Monday, March 16, 2015

தயிர்

தயிர் என்ன வெல்லாம் செய்யலாம்..?
1.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4.
குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5.
பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6.
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7.
‌‌யிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8.
பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி  வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11.
பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15.
தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16.
வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18.
மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி,  கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20.
தயிருடன் வெல்லம் சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.


தயிர் விட மோராக சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.
முகத்தில் தடவி சிறிது நேரம் கழிந்து முகத்னத கழுவுங்கள் முகம் சுறுக்கம் இல்லாமல் பழபழப்பு தன்மை கொடுக்கும்
தயிரை தலையில் தேய்ப்பதால் ஜலதோஷம் வரும், மற்றும் சளி பிடிக்கும், என்பது ஒரு சிலர் கருத்து. இது பற்றி உங்கள் கருத்து?
 தயிர் நல்லதல்ல. மோரே நல்லது. நிறைய மருத்துவப்பயன்கள் வாய்ந்தது. தயிர் எளிதில் ஜீரணமாகாது. உடலை உஷ்ணமாக்கும். அதனால்தான் இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள். கொழுப்பு களைந்த மோர் உடலை குளிர்ச்சியாக்கும். மூலத்திற்க்கு மருந்து மோர். கொலஸட்ராலைக் குறைக்கும். கேஸட்ரைட்டீஸை குணமாக்கும். இன்னும் பலபல பயன்கள். தயிர் கொலஸட்ராலைக்கூட்டும்.


No comments:

Post a Comment