Friday, April 29, 2016

புற்று நோய் Cancer

புற்று நோய்

"கான்சர்" என்கிற வியாதி முற்றிலும் குணமாக, வேதத்தில் மந்திரம் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது என்ன ?

வேதம் என்பது, ருக், யஜுர், ஸாம, அதர்வணம் என்று நான்காகக் கலியுகத்தில் வியாசர் பிரித்துக் கொடுத்திருக்கிறார். இதில் ரிக் வேதம்தான் மிகப் பழமையானது.

இது இந்திரனையும், அக்னியையும், சூர்யனையும் அதிகமாக ஸ்தோத்ரம் செய்கிறது. இதில் 10 மண்டலங்கள், 8 அஷ்டகம், 64 அத்யாயம், 1028 ஸூக்தங்கள், 10552 மந்த்ரங்கள், 85 அநுவாகங்கள் உள்ளன. இதில் மன்யு ஸூக்தம் (14 மந்த்ரங்கள்) என்பதை ஜபித்தால் சத்ரு உபத்திரவம் நீங்கி அனுகூலம் ஏற்படும்.

பவமான ஸூக்தம் (610 மந்த்ரங்கள்) ஜபித்தாலோ, இதைக் கொண்டு ஹோமம் செய்தாலோ, அப்படிச் செய்பவனுக்கு ஆயுள் கால பர்யந்தம் உள்ள பாவங்கள் ஒழியும். அடுத்த ஏழு ஜன்மங்களில் நல்ல குலத்தில் ஜனனம் ஏற்படும். வேத அத்யயனம் செய்பவனாகவும், கருவிலே திருவுடையவனாகவும் விளங்குவான்.

இந்த ரிக் வேதத்தில் கிலபாகம் என்று ஒன்று உள்ளது. இது ப்ரத்யங்கிரஸ் என்கிற ஸூக்தத்தில் உள்ளது. இதை பத்தாயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து, ஹோமம் செய்தால் "கான்சர்" என்கிற நோய் காணாமல் போய்விடும். மஹாராஷ்டிராவில் உள்ள பிராமணர்களில் ரிக்வேதிகள் பலர் உள்ளனர். நம் தேசத்தில் ரிக் வேதிகள் குறைந்துவிட்டனர்.

ஆக, கான்சர் உள்ளவர்கள் நன்கு அத்யயனம் செய்த ரிக்வேதிகளைக் கொண்டு, ப்ரத்யங்கிரஸ் ஸூக்தத்தில் உள்ள கிலபாகத்தை பத்தாயிரம் தடவை ஜபித்தும், அந்த மந்திரங்களினால் ஹோமம் செய்தும் நிச்சயம் பலன் அடையலாம். இது வேத வாக்கு.
++++++++++++++++++++++++++++++++++++
கொடிய புற்று நோய் வர்மக்கலை மூலமாக எளிமையான முறையில் குணமாகிறது
இதற்கு எந்த ஒரு மருந்தும் உட்கொள்ள தேவையில்லை,
இக்காணொளியை கவனமாக பார்த்து பின்பற்றினால் போதும்
நன்றி


https://youtu.be/VK7QZxibzew

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/VK7QZxibzew" frameborder="0" allowfullscreen></iframe>


+++++++++++++++++++++++++++++++++
புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

**சோற்று கற்றாழை 400 கிராம்

**சுத்தமான தேன் 500 கிராம்

**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை
------------------------

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்
----------------------------------------------

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
++++++++++++++++++++++++++++++++++
புற்றுநோயை குணப்படுத்தும் நித்தியகல்யாணி . . .
தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, முதலிய பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
மருத்துவ குணம் அதிகம் கொண்ட இதன் அறிவியல் பெயர், “கேதராந்தஸ் ரோசியஸ்’ ஆகும். சர்க்கரை வியாதி,மலேரியா, லுக்கேமியா எனும் ரத்த புற்றுநோய் போன்ற நோய்களுக்கு, சிறந்த மருந்தாக இருக்கிறது. இதிலிருந்து, “வின்பிளாஸ்டின், வின்கிறிஸ்ட்டின்’ எனும், இரு முக்கிய உயிர் வேதிபொருட்கள் தயாரிக்கப்படுகி
ன்றன.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் . . .
ஆல்கலாய்டுகள், வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine)
மனநோய்களை குணமாக்கும் . . .
இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.
புற்றுநோய்க்கு மருந்து . . .
இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். லுக்கேமியா மற்றும் லும்போமா புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் நித்தியகல்யாணியில் உள்ள ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமான வேதிப்பொருளாகும். ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.
நீரிழிவுநோய் கட்டுப்படும் . . .
நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
வருமானம் தரும் நித்யகல்யாணி . . .
நித்தியகல்யாணியின் இலைகளும், வேரும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செடி வளர்ந்து 6 வது,9 வது மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்கள் உழுது எடுத்துப் பதப்படுத்தி வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். நித்ய கல்யாணியின் இலைகள் அமெரிக்கா ஹங்கேரிக்கு ஏற்றுமதியாகிறது. இதன் வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.

++++++++++++++++++++++++++++
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.

எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு  முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.

சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது. அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை. இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது, அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
                                                                     – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார். இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை என்ற செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது. நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம். அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார், நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம். அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார், இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார். நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம் உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறியதோடு இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.

அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது. 2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார். இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.

ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.

மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில் அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1
நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.

இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.

நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம். வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.

கட்செவி : சித்த மருத்துவம்

வெண்டைக்காய்

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?
3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான 
வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக 
நீரிட்டுக்  கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் 
பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் 
துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் 
நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 
500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் 
கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.
காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வுமூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு 
ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் 
அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லதுதேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப்போக்கு ஆண், பெண்  இருபாலர்களும்),  இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டுதொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை 
வெளிவந்து வேதனை தணியும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து 
குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். 

இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.

8-10 வெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து, அதாவது 
கிடைவாக்கில் நறுக்கி, ஒரு கப் தண்ணீரில் போட்டு, சிம்மில் வைக்கவும். பசை போன்ற பதம் வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்துவிட்டு, அதில் ஐந்து துளிகள் லாவெண்டர் எண்ணெய் அல்லது புதினா எண்ணெயைக் கலந்து குளிர்ச்சியாகும் வரை அப்படியே விட்டுவிடலாம். இதை அப்படியே வடிகட்டி, அந்த நீரை மட்டும் பாட்டிலில் சேகரித்து ஹோம் மேட் ஹேர் கண்டிஷனராகதடவிய ஐந்து நிமிடங்களுக்குப் பின் கூந்தலை அலச, கூந்தல்  பளபளப்புடன் மென்மையாக இருக்கும்.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. வெண்டைக்காயை எப்படி திரவ வடிவில் எடுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

அது வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.




Monday, April 18, 2016

அணிகலன்

அணிகலன்களின் தத்துவங்கள்

சாதாரணமாக நாம் அணியும் “அணிகலன்” களில் ஆண்டவனை அறியும் – அடையும் வழிகளைச் சொன்னவர்கள் நமது ஆன்றோர்கள். அணிகளும், அணி கலன்களும் ஆடைகளும் புருசனாம் ஸ்ரீ பகவானை நினைக்க வைக்கும் நினைவு முத்திரைகள் ஆகும். அணிகலன்கள் கூறும் அர்த்தமுள்ள தத்துவங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து அறிவோமானால் அது பல தத்துவங்களை நமக்கு புலப்படுத்தும்.
மலர்கள்:
மலர்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துதான் பிறகு நாம் அணியவேண்டும், மலர்களைப் போல மானிடனும் பலப் பருவங்களை கடந்து இளமைப் பருவம் அடைகிறான், முடி நரைப்பது என்ற செயல் மானிடர்களக்கு மட்டுமே உண்டு, நரை வந்து விட்டால் துன்பமும் வரத்தொடங்கிவிடும். ஆகவே மலர் வாடும் முன் சமர்ப்பணம் செய்து விடுவது போலவே, இளமை முடிந்து முதுமைத் துவக்கத்தின் முத்திரையாம் நரை, நரை வரும் முன்பே மாந்தர்களே உள்ளம் என்ற மலரைப் பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் என மலர்த் தத்துவம் கூறுகிறது.

திலகம்:

நமது பாரத தேசத்து பெண்களின் அணிகலன்களுக்கு எல்லாம் அழகுகூட்டுவது குங்குமம் ஆகும், அதனால்தான் குழந்தைப் பருவத்தில் நெற்றியில் அஞ்சனத் திலகமும், பின் பருவம் மடைந்தபின் சாந்துப் பொட்டும், திருமணம் ஆனதும் மஞ்சள் குங்குமத் திலகமும் அணியப்படுகிறது. திலகம் இட்டுக் கொள்வதால் நெற்றியில் வசிப்பதாக வேதங்கள் சொன்ன அலட்சுமியினால் ஏற்படக்கூடிய தீமைகள் விலகி நீண்ட ஆயுளும் சகல பாக்யங்களும் பெருகும். சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமத்திலகமிட்டுப் பின்னர் தலையில் வகிடு தொடங்கும் பகுதியில் திலகம் அணிகின்றனர் அதுவே உச்சித் திலகம்.பிரமதேவனின் எழுத்தை அழிக்கும் திறன் கற்புத்தீயின் வடிவமான குங்குமத் திலகத்திற்கு உண்டு. சுமங்கலிப் பெண்கள் நிச்சயம் குங்குமத் திலகம் அணிய வேண்டும். 

திருமண்:

ஸ்ரீ வைணவர்கள் அணியும் திருமண்ணை சரீரத்தின் பன்னிரு உறுப்புகளில் அணியும் போது ஸ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்களைக் கூறியவாறு அணிவதனால் திருமண் அணிந்த நிலையை திருநாமம் என்றே அன்புடன் மனித குலம் அழைக்கிறது. திரு என்றால் ஸ்ரீமகா விஷ்ணுவையும் மண் என்றால் பூமியில் சேரப் போகும் சரீரத்தையும் குறிக்கும், நாம் ஜீவன் அந்தர்யாமியான ஸ்ரீ பகவானின் ஒர்அம்சம். தினமும் ஸ்ரீ பகவானின் திருநாமங்களைக் கூறியவாறு திருமண் அணிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அரிதான மானிடப்பிறவி வீணாகும் எனபதை கூறுகிறது திருமண் தத்துவம்.

திரு நீறு:
சரீரத்தின் பதினான்கு இடங்களில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும், திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் அணியும் போதும் சிவபொருமானுடைய ஐந்தெழுத்தை “நமசிவாய” என்னும் மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அதனால் திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயரும் அமைந்தது. சிவனின் உருவமான ஜோதியின் மறு உருவமே திருநீறு, திருநீற்றை நெற்றியில் இட்டால் விஞ்ஞான, அஞ்ஞான மருத்துவ ரீதியாகவும் பற்பல பலன்கள் கூறப்படுகின்றன. ” மனிதா உன் சரீரம் வாக்கு மனம் இம்மூன்றும் நிர்மலமாக , வெண்மையாக தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருநீறு அணிந்து கொள் என்கிறது திருநீற்றுத் தத்துவம்.

சந்தனம்:
சந்தனம் இயற்கையான தாவரத்திலிருந்து கிடைப்பது. அதன் நறுமனம் மிக ரம்மியமானது. சந்தனம் போல் நறுமண நற்குணங்களைக் கொண்டவனாக இரு என்பதை விளக்கிறது சந்தனத்தத்துவம்.

தோடு:

மாதர்கள் அணியும் ஆபரங்களுள் முக்கியமானது தோடு. ” தோடுடைய செவியன்” என்று 1ஆம் திருமுறையில் திரு ஞானசம்பந்தர் தோடு அணியும் சக்தியையும், சக்தியை இடப்பாகமாக கொண்ட சிவனையும் சேர்த்துப் பாடியுள்ளது தோடு மாந்தர்களின் கூற்றுக்கு உதாரணமாக தத்துவத்தை காட்டுகிறது.
” தேவா ரென்பர்தம் பாவையர்க் கன்று
காதோலைப் பாவித்த தயவாளர்” – மதுரை கலம்பகம் 29ம் பாடல்
சிவபொருமான் விஷத்தை உண்டு தேவமகளிரின் மாங்கல்யத்தை போன்ற காதோலையை காப்பாற்றிய தயாபரன் ஆனான் என்று குமரகுருபரர் கூறினார், பதிவிரதைகள் ஒருபோதும் தோடின்றி இருக்கக் கூடாது என்கிறது அருணா மோதினீ.எல்லா செல்வங்களைவிட சிறந்த செல்வம்செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர், அந்த செவிச் செல்வத்தை உணரும் உறுப்பணியும் அணிகலமே தோடு என்பதாகும், குருநாதனின் ஞான மொழிகளுடன் ஸ்ரீ பகவானின் திரு நாமங்களும் ஒன்றிணைந்து நம் செவியில் என்றென்றும் ஒலிக்க வேண்டும் , அப்போது சாதாரண செவி திருமகள் வீற்றிருக்கும் செல்வச் செவி ஆகும். 

மூக்குத்தி:

மூக்குத்தியதிலும் கல்வாழை விசிறி போன்ற மூக்குத்தி விசேஷச் சக்தி வாய்ந்தது. காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சானூர் அலமேலு, கன்னியகுமரி வாலையம்மன் இவ்வாறு எந்தத் தேவியரைத் தரிசனம் செய்தாலும் மூக்குத்தி இல்லாத அன்னையாக பார்க்கவே முடியாது. காரணம் தெய்வீக சுமங்கல ஆபரணங்களில் மூக்குத்தியும் மங்கல பொருள்களில் ஒன்று. சுவாசத்துடன் கலப்பது போல எல்லா நறுமணத்தையும் சுவாசம் செய்யும் போது ஸ்ரீபகவானுக்கு அர்ப்பணம் செய்வது போல நினைத்து விடு. இரு விழிப்பார்வைகளை நாசியில் செலுத்தி விடு. மனம் வாக்கு காயம் இம்மூன்றும் ஒருநிலைப்படுத்தி யோகம் செய் என்று மூக்குத்தி தத்துவம் கூறுகிறது. இக் கருத்தையே உட்கருத்துடன் கொண்டு செளந்தர்யலஹரி 61ஆம சுலோகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

கண் மை:
” குரு க்ரு பாஞ்சல பாயோ மேரே பாயி” என்ற பாடலில் சகோதரா குருதேவரின் அருள் நோக்கு என்ற கண் மை யை நீ அணிந்து கொண்டால்தான் பிறவி பூரணம் ஆகும் , எல்லா இடங்களிலும்ஸ்ரீ ராமனின் வடிவம் தெரியும் என்கிறார் கபீர்தாசர். “கருப்பு வண்ணனாயினும் அஞ்ஞான இருளை போக்கும் சிறந்த ஞான தீபம் ஸ்ரீ கிருஷ்ணபிரான் என்கிறது ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம். பக்தி என்ற கண்மையை அணிந்த பின் அஞ்ஞானம் என்ற இருள் அகன்று நீக்கமற எங்கும் கண்ணனின் வடிவமே தெரியும் என்பதை ” கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்கவே” என்கிறார் நம்மாழ்வார். கண்மை கூறும் அரிய தத்துவம் ” என்னை அணியும் போது இறைவனின் கருமை நீலத்திரு மேனியையும், அவர் தெய்வீக லீலைகளையும் நினைத்துக் கொண்டு அணிந்து கொள் அப்போதுதான் நமக்கு பிறவிப் பயன் கிட்டும்.

திருமாங்கல்ய நாண்:

திருமணத்தில் முக்கியமானது திருமாங்கல்ய நாண் கட்டுவதுதான். அதைத்தான் மங்களசூத்திரம் தாலி, மாங்கல்ய சரடு என்று பலவகையான அழைப்பார்கள். திரு என்றால் திருமகளை நினைவுபடுத்தும், மாங்கல்யம் என்பது ஆத்மாவின் நாயகனான இறைவனை நினைவு படுத்தும். மா- என்றால் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆத்மா என்று பொருள்
கலயம் என்றால் கலசம் – பாதுகாப்பு என்று பொருள். வடமொழியில் புருசன் என்றால் ஆத்மா என்று பொருள் , கணவன் தான் மனைவியினுடைய ஆத்மா என்பதால் தான் கணவனை புருசன் என்று அழைத்தார்கள்.
மாங்கல்யம் தந்த நாநே, மாங்கல்ய மந்திரத்தின் கருத்து – இதை உன் கழுத்தில் கட்டுகிறேன், செளபாக்கியவதியே நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக வாழ்ந்திருப்பாயாக என்பது தான் அதன் கருத்து.
மூன்று முடிச்சு என்பது மூன்று குணங்களையும் கடந்து விடச் சொல்கிறது. மற்றொரு தத்துவம் ” பெண்ணே உன் உடல் பொருள், ஆவி மூன்றுக்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று கணவன் கூறுவதாகக் கருத்து. பிறிதொரு தத்துவம் கணவன் பெரியோர்கள், தெய்வம் ஆகிய மூன்றுக்கும் கட்டுபட்டவன் ஆகஇருப்பான் என்பதற்கு நான் பொறுப்பு என்று கணவனே மூன்று முடிச்சு போட்டு உறுதி கூறுவதாக கருத்து.
திருமாங்கல்ய சரடின் நிறம் மஞ்சளாக இருக்க வேண்டியதன் தத்துவம் – மஞ்சள் நிறம் தெய்வீக நிறம், மஞ்சள் கிழங்கு மாங்கல்ய சரடு உடன் இணைத்து திருமணம் செய்விப்பதும் உண்டு. தீவினை என்கிற கிருமிகளை அழிக்கம் சக்தியின் வடிவம் தான் மஞ்சள். ஆடைகள்:
முடிவில்லாத சிவபிரானுக்கு திசைகளே ஆடைகள் ஆகும் என்கிறார் திருமூலர்,சிவபிரானார் திகம்பரமாக உள்ளார் என்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொல்கிறது. திக் – அம்பரம் – திசையாகிய ஆடை என்று பொருள்
அத்திசைகள் பகலில் வெண்ணிறமாகவும், இரவில் கருநிறம் உடையதாகவும், அந்திப்பொழுதில் செந்நிறமடைந்து செவ்வாடையாகவும் சிவபெருானுக்கு அமைகிறது. என்கிறார் நான் மணிமாலையில் குமரகுருபரர்
“ஆத்மாவிற்கு சரீரம் என்பது ஆடையைப் போன்றது என்றும் அவை நைந்து போன பின் ஆத்மா பதிய சரீரத்தை அடையும் என்றும் பகவத் கீதை அருளிகிறது.

வளைகாப்புத் தத்துவம்:
வளை என்றால் வட்டத்தையும் பாசம், பக்தி, சங்கு,அன்பு சக்கரம், சங்கம் போன்றவற்றையும் குறிக்கும், திருமணம் நடந்ததும், மணமக்களுக்கு கையில் காப்பு கட்டுவார்கள் பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும், அவளைக் காப்பேன் என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் காப்பு கட்டப்படுகிறது. காப்பேன் என்ற உறுதியுடன் காப்புக் கட்டப்பெற்ற கணவன் அன்புடன் வாழ்க்கை நடத்தினார் என்பதற்கு அடையாளமாக அம்மங்கை தாய்மை அடைந்து விட்டால் ஒரு குறித்த காலத்தில் சுமங்கலிப் பெண்கள் பலரும் கூடி வளையல்களை அணிவிப்பார்கள், இந்த செயலில் ஒரு மிகப் பெரிய தத்துவக் கருத்தே அடங்கி இருக்கிறது. ” பெண்ணே கணவனிடம் காட்டிய பாசத்தினால் உன்னை சுற்றி ஒரு வட்டம் நீயே இட்டுக் கொண்டாய், அதுவே தாய்மை ஆகும், வளைந்த நிலையில் உள்ள சங்கு சக்கர வடிவம் கொண்ட இந்த வளையல்களை தீர்க்க சுமங்கலியாக நாங்கள் உனக்கு வளையல் அணிவித்தல் என்ற காப்புச் செய்கிறோம். அந்த வளைகாப்புக்கு காரணமான ஸ்ரீமன் நாராயணனே உனக்கு பாதுகாப்பு என்று சுமங்கலிகள் வாழ்த்துவதைப் போலும் – பிறக்கப் போகும் குழந்தை ஆதியந்தம் இல்லா வளையல் வட்டம் போல் உனக்கு ஆதியந்தமில்லா பெரும் வழியைக் காட்ட ட்டும், என்று வளைகாப்புத் தத்துவம் சொல்கிறது.
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று திருவாசகத்தில் கூறியுள்ளதை போல பெண்ணே உன் கையில் அடைக்கலமான வளையல் உனக்கு எதை நினைவூட்டுகிறது தெரியுமா? உன்னை நம்பிப் பிறக்கப் போகம் குழந்தையைக் காப்பாற்றுவாய் அது போல் வட்டமான இந்த புவியை இறைவன் காப்பாறகிறான், என்கிறது.

வளைகாப்பு வளையல்
உலகம் பூஜ்ய வடிவம் அதைப் படைத்த இறைவனும் பூஜ்ய வடிவம், பூஜ்யம் என்பது ஆதியந்தமற்றது. வளையல் பூஜ்யத்தின் வடிவம் அதுபோல தாய்மையானது இன்பமும் பற்றும் இல்லாத பரிபூரண அன்பு நிலையான பூஜ்ய ரூபமாகும், வளை – காப்பு – அன்பினால் கிடைத்த மேலான ஐஸ்வர்யம் – அன்புக்கு ஐந்து ஞானேந்திரியங்கள் வலது கை விரல்களிலும் அடங்கிவிடும் என்பது கருத்து.

ஒட்டியாணம்:

குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்டும், ஞானம் கிடைத்தால்தான் பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய முடியும், யோகத்தின் முதல் படி அளவாக நடப்பது ஆகும். உணவில் உறக்கத்தில் உறவில் நடப்பதில் பேசுவதில் இப்படி எல்லா செயல்களிலும் அளவாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீமத் பகவத் கீதை அருளுகிறது. அறை என்றால் பாதி இடை, வயிறு என்று பொருள் தராசு முள்ளைப் போன்றது அரைஞாண் , சரீரம் பெருக்காது, மெலிந்து இருக்க வேண்டும் என்பதை அரைஞான் நினைவு படுத்தும் அளவுகோல் ஆகிறது.
யோகப்பயிற்சி செய், சரீரத்தை பாதுகாத்திடு, மீண்டும் மனிதப் பிறவி கிடைப்பது அரிது என்கிறது இந்த அரைஞாண்.
கொலுசு:
இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாடியுள்ளதைக் காணலாம், ” கீதம் தெய்வீக வடிவம்” நடை கூட தெய்வீகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் திருமகள் அவர்களிடம் குடியிருப்பாள், நிதானமாக நடந்தால் கொலுசிலிருந்து தெய்வீக ஓசை வரும், அந்த ஓசையை கேட்டதும், கணபதி, கந்தன், கண்ணன், ராமன், ஐயப்பன் போன்றவர்கள் குழந்தையாக இருந்து நடந்தால் வரும் கொலசின் ஓசையை போலவே உள்ளதே என்று சிந்தனை தெய்வீகமாக மாறிவிட வேண்டும், அப்போது நம் மனக் கண்ணில் அந்த தெய்வீக வடிவங்கள் தெரிய வேண்டும், என்பதே கொலுசு கூறும் கோபுரத்தத்துவம். மெட்டி:
திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம்உள்ளன.
மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான் மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது.

Sunday, April 10, 2016

பாகற்காய் பாகல்


பாகல் மருத்துவம்

இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். 

பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். 

பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். 

இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. 

இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். 

நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. 

நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.

இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். 

இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.

 இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.

பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.


உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்........

பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.

இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!

கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.

பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.

இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.

வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.
[10/4/2016] சித்தர் சடகோபால்: 



கோபால க்ருஷ்ணன். ஹ.
Gopala Krishnan.H,

Camp at 298, Nabb Rd, Tallahassee, FL 32317​


Door No.2-18, Plot No. B-18, TVS Nagar, 1st Floor, Hosur 635 110, India.
துன்பங்களுக்கு  மருந்து காலம் மெளனம்.