 அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

🌿 சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி
2. பாலம்மை

3. மிளகம்மை
4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை

7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

குப்பைமேனி / வசிய மூலிகை

பூனை வணங்கி

அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில்பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால் அதற்கு வசிய சக்தி வந்து விடும் என்கிறார் . இதன் வேரும் வசியத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள்

இதன் சாப நிவர்த்தி மந்திரம் " தூ தூ "
குப்பைமேனி என்கிற பூனை வணங்கி
இதன் தற்போதைய பெயர்:குப்பைமேனி என்கிற குப்பை கீரை இது பெரும்பாலும் ரோட்டு ஓரங்களில் உள்ளதாகும் இதில் பெரும்பாலும் புள்ளிகள் இல்லாத தழை வசியத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள்

என்னிடம் பலர்சாபநிவர்த்தி பற்றி கேட்கிறார்கள். இதில் பல முறைகள் உள்ளன

1.மூலிகை பிடுங்கும் காலம்
2.அதற்க்கு உரியநட்சத்திரம்
3.எந்த திசையில் நிற்க வேண்டும்
4.என்ன நூல் கட்ட வேண்டும் (இரு நூல்கள் உண்டு)
5.எதை பலிகொடுக்கவேண்டும் (சேவல்,சாதம்)
6.என்ன மந்திரம் கூற வேண்டும்
7.எந்த விரல்கள் மூலம் பறிக்க வேண்டும்
8.எந்த கல்லில் அரைக்க வேண்டும் (சிவப்புகல்,கருப்புகல்,பச்சைகல்)
9.அரைக்கும் போது என்னபொதுவாக சேர்க்க வேண்டும்(பால்,சில பிற்சேர்கை மூலிகை)

இதை எல்லாம் அறிந்தால் தான் வசிய மூலிகை வேலை செய்யும் இது எல்லாம் குருமூலம் தான் செல்லி தருவார்கள் மேலும் இந்த முறையை நான் உங்களுக்கு கூற முடியாது ஏன் என்றால் என் குரு யாரிடமும்(சில விபரங்களைமட்டும்) சொல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னிக்கவும்....இது எல்லாம் செய்யாமல் வசிய மூலிகை வேலை செய்யாது

மூலிகைக்கு சபநிவர்த்தி செய்யவில்லை என்றால்உரிய (மருத்துவ)பலனை மட்டுமே கொடுக்கும் .
உதாரணம்: இது தோலில் உள்ள வியாதிகளை குணப்படுத்தும்

பகிர்வில் ர.சடகோபால்
++++++++++++++++++++++++++++++++
தமிழ்நாட்டில் எளிதில கிடைக்கக் கூடிய பச்சிலை வகைகளிலே குப்பைமேனியும் ஒன்று இதற்குப் பூனை வணங்கி என்றொரு பெயரும் உண்டு பூனை நோய் வாய்ப்பட்டால் குப்பைமேனியிருக்கும் பக்கம் சென்று இலையில் தன் தலையைத் தேய்த்துக்கொள்ளுவதுடன் இலையைத் தன் நாவினால் நக்கிக் கொடுக்கும் பூனைக்கு ஏற்பட்டிருக்கும் மந்தம் அஜீரணம் உடல்வலி கண்நோய் முதலியவைகள் நீங்கிவிடுகின்றன.

வயிற்றுக்கிருமிநீங்க1 குப்பைமேனி இலை ஓரு பிடி வேப்பம் ஈர்க்கு 10 க்ராம் பூவரன்பட்டை 10 க்ராம் கல் மண் நீங்கிய ஓமம் 10 க்ராம் இன்நான்கினையும்நெகிழ அரைத்து அரிநெல்லிக்காயளவு எடுத்து ஓரு சங்கு முத்துக்கொட்டை எண்ணெயில் கலக்கி (விளக்கெண்ணெய்) சாப்பிட வயிற்றுக் கிருமிகள் அற்று விழும்2 குப்பைமேனி இலை இரண்டு பிடி சரக்கொன்றைக் கொழுந்து இரண்டு பிடி (கைபிடி) இவ்விரண்டினையும் எடுத்து சட்டிக்குள் வைத்து அவித்து பிறகு எடுத்துப் பிழிந்து ஓரு சாங்கு அளவு சாற்றில் ஓரு டீ ஸ்பூன் சீனி கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கக்கிருமிகள் விழும் மேற்சொல்லிய. அளவு மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரை ஐந்திலிருந்து பத்து வயதுவரை இரண்டு பங்கு பெரியவர்களுக்குநான்கு அல்லது ஐந்து பங்கு வீதம் உபயோகிக்கலாம் ( பத்தியம் இல்லை)

வாயு வீக்கம்
நீங்ககுப்பைமேனி இலைச் சாறு 60 மில்லி லிட்டர் சுண்ணாம்பு      30 மி. லிட்டர் இவ்விரண்டினையும் சேர்த்துக் குழைத்து வேதனையுடன் உள்ள வாயு வீக்கத்துக்குத்தடவ வீக்கம் வாங்கும் : உபாதையும் நீங்கும்.

பித்த சாந்தியடைய குப்பைமேனி இலையை இரண்டு பிடியளவுவெடுத்து 350 மி. லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகக் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் ஓரு ஸ்பூன் உப்பைக் கரைத்து 90 மி. லி. வீதம் பெரியவர்கள் அருந்த கபத்துடனும் மஞ்சள் நீர் போலும் இரு தடவை வாந்தியாகும் பித்தம் நீங்கும். சிறியவர்களுக்கு  40 மி. லிட்டர் வீதமும் மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுக் குழந்தைகளுக்கு ஓரு சங்கு வீதமும் கொடுக்கப் போதுமானது இரண்டொரு தடவை மலம் போகும்குப்பைமேனிச் சற்றுடன் சுக்கை இழைத்து நெற்றிக்குப் பற்றுப் போட்டு சிறிது சாம்பிராணிப் புகை காட்ட உடனடியாகத் தலைவலி போகும்குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் சமம் கூட்டியரைத்து பூசிவரப் படுகைப் புண் ஆறும் இதனைப் புண் ஆறும்வரை நீடித்துச் செய்ய வேண்டும்.

மார்பு வலி:- குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியினால் வாஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு சமனளவு சீனி கலந்து 175 மி.லி. காய்ச்சிய பசும்பாலில் ஒரு சிட்டிகை அளவெடுத்துக் கலந்து நாளொன்றுக்கு காலை மட்டும் பதினைந்து நாள் முறையே அருந்த மார்பு வலி நீங்கும் தேகத்திற்குக் குளிர்ச்சி தரும்.

Wednesday, July 20, 2016

விரதம் Fasting


விரதங்களும் பலன்களும்/விரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா?

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.

“ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

விரதங்களும் பலன்களும்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூர அன்பைப் பெறலாம்.

2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

விரதம் விளக்கம்

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம்.

++++++++++++++++++++++++++++
உறுப்புக்களின்  #செயலை #தற்காலிகமாக #நிறுத்தினால் #நமக்கு  #சக்தி #கிடைக்குமா #எப்படி ?..

* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய்
காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம்
செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை
நானும் காணமாட்டேன் என தனது கண்களை
கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த
வைராகியமான முடிவு அவளின் சக்தியை
நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும்
சக்தியாக அமைந்துவிட்டது.

* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம்
சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு
வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக
மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின்
அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர
சொல்லுகிறார்.

* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ
கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த
சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என
கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை
கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர்
புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன்
தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என
கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை
இடுப்பில் தொடை வரை அணிந்து
காந்தாரியின் முன் செல்லுகிறான்
துரியோதனன். கண்களை திறந்து தனது
சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன்
இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை
கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.

* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும்,
துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும்
பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில்
தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.
காரணம் காந்தாரி வழங்கிய சக்தி
தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின்
கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய
முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு
உணர்த்தும்.

* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம்
உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும்
வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில்
உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம்
பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு
உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே
செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை
செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என
இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

* ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும்
தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள்
சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்
நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு
ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக
காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான்
செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம்
தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன்
செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம்
மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள்
இருந்தாலும், அனைத்து முறையிலும் சில
சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது
விரதம் இருத்தல் என்பதாகும்.

* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல்
இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிற
ோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது
அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம்
இருத்தல் என விளக்கலாம்.

* பஞ்சபூதங்களின் வடிவமான நமது
ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை
செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்
அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா
என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு
நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில்
மேம்படலாம்.

* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என
காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - காற்று 
தொடு உணர்வு - மண் 

* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு
நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும்
பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல்
சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு
உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச்
செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே
சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம்
அடையும்.

* காது மற்றும் மூக்கு பகுதிகளின்
செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும்
இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்
வாழமுடியாது. அதை போலவே இந்த இரு
அவயங்களின் செயல்களை நாம்மால்
செயற்கையாக நிறுத்த முடியாது.

* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக
நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?

* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய
திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன்
(குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு
நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை
மேலும் வலுசேர்க்கும்.

* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை
உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம்
உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ
அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு
குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன்
உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை
இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா
காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது
சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்
பயன்படுத்தினார். தற்சமயம் அது
அரசியலாகிவிட்டது.

* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய
ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்
மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு
நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை
கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை
மூலம் அறியலாம.

** நமது உடலின் சக்தியை அதிகமாக
செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை
காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள்.
உண்ணாமல் இருந்தால் மயங்கி
விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம்
பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன்
உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல்
தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள்
உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை
கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.
உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு.
அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும்
தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம்
ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும்
முக்கியமான பயன் மனது தனது செயலை
மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில்
ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.
பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு
வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது
மற்றொரு வகை. நமது உடலின் தன்மை
வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க
வேண்டும்.

* சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம்
உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும்
விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று
முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக
குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும்
சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு
அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக
உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை
பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத
தினங்கள்தான்.

** யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க
கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு
இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்
சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும்
பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும்
சாஸ்திரத்தில் உண்டு.

* மெளனவிரதம் இருப்பது வாய் எனும்
உறுப்பின் மற்றொரு விரதமாகும்.
மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும்
இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும்
தடையில்லை. உலகின் சிறந்த மொழி
மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த
வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில்
இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக
அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்
உங்கள் உள்ளுணர்வு மிகவும்
கூர்மையானதாக மாறி உங்களை
விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்
காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை
ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல்.
மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை
ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை
மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.
அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை
முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர்
உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி
மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள்
நமக்கு நன்மை செய்கின்றன.
விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க,
கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க,
ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ
ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை
ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே
அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற
மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற
வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்
என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது
கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய
ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள்
ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி,
ஞானத்தை தேடி புறப்படுகிறது.வ
றுமையால்உணவு இல்லை, சூழ்நிலை
காரணமாக உணவில்லை என்ற நிலை வரும்
போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம்
கண்முன் பாலும், பழமும், இனிப்பும்,
சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும்
குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி
பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான
விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பா
டு பற்றி டாக்டர்களே நமக்கு
அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு
ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும்.
அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை
வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு
சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை
சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது.
ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம்
முன்னோர் வகுத்தனர்
+++++++++++++++++++++++++++++++
விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இன்று நம்மில் பலர் இதை கேலியும் கிண்டலும் செய்து வருகிறோம். இதனால் என்ன பயன் என்று நக்கல் அடித்து வருகிறோம்.
விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது.
1 உடல்நிலை மாற்றம்.
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
2 நோய் எதிர்ப்பு.
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
3 உடல் எடை குறைவு.
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில் உதவும்.
4 மன நிலை மேன்மையடையும்.
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்ணவு இடைவேளை தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
5 உணவு இடைவேளை.
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
6 வாரம் ஒருமுறை.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.
7 மூக்கு முட்ட உண்பது தவறு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.

8 விரதம் இருக்க வேண்டிய முறை.
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
9 புத்துணர்ச்சி.
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
10 குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.
கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல, எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு. தினமும், காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை, 4:30 - 6:00 மணி) விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும்; முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மாலை, 6:00 மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை, 4:30 - 6:00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால், சிவபெருமானும், நரசிம்மரும் நமக்கு அருளுவர். காரணம், அவர்களை வணங்க ஏற்ற நேரம் இவை!
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்... என்று அவர் பாடுவதில் இருந்து, இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
தீபஜோதி என்பது அக்னி தத்துவம்; அக்னியின் சொரூபமாக, ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள்ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல; அது, அநியாயக்காரர்களைக் கொல்லும்; மற்றவர்களுக்கு ஞான ஜோதியாய் தெரியும்.
ஆசையைத் தூண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான்! ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, பிறவிகளும் அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க, சிவனின் நெற்றிக்கண்ணை நாம் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து, நித்ய ஆனந்தத்தை அடையலாம்.
திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம், சிவாம்சம் கொண்டதே! யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் சிவன். அவர், பூலோக மக்கள் மீது கொண்ட கருணையால், தன்னை எளிமைப்படுத்தி, அருள்புரிவதற்காக நெருப்பு வடிவில் காட்சி தருகிறார்.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டபோது, அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப் பொய்கையில் சிறுகுழந்தையாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே, நம் வீட்டு சிறு அகல் விளக்குகளில் குட்டிக் குழந்தை முருகனாக ஒளி வீசுகிறது.
வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும்.
விளக்கு இல்லாவிட்டால், குடியிருக்கும் வீடு இருண்டு விடுவதைப் போல, மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால், அநியாயங்களே வெளிப்படும்.
கணவர் மற்றும் பிள்ளைகள் தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி, நற்குணங்கள் பெற, பெண்கள் கார்த்திகை விரதம் இருப்பர்.
ஐஐ தொடங்கி, ஓர் ஆண்டு, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கார்த்திகை திருநாளன்று தீபமேற்றி, பிரகாசமான வாழ்வைப் பெறுவோம்.