Sunday, August 23, 2015

மஞ்சள் காமாலை


தமிழ்நாட்டில் எந்த நோய்க்கு இலவசமாக மூலிகை மருந்துகள் தருகிறார்கள் என்று கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள் ‘மஞ்சள் காமாலைக்கு’ என்று. தென்கோடி காரையாறு தொடங்கி வட கோடி வடசென்னை வரை இந்த நோய்க்கு இலவச மருந்து கொடுக்காத ஊர் தமிழகத்தில் இல்லை. அந்த அளவுக்கு மஞ்சள் காமாலை பிரபலம்.
எது மஞ்சள் காமாலை?
மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. ஒரு அறிகுறி. கல்லீரல் கெட்டுவிட்டது என்று தெரிவிக்கிற ஒரு வெளிப்பாடு. இது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. ஒன்று, கிருமி சார்ந்த மஞ்சள் காமாலை (Infectious Jaundice); மற்றொன்று, கிருமி சாராத மஞ்சள் காமாலை (Metabolic Jaundice).
பாக்டீரியா, வைரஸ் என்று ஏதாவது ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுவது முதல் வகையைச் சேர்ந்தது. மது குடிப்பது, தேவையில்லாமல் மாத்திரை மருந்து சாப்பிடுவது, அதிகமாக கொழுப்புணவு சாப்பிடுவது, பித்தப்பை வீங்கி அடைத்துக்கொள்வது… இப்படிப் பல காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போதும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
வைரஸ்களின் ஆதிக்கம்!
சுற்றுப்புற சுகாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் கல்லீரலைப் பாதிக்கிற விஷயங்களில் வைரஸ் கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ் அதிமுக்கியமானது. ஏ, பி, சி, டி, இ, ஜி என இவற்றில் பல வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களின் தாக்குதல் நம் நாட்டில் அதிகம். எனவே, அந்த இரண்டு வைரஸ்கள் ஏற்படுத்துகிற மஞ்சள் காமாலைகளை மட்டும் இங்கு தெரிந்துகொள்வோம்.
1. ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலை
ஹெபடைட்டிஸ் ஏ’ (Hepatitis A)எனும் வைரஸால் ஏற்படுகிற ஒரு தொற்றுநோய் இது. நடைமுறையில் சாதாரணமாக நாம் காண்கிற மஞ்சள் காமாலை இதுதான். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை எவருக்கும் இது வரலாம். என்றாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேல் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அதேவேளையில் பெரியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல், இது குழந்தைகளுக்கு அவ்வளவாக ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை.
நோய் வரும் வழி
நோயாளியின் மலத்தில் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். ஈக்கள் மூலம் பிற இடங்களுக்குப் பரவும். மாசடைந்த உணவு, அசுத்தமான குடிநீர் மூலம் இவை மனித உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும். நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம். இது பரவியுள்ள இடங்களுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தால், அவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
அறிகுறிகள்
இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவருக்குப் பசிக்காது. காய்ச்சல், வாந்தி, களைப்பு ஏற்படும். வயிறு வலிக்கும். உடல் அரிக்கும். கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும்.
மஞ்சள் நிறம் ஏன்?
மஞ்சள் நிறத்தில் ‘பிலிருபின்’ என்ற ஒரு நிறமிப்பொருளைக் கல்லீரல் சுரக்கிறது. சாதாரணமாக இதன் அளவு ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 0.8 மி.கி. என்ற அளவில் இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படும்போது இந்தச் சுரப்பு அதிகரிப்பதால் ரத்தத்திலும் இதன் அளவு கூடும். அப்போது கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம்.
சிகிச்சையும் தடுப்பு முறையும்
அலோபதி மருத்துவத்தில் இதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே காமாலை குணமாகிவிடும். கீழா நெல்லிக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் சில அனுபவ மருந்துகளை சித்த மருத்துவத்தில் தருகிறார்கள்.
ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலையோடு ஒப்பிடும்போது ஹெபடைட்டிஸ்ஏ அதிக ஆபத்து இல்லாதது. என்றாலும், மழைக்காலத்திலும், வெயில்கால ஆரம்பத்திலும் இது ஒரு கொள்ளை நோயாகப் பரவுகிறது. இதைத் தடுக்க அலோபதி மருத்துவம் ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளது. இதை முறைப்படி போட்டுக் கொள்கிறவர்களுக்கு இந்த நோய் அவர்கள் வாழ்க்கை முழுவதும் வருவது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி வகைகள்
ஹெபடைட்டிஸ் ஏ நோய்த்தொற்றைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி (Inactivated Hepatitis A vaccine ), உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Live attenuated hepatitis A vaccine) என்று இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
போட்டுக்கொள்ளும் முறை
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி: குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை தடுப்பூசியைப் போட வேண்டும். ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணையைப் போட வேண்டும்.
உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி: குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு தவணை போட்டுக்கொண்டால் போதும். ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள்காமாலை வந்த பிறகு இந்தத் தடுப்பூசியைப் போடவேண்டியது இல்லை.
போட்டுக்கொள்ளவில்லை என்றால்?
இரண்டு வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் அதற்குப் பிறகு எந்த வயதிலும் போட்டுக்கொள்ளலாம். வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி போடப்படுவதாக இருந்தால், ஆறு மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும். உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி போடப்படுவதாக இருந்தால், ஒரு தவணை போட்டுக்கொண்டாலே போதும். பத்து வயதுக்கு மேல் இதைப் போட்டுக்கொள்கிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரத்தப்பரிசோதனை செய்துகொண்டு அதன்படி தடுப்பூசி தேவையா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.
சுத்தம் காக்கும்!
ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலையைத் தடுக்க குடிநீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு தயாரிக்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் சுத்தம் மற்றும் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பண்டங்களை நன்றாக மூடிப் பாதுகாக்க வேண்டும். உணவை சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில், சாலையோரக்கடைகளில் அடிக்கடி சாப்பிடக்கூடாது.
உணவுக்கட்டுப்பாடு
இந்த நோய் உள்ளவர்கள் இறைச்சி, முட்டை, தயிர், வெண்ணெய், நெய் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காரணம், கொழுப்பு உணவுச் செரிமானம் ஆவதில் கல்லீரலின் பங்கு அதிகம். இந்த நோயின்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால், கொழுப்பு உணவுகள் செரிமானம் ஆகத் தாமதமாகும். எனவே, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆவியில் அவித்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைஅதிகப்படுத்த வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், மோர், கரும்புச்சாறு, குளூக்கோஸ், பழச்சாறுகள் சாப்பிடலாம். இந்த நோய் வந்தவர்கள் ஆயுள்முழுவதும் மது அருந்தக்கூடாது. புகை பிடிக்கக்கூடாது.
2. ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலை
‘உயிர்க்கொல்லி நோய்’ என்று அழைக்கப்படுகிற ‘ஹெபடைட்டிஸ் பி’(Hepatitis B) மஞ்சள் காமாலை மிகவும் ஆபத்தானது. ‘ஹெபடைட்டிஸ்பி’ வைரஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்கி இந்த மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன. உலகில் சுமார் 20 கோடி பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்கு பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவுமில்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால் இதை ஓர் உயிர்க்கொல்லி நோய் என்கிறார்கள்.
நோய் வரும் வழி
இந்த நோய்க் கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு /தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படுகிறது. உடலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவக்கூடியது. இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கு இந்த நோய் வருகிறது. இவர்களுக்குப் போடப்பட்ட ஊசிக்குழலையும் ஊசியையும் சரியாகத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போட்டால், அந்தப் புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.
போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள், ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்து கொள்ளும்போதும், தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசியைப் பயன்படுத்திப் பச்சை குத்தும்போதும் மற்றவர்களுக்கு இது பரவுகிறது. இந்த நோயுள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேசர் பிளேடு போன்றவற்றில் சுமார் ஏழு நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த நேரத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும்.
நோய் பாதிப்பு
இந்த நோய்த் தொற்று உள்ளவருக்குப் பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவற்றைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால், கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும். என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகி நோய் நீடிக்கும்.
அதேநேரத்தில் இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமிகளுக்கும் இந்த நோய் இருப்பதே வெளியில் தெரியாது. அதேவேளையில் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்த நோயைப் பரப்புவார்கள். ஆதலால், இவர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும் (Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். இறுதியில், மரணம் ஏற்படும்.
தடுப்பூசி வகை
‘ஹெபடைட்டிஸ் பி’ நோய்க்கு முழு நிவாரணம் தருகிற சிகிச்சை இதுவரை இல்லை. ஆனால், 100 சதவிகிதம் இதை வரவிடாமல் தடுத்துக்கொள்ள ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசி’ உள்ளது, இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும் (Monovalent hepatitis B vaccine), பென்டாவேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் இரண்டுமே ஒன்றுதான். எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இவை கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சுருக்க நோய் வருவதையும் தடுக்கிறது.
போட்டுக்கொள்ளும் முறை
குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒரு மாதத்திலிருந்து 1½ மாதத்திற்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என மூன்று தவணைகள் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு…
குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியை பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30ம் நாளில் முதல் தவணையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளை வழக்கம்போல போட வேண்டும்.
கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால்?
கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன், ‘ஹெபடைட்டிஸ் பி’இமுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை அரை மில்லி அளவில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் போடப்படவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் இதை அவசியம் போட்டுவிட வேண்டும். இத்துடன் வழக்கமான ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.
தடுப்பூசியைப் போடவில்லை எனில்..?
ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் எந்த வயதிலும் இதைப் போட்டுக்கொள்ளலாம். மொத்தம் மூன்று முறை இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் ஒரு மாதம் இடைவெளியும், இரண்டாம் ஊசிக்கும் மூன்றாம் ஊசிக்கும் 5 மாதம் இடைவெளியும் விட வேண்டும். 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதன் அளவு அரை மி.லி. 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதன் அளவு 1 மி.லி. குழந்தைகளுக்குத் தொடையிலும்,
பெரியவர்களுக்கு இடது புஜத்திலும் போட வேண்டும். இடுப்பில் மட்டும் போடவே கூடாது.
தடுப்பது எப்படி?
ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது தானமாகப் பெறப்படும் ரத்தத்தில் ‘ஹெபடைட்டிஸ் பி’ வைரஸ் கிருமிகள் இல்லை என்றுபரிசோதனையில் உறுதியான பிறகே செலுத்தப்பட வேண்டும்.
தசை ஊசிகள் மற்றும் சிரை ஊசி
களைப் போட்டுக்கொள்ளும்போது ஒருவருக்கு பயன்படுத்தியவற்றை அடுத்தவர்களுக்குப் போடக்கூடாது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிக்குழல்களைப் பயன்படுத்த வேண்டும்.
பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு, டயாலிசிஸ் போன்றவை செய்யப்படும்போது மருத்துவக் கருவிகளை நன்றாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
இந்த நோய் உள்ளவர்களுடன் பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
மதுவும் கல்லீரல் நோயும்
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் சீக்கிரத்தில் கெட்டுவிடும். தினமும் 80 மி.லி.க்கு மேல் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் கல்லீரல் அழற்சி அடைந்துவிடும். இவர்கள் மதுப்பழக்கத்தைத் தொடர்ந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் கல்லீரல் சுருங்கிவிடும். சிலருக்குப் புற்றுநோயும் வரலாம். எனவே, கல்லீரலுக்குப் பரம எதிரி மது என்பதை உணர்ந்து மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும்

படர்தாமரை Fungal Infections

படர்தாமரையை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம் :-
அதிகமாக வெயில் காலங்களில் வரும் தோல் அரிப்பு நோய்களில் ஒன்று தான் படர்தாமரை. பூஞ்சையினால் ஏற்படும் படர்தாமரை உங்களது சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக இருக்கும். இது சருமம், நகம், ஸ்கால்ப், உள்ளங்கை அல்லது பாதங்களில் தான் அதிகம் ஏற்படும்.
கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துவதுடன் பிறருக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1. பூண்டை அரைத்து சாறு எடுத்து அதனை படர்தாமரை உள்ள இடங்களில் தடவி வந்தால் நிவாரணம் பெறலாம்.
2. படர்தாமரை உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி வர படர்தாமரை நீங்குவதோடு பரவுவதும் தடுக்கப்படும்.
3. கடுகு அல்லது அதன் எண்ணெயை அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும் படர்தாமரை மறையும்.
4. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கற்பூரத்தில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் இருப்பதால் படர்தாமரைக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
5. மஞ்சள் தூள் பூஞ்சையின் தாக்குதல்களை தடுக்கும் வல்லமை படைத்தது. இதனை தடவி வந்தால் படர்தாமரை நீங்கும்

++++++++++++++++++++

Home Remedies For Fungal Infections

Skin fungus is a common infection that is caused when certain fungal pathogens breed in moist or warm environments. Fungus usually grows in shoes, socks, public areas like swimming pools or gyms, and in showers. The microscopic fungus lives on toenails, hair and skin and the most common symptoms are usually peeling, itchiness or burning skin. If you suffer from some of these symptoms, there are a number of home remedies that can easily treat fungal infections.
feet

Stay Clean
Our feet can easily be our dirtiest body part, and it is so easy to neglect their health. In order to prevent or cure fungal infections, the first step is to keep your feet as clean as possible. This can be done by regularly having foot baths in which you wash your feet thoroughly with soap and water. It is also recommended to scrub and exfoliate your feet every week to remove the dead skin cells that may hold fungal bacteria.

Keep Your Feet and Shoes Dry

As explained above, fungus develops in moist or wet areas, so it is important to make sure that your feet and shoes are dry. Don't wear shoes when you have wet feet (that includes sandals that are not made from plastic), and make sure that you dry your feet thoroughly after bathing. If your shoes are wet, place them upside-down by a window or throw them in the dryer before wearing them.

Apple Cider Vinegar
apple ciderOne of nature's most powerful medicines, apple cider vinegar can be used to cure ringworm due to its strong anti-septic properties. When using vinegar to treat fungal infections, clean the affected area well with antiseptic soap before applying the apple cider vinegar with a cotton ball to the same area. Then, to maximize the effect of the vinegar, massage the area gently for a few minutes.

4. Nail Polish
Believe it or not, nail polish and nail polish remover, known as acetone, can help remove and prevent the growth of fungus on your nails. Usually fungus on the nails appears in a yellowish color, and if you experience these symptoms, one good way to fight off the infection is by applying nail polish (either colored or clear) to the affected nails. The nail polish or the acetone will dry out the fungus in the nail.

Don't Wear Your Shoes For Too Long
Although many of us are on our feet all day, one of the worst things you can do that promotes fungal infections is to wear your shoes for an extended period. Because your feet sweat all day long (yes, all feet sweat), wearing your footwear for an extended period of time keeps your feet moist and prone to fungus growth. Try and remove your shoes when you can, even if it's just for a few minutes, to air out the sweaty area.
Powder
If you need to wear the same pair of socks and shoes more than two days in a row, it is recommended to apply a dash of baby powder into the sock and shoe before slipping them on. This will prevent the dead skin in the sock and shoe from affecting your foot, and will keep any moisture out that will facilitate infection.

Keep an Eye Out For Obvious Symptoms

rash
Some of the most obvious symptoms of a fungal infection are itchiness and burning in your feet, or the formation of a crusty layer of skin on top of the feet. Also, there are commonly small rashes that develop and itch (known as Athlete's Foot) which is another obvious sign. It is important to be aware of these telltale signs because the skin infection caused by the fungus is very contagious, and once you have it, it is hard to get rid of.

Don't Wear Tight Fitting Shoes or Clothes
As mentioned above, fungus develops in your shoes and clothes because your feet and body sweat and the moisture is a thriving environment for fungus. Another way to minimize the seriousness of the fungal infection is not to wear tight shoes that will prevent air from entering in and aggravating the infected areas.

tea tree
Tea Tree OilThis is a magical solution for fungal infections of all sorts! Tea Tree Oil is a natural oil that has an excellent drying and purifying effect. Apply the oil or tea tree ointment to the affected area and leave you feet in the open for a few minutes until it absorbs. It is recommended to apply the oil after you shower to maximize the absorption into your skin. If the smell or strength of the oil bothers you, you can add it to a lotion or other scented oils. Other essential oils that work great are garlic oil and oregano oil.

Use Hydrogen PeroxideAlthough this ingredient may seem scary, a mixture of hydrogen peroxide and water is one of the most effective home remedies for fungal infections. When you have a foot bath, add a bit of hydrogen peroxide into the warm water and soak for about 15-20 minutes. You can also rub the mixture onto the affected area, but do so carefully and with gloves on. If your skin is sensitive to the hydrogen peroxide, it is recommended to use the essential oils instead that are a bit gentler on the skin
.

Saturday, August 22, 2015

பல்


பல் துலக்கப் பற்பொடி

சாக் பவுடர் - 1 கிலோ 
பொரித்த படிகாரம் - 1 கிலோ
இந்துப்பு - 1/4 கிலோ

இவைகளை தனித்தனியே அரைத்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். அவ்வளவு தான்.


தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் உயிருள்ளவரை பாது காக்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
தந்த ரோகம் – பல்பொடி
அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .
1 – சுக்கு
2 – காசுக்கட்டி
3 – கடுக்காய்
4 – இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருங்காலி மரத்திலிருந்து உருவா கும் ஒரு வகை பிசின், சீகை காசிக் 
கட்டி என்றுஅழைக்கப்படுகிறது. இத னை தனியாகவோ அல்லது இதனு 
டன் சில மருந்துப் பொருட் களைச் சேர்த்தோ பல்சார்ந்த குறைபாடுக 
ளுக்கு மிகச் சிறந்த மருந்துகளைத் தயார் செய்யலாம். கீழே சொல்லப் 
படும் மருந்தை பல்பொடியாக உப யோகித்து வர அதி அற்புதப் பலனை 
உடனே பெறலாம்.

சீமை காசிக்கட்டி, சுக்கு, மிளகு, கடு க்காய், நெல்லிக்காய், தான் றிக்காய், 
கிராம்பு, படிகாரம், வாய் விளங்கம், தாளிசபத்திரி, மாசி க்காய், கருவே 
லம்பட்டை, ஆலம் பட்டை, வேப்பம்பட் டை ஆகிய அனைத்தையும் 100 
கிராம் அளவு எடுத்துக்கொண்டு ஒன் றாகக் கல ந்து தூள் செய்து 
கொள்ளவும். இதை பல் பொடி போன்று உபயோகித்து வர பல் வலி, பல் 
கூச்சம், ஈறுகளில் உண்டாகும் வலி, ஈறுகளில் உண்டாகும் ரத்தப் போக் 
கு, பல் அசைவு போன்ற குறை பாடுகள் நீங்கி பற்கள் முத்துபோல் 
ஜொலிக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++
பல் வலிக்கு இயற்கையான தீர்வு..!!
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. 
இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படிக் குறைப்பதென்று 
தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். 

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக 
கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் சிட்டிகை மிளகு தூள் கலந்து, 
பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான 
நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து 
பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் 
மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் 
வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை 
தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் 
உபயோகமான மருத்துவ மூலிகைகள்.
பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை 
உபயோகிக்கலாம்.
திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, 
மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். 
இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்
நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக 
காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட 
வேண்டும். மாவு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்


Friday, August 21, 2015

Sunday, August 16, 2015

ஏன் எப்படி


உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
நிவாரணம்: 
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
நிவாரணம்: 
போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
நிவாரணம்: 
எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
நிவாரணம்: 
குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
நிவாரணம்: 
அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
நிவாரணம்: 
ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
நிவாரணம்: 
அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
நிவாரணம்: 
வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
நிவாரணம்: 
பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
நிவாரணம்: 
தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
நிவாரணம்: 
கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
நிவாரணம்: 
இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
நிவாரணம்: 
உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
நிவாரணம்: 
உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
நிவாரணம்: 
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com
17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
நிவாரணம்: 
மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
நிவாரணம்: 
நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்

Saturday, August 8, 2015

வாதம், வலிப்பு

திருஞானசம்பந்தர் திருவாசி என்றழைக்கப்படும் திருப்பாச்சிலாசிரமத்தை வந்தடைந்த பொழுது  அந்நாட்டு மன்னன் கொல்லிமழவன் என்பவன் தன்மகள் அழகுப்பதுமையாகத் திகழ்ந்தும்  முயலகன் 
(coma) என்னும் நோயினால் பீடிக்கப்பட்டது கண்டு மனம் வருந்தி "பாலசுந்தரி உடனுறை மணிகண்டீசர் "
 முன்பு அவனே துணை எனத் தன்மகளைக் கிடத்தி வைத்தான் .

தன்நகர் நோக்கி ஞானசம்பந்தர் வருவது கேட்டு தன் பரிவாரங்களோடு எதிர் சென்று வரவேற்றான் மன்னன் கொல்லிமழவன் .

மன்னனின் வரவேற்பை மகிழ்வுடன் ஏற்று கோவிலுக்கு சம்பந்தர் சென்றார் . அங்கு ஆண்டவன் முன் உணர்வற்றுக் கிடக்கும் பெண்ணினைக் கண்டு பெருங்கலக்கமுற்றார் .மன்னனின் மூலம் விபரமறிந்து "மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு "எனப் பாடி  அருளினார். பதிகத்தின் கடைசி பாடலைப் பாடி முடித்தபோது உறங்கி எழுபவள் போல் அவ் உத்தமப்பெண்  எழுந்து தந்தையிடம் சென்றாள் . மன்னரும் மற்றவரும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர் .

இன்றும்  இங்குள்ள  நடராஜப் பெருமானின் காலடியில் முயலகன் என்ற அரக்கனுக்குப் பதிலாக பாம்பு இருப்பதைக் காணலாம் . திருவாசி எனப்படும் இத்திருத்தலம் திருச்சி பிக்ஷாண்டார் கோயில் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 5 கி .மீ . தொலைவில் உள்ளது .

நரம்புத் தளர்ச்சி தொடர்பான நோய்கள், வாதம், வலிப்பு போன்ற நோய்கள் குணமாக ஞானசம்பந்தப் பெருமான் அருளிய இப்பதிகத்தினைப் பாராயணம் செய்யலாம் .

திருச்சிற்றம்பலம் 
************************************************************************************************************************************

திருப்பாச்சிலாச்சிராமம்

பாடல் எண் : 1

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே. 

பொழிப்புரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

குறிப்புரை :

தவறிழைத்த தண்மதியைத் தலையிற்சூடி விடத்தை அமுதுசெய்த பெருமானோ இவள் வாட மயக்குவது என்கின்றார். துணி - கீறு. பணி வளர்கொள்கையர் - பாம்புகள் வளர்வதைக் கொள்ளுகின்ற திருக்கரங்களையுடையவர். பாரிடம் - பூதம். ஆரிடமும் - ஏற்பார் ஏலாதார் என்கின்ற வேறுபாடில்லாமல் எல்லாரிடமும். மங்கை என்றது கொல்லிமழவனது மகளை.

பாடல் எண் : 2

கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள்
தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் ளிவரென்ன
அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
இலைபுனைவேலரோ வேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பொழிப்புரை :

மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர் செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?

குறிப்புரை :

இறைவனது கலை, ஆடை, கண் முதலியன இவை என உணர்த்தி, இவற்றையுடைய இவரோ இவளை இடர் செய்வது என்று வினாவுகின்றது. மானுரி புனைகலை. தோலுடை ஆடை, கனல்சுடர் இவர் கண்கள் என இயைக்க. கலை - மேலாடை. உடை ஆடை - உடுத்தலையுடைய ஆடை. இலை புனை வேலர் - இலைவடிவாகப் புனையப்பெற்ற வேலினையுடையவர். ஏழை - பெண்.

பாடல் எண் : 3

வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண்டுவர்பூண்பது வெண்ணூல்
நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து
மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ விவர்சீரே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?

குறிப்புரை :

உலகமெல்லாந்துஞ்சும் பிரளயகாலத்திருளில் தீயாடுவார், மாலைவேண்டுவார், வெண்ணூல் பூண்பர், நஞ்சடை கண்டர், ஆன்மாக்களாகிய நம்மை எளிவந்த கருணையால் நண்ணுவார் என்கின்றது. துஞ்சு இருள் - அண்டமெல்லாம் இறக்குங்காலமாகிய இருள். இருள் ஆடுவர் என இயைபுபடுத்துக. நெஞ்சிடமாக நம்மை நயந்து நண்ணுவர் எனவும் இயைக்க. ஆன்மாக்கள் தற்போதமிழந்து நம்மை நண்ணட்டும் ஆட்கொள்வோம் என்றிராது, சென்று பயன்படும் கால்போலத்தாமே வலியவந்து அணுகுவர் என்பதாம். மஞ்சு - மேகம். சிதைசெய்வது - வருத்துவது. இவர் சீர் - இவர் புகழ்.

பாடல் எண் : 4

கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் கனறரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?

குறிப்புரை :

கொன்றைமாலை விளங்க, பிறைக்கண்ணியை யணிந்து அழகாய புனிதர் இவர் என அறிவிக்கின்றது. கனமலர் - கார்காலத்து மலரும் கொன்றைமலர். கனம் - மேகம். தூமதி - ஒருகலைப் பிறையாதலின் களங்கமில்லாத மதி. இறைவன் அணிந்தமையின் தூமதி எனலுமாம். வனம் - அழகு./n இங்ஙனம் பிறர் உற்ற துன்பம் போக்குதற்கு அறிகுறியாகப் பிறையை அணிந்த பெருமான் ஒருபெண் வாட மயல்செய்வது மாண்பாகுமா என்று வினாவியவாறு. கனல் தரு - மதிக்கு அடை.

பாடல் எண் : 5

மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ விவர்சார்வே.

பொழிப்புரை :

மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?

குறிப்புரை :

அடியார்கள் ஆட்டும் பால், நெய் முதலானவற்றில் ஆடிக் கங்கையைச் சடைமேல்வைத்து மொந்தை முதலான வாத்தியங்கள் முழங்கப்பாடும் பூதகணநாதர் இவர் என்கின்றது. மோந்தை: மொந்தை என்பதன் நீட்டல்விகாரம். முதிர - ஒலிக்க. ஒருமாதைத் தலையில் வைத்த இவரோ இம்மாது வாடச் சதுர்செய்வது என நயந்தோன்ற உரைத்தவாறு.

பாடல் எண் : 6

நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பொழிப்புரை :

திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

குறிப்புரை :

அருளும் மறமும் உடையவர் இவர் என அறிவிக்கின்றது. நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி என்றது மறக்கருணை காட்டிச் சம்ஹரித்தலைச் சொல்லியது./n ஐவிரல் கோவணம் என்பது கோவணத்தினகலம் கூறியது. ஏழை - பெண். ஈடு - பெருமை.

பாடல் எண் : 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

பொழிப்புரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

குறிப்புரை :

நாகம், ஆமையோடு, பூணூல், கொன்றைமாலை புனைந்தவர் இவர் என்கின்றது./n ஏகவடம் - ஒற்றைமாலை. குழகர் - இளமையுடையவர். சதிர் - சாமர்த்தியம். இளமங்கையைப் பக்கத்தில் உடைய இவர் இவ்வாறு சதிர்செய்தல் ஆகாது என்பது குறிப்பு.

பாடல் எண் : 8

ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து
மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள்
யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ விவர்சேர்வே.

பொழிப்புரை :

அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?

குறிப்புரை :

அண்டினாரைக் காத்து மிண்டினாரை அழிக்கும் பெரு மையர் இவர் என்கின்றது. ஏ வலத்தால் - அம்பின் வலிமையால். ஈடு - வலிமை. `இராவணன் தன்னை` என்றும் பாடம்.

பாடல் எண் : 9

மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை
நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால்
ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ விவர்பண்பே.

பொழிப்புரை :

மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?

குறிப்புரை :

அயனும் திருமாலும் மேலும் கீழும் அறியாதபடி மயங்கச்செய்த பெருமான் இவர் என்கின்றது.

பாடல் எண் : 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

பொழிப்புரை :

நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

குறிப்புரை :

புறச்சமயிகள் புல்லுரை கொள்ளவேண்டா என உலக வர்க்கு அறிவுறுத்திப், பின்னர் ஆணோடு பெண் வடிவானவர் இவர் என்கின்றது./n நாணொடு கூடிய - நாணத்தோடு சேர்ந்த பிறவற்றையும். சாயினரேனும் - இழந்தவர்களாயினும். நகுவர் - பரிகசிக்கத் தக்க வர்கள், ஆதலால் இருவேளை உண்ணுகின்ற அவருடைய அஞ்சத்தக்க சிரிப்பால் அவர்களைக் கொள்ளவேண்டா என முதல் இரண்டடிகட்கும் பொழிப்புரை காண்க. பெண்ணொருபாதியான பெருமான் ஒரு பெண்ணை வாடச் செய்யார் என்பது குறிப்பு.

பாடல் எண் : 11

அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.

பொழிப்புரை :

உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள்சாரா.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் வல்லாரை வினைசாரா என்கிறது. அகமலி அன்பு - மனம் நிறைந்த அன்பு. தகைமலி தண் தமிழ் - இன்றைக்கும் ஓதுவாரது நோய் தீர்க்கும் தகுதி வாய்ந்த தமிழ்.