Saturday, January 2, 2016

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி, வளையல், காதணி அணிவதன் தார்ப்பரியம்

கொலுசு, மூக்குத்தி, மோதிரம், அரைஞாண் கொடி, மெட்டி, வளையல், காதணி அணிவதன் தார்ப்பரியம்என்ன
வென்று ஒர் பதிவு
சாத்வீக உணவே ( சைவ உணவு) உடலுக்கு மருந்து ஆகும்நம் தமிழர் தமிழர்களுடைய பண்பு, கலாச்சாரம்) பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளைகொண்டிருப்பவைஅதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகஉருவானவை என்பதே உண்மை.நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கியவர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும்பராமரிக்கிறதுஎத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகனஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேயநாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும்இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமேஏற்றது.அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில்உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.அதாவது நமக்கு நோய்கள் உருவாவதைதடுப்பதற்கு மருந்துகளை
உபயோகிப்பதை
விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்லபயன் தரும்
தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்)நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில்அதுநமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.
கொலுசு அணிதல்
ஆரம்ப காலத்தில் நாம் எல்லோரும் கொலுசு அணிந்தோம். பின்னர் இடைப்பட்டகாலத்தில் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்டது. தற்பொழுது அதுமீண்டும் வழக்கத்திற்கு வந்ததுள்ளது. அதிலும் ஒற்றைக் காலில் கொலுசுஅணிவதுதான் பேஷன். பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம்,காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமிஇருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன்வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டைஅகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம்.குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும்குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும்கொலுசு அணிவிக்கப்படுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும்ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினைதொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும்உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்புபகுதியை ஸ்திரப் படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.
மெட்டி அணிதல்
்மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால்பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன்என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல்உள்ளது. முக்கியமாக கருப்பை நோய்களைகட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்திஎன்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டிஅவசியப்படுகிறதுகால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன்அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை ( நோய்களை) முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களதுஉடல் பிணிகளைக் ( நோய்களைக்) குறைக்கிறது.

அரைஞாண் கொடி அணிதல்
சிறு குழந்தையாக நாம் இருக்கையில் நமக்கு இடுப்பில் அரை நாண் கொடிஅணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப்பதன் முக்கியநோக்கமே உடலில் குருதி சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். மேலிருந்துகீழாகவும் கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும்சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறதுஅத்துடன் ஆண் பெண்மலட்டுத்தன்மையைநீக்கவும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் அரை நாண் கொடிபயன்படுகிறது.

மோதிரம் அணிதல்
விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சுதிறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில்அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளைஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும்உதவுகிறது. அதனால்தான், திருமணமோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறதுவிரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள்என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல்தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள்
ஏற்படும்.

மூக்குத்தி அணிதல்
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒருபழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு
குழந்தைகளுக்கு
மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களேமூக்குத்தி அணிய வேண்டும் .பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில்சில வாயுக்கள் காணப்படுகிறதுஇந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும்பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள்நிவர்த்தியாகும்.காற்றை வெளியேற்றுவதில்ஆண்களுக்கு வலப்புறமும்பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்வலது புறமாக சுவாசம்செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையானசுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. நமது மூளையின்அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள்உணர்ச்சி களை செயல்படுத்தும்இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்குஅதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில்குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில்குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளதுஇன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம்தான் அணிய வேண்டும்இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒருநிலைப்படுத்தபடுகிறது.நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள்மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாகஇருக்கும்இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்துகுளிர்ச்சி அளிக்கும். மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்புமணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும்ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள்,உள்ளச்சோர்வு ஏற்படாமல் மூக்குத்தி தடுக்கிறது.

காதணி அணிதல்
( தோடு அணிதல்)தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்தஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள்
காது குத்துதல் என்பதுதமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. உலோகம்,கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறதுகாது சோனையில்துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே மேலும்வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறுசரியாகும்.வளையல் அணிதல்
வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல்ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடுஅதிகரித்துள்ளதுவளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரைவளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்ததுஅதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில்வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்ததுஇந்த பாரம்பரியம் மிக்க நம் கலாச்சாரத்தை
நாம் தொடர்ந்து
பின்பற்றி வாழ்ந்தால்
நாமும் நம் சந்ததியினரும்
நோயின்றி வாழலாம்