Monday, March 30, 2015

முருங்கை Moringa

முருங்கைக் கீரையின் மருத்துவ குணம்

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. 

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். 

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்: 

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. 

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற 

பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் 

முருங்கைக் காய் கை கண்ட மருந்து. 

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. 


முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். 

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. 


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள்: 

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது. 

ஈரபதம்-75.9% 

புரதம்-6.7% 

கொழுப்பு-1.7% 

தாதுக்கள்-2.3% 

இழைப்பண்டம்-0.9% 

கார்போஹைட்ரேட்கள்-12.5% 

தாதுக்கள்,வைட்டமின்கள், 

கால்சியம்-440 மி,கி 

பாஸ்பரஸ்- 70மி.கி 

அயன்- 7 மி.கி 

வைட்டமின் சி 220 மி.கி 

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்.

இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்.

+++++++++++++++++++++++++++++++++++++


முருங்கைக்காய்...!!

முடிந்த அளவில் முருங்கைக்காயை வாங்கி, சாம்பார், வறுவல், கூட்டு என்று செய்து சுவைத்து, அதன் ருசியுடன், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

வலிமையான எலும்புகள் :-
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை ஜூஸாகவோ அல்லது பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் :-
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஆன்டி-பயாடிக் ஏஜென்ட்டாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப் அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் :-
முருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்ட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

சுவாச பிரச்சனைகளை குணமாக்கும் :-
உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது :-
கர்ப்பிணிகள் முருங்கையை உணவில் சேர்த்து வந்தால், பிரசவம் எளிதாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் முகிகிய காரணம். மேலம் இதனை பெண்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

நோய்த்தொற்றுகள் :-
முருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

செரிமானத்திற்கு உதவும் :-
முருங்கைக்காய் மற்றும் இலைகளில், செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் தான் செரிமான மண்டலத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பை உடைத்து எளிதாக வெளியேற்றும்.

பாலியல் ஆரோக்கியம் :-
முருங்கைக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்துத்தள்ளல் போன்றவற்றை குணப்படுத்தி, விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும்.
----------------------------------------------------------------------
ஏழைகளின் சத்துக்கூடம் முருங்கைக்காய்! முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை என எல்லாமே பயன்படக்கூடியவை. சத்துமிக்கவை. அதனால்தான் வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்பதால் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் முருங்கை, ஏழைகளின் உணவில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் கவனிக்கத்தக்க ஒன்று, ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் முருங்கா, முருங்கை என்ற சொற்களாலேயே இது சுட்டப்படுகிறது. இதன் உயிரியல் பெயர் முருங்கா ஓலிஃபேரா. பெளத்த இலக்கண நூலான வீரசோழியம் முருங்கா என்னும் சிங்களச் சொல்லிலிருந்து முருங்கை எனும் சொல் தமிழில் வந்திருப்பதாக சொல்கிறது.
முருங்கைக்காயில் உள்ள முக்கிய சத்துக்கள்
100கிராம் முருங்கைக்காயில் 88.20 கிராம் நீர்ச்சத்து உள்ளது. வறட்சியான பகுதிகளில், அதிக அளவு நீர் தேவைப்படாமல் வளரும் முருங்கையில் அதிகளவு நீர்ச்சத்து பொதிந்துள்ளதை அறிந்துதான் மனிதர்கள் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கக்கூடும். அடுத்து இந்தக் காயில் கார்போஹைட்ரேட் 8.53 கி, புரதம் 2.10கி, நார்ச்சத்து 3.2கி ,கொழுப்பு 0.20 கி அளவில் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,சோடியம், ஜின்க், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளன.
தமிழர் சமையலில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முருங்கைக்காய் இடம் பிடித்திருக்கின்றது. பழந்தமிழ் இலக்கியங்களில் இந்தக் காய் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதால் இலக்கிய குறிப்புகளின்படி முருங்கை இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கலாம் தற்காலிக முடிவுக்கு வரலாம். எங்கிருந்து வந்திருந்தாலும் முருங்கையில் உள்ள சத்துக்களை குறைத்து மதிப்பிட முடியாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Murungai Kai and Lord Muruga – Origin of Drumstick 


Murungai Kai, Moringa Oleifera or Drumstick, is associated with Lord Muruga. It is the vegetable of Muruga, son of Shiva. Muruga is also known as Skanda, Shanmugham, Subrahmanya and Kartikeya. He is the commander of the army of devas. He is also the most handsome god and associated with virility.

The widespread belief is that Murungai Kai was given to all living beings on earth by Muruga. The vegetable gets its name from Murugan and Kai. Kai means vegetable. It is the vegetable that appeared from the hand of Muruga.

Drumstick has numerous medicinal uses. It is believed that Murungai Kai helps in strengthening of the sexual organs.
++++++++++++++++++++++++++++
Health Benefits Of The Drumstick Plant (Sahjan)

Drumstick plant or Moringa oleifera also known as Sahjan in Hindi is a very common vegetable in India. But most of us are unaware about the amazing health benefits of this plant. It is known all over the world for its nutritious leafy-greens, flower buds, and mineral-rich green fruit pods.

NUTRITIONAL FACTS

-Moringa greens (leaves) are an excellent source of protein. 100 g of fresh raw leaves contain 9.8 g of protein.

-Fresh pods and seeds are rich in oleic acid and vitamin C.

-It is and one of the richest source of  vitamin A.

-The greens as well as pods also contain good amounts of many vital B-complex vitamins such as folates, vitamin B6 (pyridoxine), thiamine (vitamin B-1),   riboflavin, pantothenic acid, and niacin.

-The greens (leaves) are one of the finest sources of minerals like calcium, iron, copper, manganese, zinc, selenium, and magnesium.

HEALTH BENEFITS

Here are some of the surprising  health benefits of this plant:

1 . Regulates Blood Sugar Levels

Drumstick contains 18 amino acids which helps in treating many diseases. One important use is its anti-diabetic property. The methanol extract of leaves of Moringa oleifera was evaluated for its anti- diabetic efficacy. Use it in your regular vegetable soups to gain its benefits.

2 . Relieves Joint Pains

Charaka has also mentioned it as a plant source for oil. Due to its medicinal benefits and analgesic effects, Moringa is the primary ingredient in many Ayurvedic pain relief oils.

3 . Boosts Memory And Concentration

The presence of glutamic acid in drumsticks helps to prevent ammonia intoxication. It is also an active neurotransmitter substance which in turns helps your memory and learning capabilities. Add drumstick to your dals so that the necessary nutrients flow into the dal while boiling.

4 . Improves Fertility

Moringa can also prove beneficial in improving fertility. Recent research suggests that regular use of moringa is known to boost the sperm count and improve the quality of sperm in males. It also acts as a neurotransmitter and is involved in hormone production. Use moringa leaves in your mint or coriander chutney and add some garlic for the flavor.

5 . Helps Clear Acne

Moringa is known for its purifying properties. The moringa leaf extract and oil can treat severe acne. The oil purifies the skin and helps to rejuvenate it. Moringa can be had with your regular vegetables as a simple gravy dish cooked with mustard sauce.

6 . Promotes Tissue Growth 

Moringa is beneficial for infants and adults alike. It contains Histidine which is used to form histamine a neurological compound released during allergic responses.  It is used for growth and for the repair of tissue.

7 . Kills Intestinal Worms

The flowers of moringa help to get rid of any worms that may be present in the intestine. You can make delicious pakoras with the drumstick flowers and enjoy with any sauce of your choice.

8 . Aids In Healthy Pregnancy

The drumsticks are packed with proteins, vitamins, minerals, anti- oxidants and all these nutrients that are vital for the growing baby.


In Sanskrit, this plant is known as Shobhanjana which means a very auspicious tree. So, go ahead and add this vegetable in your dietary regimen and reap the countless health benefits that it has to offer.


Thursday, March 26, 2015

கிராம்பு

கிராம்பு மருத்துவ குணங்கள்:-
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் 
மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து 
படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட 
ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி 
சரியாகும்.
* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

Monday, March 23, 2015

Health Benefits of Drumming

Evidence-Based Health Benefits of Drumming
Drumming has been proven in human clinical research to do the following six things:
  1. Reduce Blood Pressure, Anxiety/Stress: A 2014 study published in the Journal of Cardiovascular Medicine enrolled both middle-aged experienced drummers and a younger novice group in a 40-minute djembe drumming sessions. Their blood pressure, blood lactate and stress and anxiety levels were taken before and after the sessions. Also, their heart rate was monitored at 5 second intervals throughout the sessions. As a result of the trial, all participants saw a drop in stress and anxiety. Systolic blood pressure dropped in the older population post drumming.  
  2. Increase Brain White Matter & Executive Cognitive Function: A 2014 study published in the Journal of Huntington's Disease found that two months of drumming intervention in Huntington's patients (considered an irreversible, lethal neurodegenerative disease) resulted in "improvements in executive function and changes in white matter microstructure, notably in the genu of the corpus callosum that connects prefrontal cortices of both hemispheres."[ix]The study authors concluded that the pilot study provided novel preliminary evidence that drumming (or related targeted behavioral stimulation) may result in "cognitive enhancement and improvements in callosal white matter microstructure."
  3. Reduced Pain: A 2012 study published in Evolutionary Psychology found that active performance of music (singing, dancing and drumming) triggered endorphin release (measured by post-activity increases in pain tolerance) whereas merely listening to music did not. The researchers hypothesized that this may contribute to community bonding in activities involving dance and music-making.
  4. Reduce Stress (Cortisol/DHEA ratio), Increase Immunity: A 2001 study published inAlternative Therapies and Health Medicine enrolled 111 age- and sex- matched subjects (55 men and 56 women; mean age 30.4 years) and found that drumming "increased dehydroepiandrosterone-to-cortisol ratios, increased natural killer cell activity, and increased lymphokine-activated killer cell activity without alteration in plasma interleukin 2 or interferon-gamma, or in the Beck Anxiety Inventory and the Beck Depression Inventory II."
  5. Transcendent (Re-Creational) Experiences: A 2004 study published in the journalMultiple Sclerosis revealed that drumming enables participants to go into deeper hypnotic states,[xii] and another 2014 study poublished in PLoS found that when combined with shamanistic instruction, drumming enables participants to experience decreased heartrate and dreamlike experiences consistent with transcendental experiences.
  6. Socio-Emotional Disorders: A powerful 2001 study published in the journal Evidence-Based Complementary and Alternative Medicine found that low-income children who enrolled in a 12-week group drumming intervention saw multiple domains of social-emotional behavior improve significantly, from anxiety to attention, from oppositional to post-traumatic disorders.
Taking into account the beneficial evolutionary role that drumming likely performed in human history and prehistory, as well as the new scientific research confirming its psychosocial and physiological health benefits, we hope that it will be increasingly looked at as a positive medical, social and psychospiritual intervention. Considering the term recreation in its root etymological sense: re-creation, drumming may enable us to both tap into the root sense of our identity in the drumming-mediated experience of being joyous, connected and connecting, creative beings, as well as find a way to engage the process of becoming, transformation and re-creation that is also a hallmark feature of being alive and well in this amazing, ever-changing universe of ours.

New to drumming and want to try it? 

Fortunately, drum circles have sprouted up in thousands of locations around the country spontaneously, and almost all of them are free. You will find them attended by all ages, all walks of life and all experience levels. The best way to find one is google the name of your area and "drum circle" and see what comes up. Also, there is an online directory that lists drum circles around the country: http://www.drumcircles.net/circlelist.html  

நோய்க்குக் காரணம்

நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..! இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?

மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.

நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசி வெளியேறி விடுகிறது. அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.

தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.

இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மை யைப் பொறுத்தும், அவைதேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது. நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது. நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது. இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட் களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.

நோய்க்குக் காரணம் உடலில் தேங்கி யிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவொரு நியாயமான சந்தேகம். எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர். டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.

1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர். டிப்தீரியா என்பது தொண்டையைப் பாதித்து, அதன்பின் உயிரையே குடிக்கும் ஒரு கொடிய நோய். இந்த நோயில் காணப்படும் கிருமிகளை ஹிண்டர் தனிமைப்படுத்தி வளர்த்தார். இலட்சக்கணக்கான இந்தக் கிருமி நீர், பால், உணவு ஆகியவற்றில் கலந்து ஆரோக்கியமான பலருக்கு உண்ணக் கொடுத்து வந்தார். ஆனால் ஒருவர்கூட டிப்தீரியா நோயினால் பாதிக்கப்படவில்லை. அவர் செய்த மற்றொரு ஆராய்ச்சி இன்னும் புதுமையானது. இதே கிருமிகளைச் சிலருடைய உள்நாக்கு, தொண்டை மற்றும் மூக்கின் உட்பாகம் ஆகியவற்றில் நேராகவே தடவி விட்டார். இப்போதும் எவரும் நோயால் பாதிக்கப்பட வில்லை. நுண்கிருமிகளே நோய்க்கான காரணமென்றால் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவராவது பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.

இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்கு வது என்ன? நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவ தில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலு இழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும்.

இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம்.

“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்” என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்கள் செயல்முறையில் அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.

இயற்கை மருத்துவ முறைகளே ஜீவசக்தியை வலுப்பெற செய்யும் என்பதனை நாம் புரியாதவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான். இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை. என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிகின்றோமோ அன்றுதான் நமக்கு உண்மையான உடலின் இயக்கத்தில் நம்பிக்கை வரும். அன்றே உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும். அன்று தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்துகொண்டுள்ளேன். புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.

மேலும் கிருமிகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் பற்றி அறிய... கீழ் உள்ள “உடலின் மொழி” என்ற புத்தகத்தில் அத்யாயம் 13 கதை கதையாம் காரணமாம் மற்றும் அத்யாயம் 14 சான்றோர்களும் சான்றுகளும் என்ற இந்த இரு அத்யாயங்களிலும் தெளிவான விளக்கங்கள் உள்ளன. படித்து பிடித்தால் மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

கீழ் உள்ள லிங்கில் சென்று “உடலின் மொழி” புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். நன்றி.

http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html

NEW UPDATE :

இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று disposable syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது. இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி DISPOVAN, இவர்கள்தான் இன்று அதிக அளவில் disposable syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள்.
இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Bladeகள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette.
இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது. இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என்ன கடமை.

Monday, March 16, 2015

காது / மூக்கு / தொண்டை / Ear / Nose / Throat



நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?
நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் 
உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் 
தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் 
படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு 
என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு 
என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும்உடல் 
உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.
---------------------------------------------
காதில் நுழைந்த பூச்சி..!! எடுப்பது எப்படி.......?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்
------------------------------------------------------------------------------------


‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?
என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.
தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க
-------------------------------------------------------------------------
காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது.
இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. . காது வலி வந்தால்: 


தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.
தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். 

தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். 

கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி 
குறையும்.
சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சலும் அகலும். 

கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.
-------------------------------------------------------------------------------
தொண்டைப்புண், தொண்டைவலிக்கு
1. சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதிகஞ்சியில் பனங்கல்கண்டு., வெண்ணை அல்லது நெய் சேர்த்துச் சூடாகக்குடிக்கவும்.
2. சின்ன வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வதக்கிப் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
3. தூது வளைக்கீரையை ஆய்ந்து எடுத்து நெய்யில் வதக்கிச் சாப்பிடவும்.
4. சித்தரத்தை, மல்லி, சுக்கு அல்லது இஞ்சி சேர்த்து வரக்காப்பி குடித்தாலும் தொண்டைக்கு நல்லது.
5. மணத்தக்காளிக் கீரையை, அரிசி கழுவின தண்ணீரில் வேகவைத்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், சின்னவெங்காயம் அரிந்து சீரகத்துடன் தாளித்து ஊற்றவும் . இது மணத்தக்காளி மண்டி எனப்படும்.
தொண்டைவலிக்கு கைகண்ட மருந்து.
6. நாமக்கட்டியை வெந்நீரில் இழைத்துத் தொண்டையின் வெளிப்புறம் தடவுவது நல்லது.
7. சுடாக்கிய தேங்காய் எண்ணையில் சூடத்தைப்போட்டு அந்த எண்ணையைத் தொண்டையின் வெளிப்புறம் தடவுவதும் உண்டு.
8. தும்பைப்பூவில் பதினைந்து எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணையை தலையில் அழுத்தித் தடவுவார்கள்.

9. மணத்தக்காளி இலைகளை ஆய்ந்து எடுத்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் நிச்சயமாக தொண்டைப்புண் ஆறும்.