Sunday, March 27, 2016

Pain Relief


clothespin ear reflexology chart

Sunday, March 20, 2016

குங்குமம் பொட்டு

கணவரை இழந்த பெண்கள் நடு நெற்றி வகுடு பொட்டு வைக்க கூடாது ஏன்?

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நாம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது . அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் அங்கே பொட்டு வைபோம்.

இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்ப்பரதாய முறை , ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறககு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அது தான் நடு நெற்றி வகுடு , இந்த இடத்தில தினமும் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரபிகள் தூண்டபடுகிறது.
பெண்களுக்கு நெற்றி வகுடுவில் தினமும் தொடுவதால் அவர்களுக்கு அடி வயற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டபடுகிறது. அதே போல் கர்ப்பபையும் வலு பெறுகிறது . திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வமும் கர்ப்பபை வலு பெறவேண்டும் என்பதற்காக தான் நெற்றி வகுடுவில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைதுள்ளனர்.
மேலும் சீமந்தம் , ஐந்து அல்லது எழாவது மாதம் வளைகாப்பு வைத்து செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள், இதனால் கர்பப்பை வலுபெறுகிறது .கர்பப்பை வலுபெற்றால் குறை பிரசவம் உண்டாகாது . நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும் .
ஆனால் கணவரை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்ட படாமல் இருபதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடுவில் உள்ள பொட்டை வைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சென்றனர். ஆனால் பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல் பொட்டே வைக்க கூடாது என்று மாற்றி விட்டனர் , ஆனால் இருபுருவ மத்தியில் உள்ள பொட்டு ஆண் பெண் எல்லோரும் எல்லா நாளும் வைக்கலாம்..
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்  

பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது. 

இதில் பல அதீத விசயங்களை குறிப்பிட்டுள்ளேன். நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை(புருவமத்தி என்றும் அழைக்கப்படும்) நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும். இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள். எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்  

பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள்.மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN)(DU AND REN மெரிடியன்களைப் பற்றி பின்னொரு கட்டுரையில் காண்போம்)பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து. `ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள். இந்த ஆக்கினைச் சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம்(PHYCHIC ATTACKS&EVIL SPIRITS ATTACHMENTS)போன்றவற்றையும் செயல்படுத்த முடியும். 

மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும்,வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் 

 ஆக்கினைச் சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

 எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும் 
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம்.நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும்(சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது. 
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது. 

மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்.இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.. 
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும்.தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும் (T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை (MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது. இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன் (ESTROGEN) சுரப்பையும் நிர்ணயம் செய்யும். 

ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை(MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும். ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன. 

தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின் விளைவுகள் என்னென்ன என்று இங்கு சொல்லாமல் விடுகிறேன். எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள், ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது. இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும் காப்போம்.
நன்றி :- http://machamuni.blogspot.in/

Thursday, March 10, 2016

நாயுருவி / நாவுருவி

நாயுருவி  (Achyranthes aspera) 

* * * * * * * * * * * * * * * * * * * * * * *   
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.

கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.

எல்லா இடங்களிலும்  தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.

நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும்.  இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த  வழிதான் இது. 

இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி  என மூன்று வகைகள் இருக்கின்றன.  இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது.  கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில்  மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும்  என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள். 

சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது,  பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு  கல்லுருவி என்றொரு பெயருமுண்டு. 

இந்த செடியின்  வேரை வாயினுள் சில மணி நேரங்கள்  வைத்து இருந்தால்  நா வன்மை பெருகுமாம்.  நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி  நாயுருவி ஆகி இருக்கலாம்..

நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.  மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின்  பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும். 

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன்  கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச்  சேர்த்து  பற்பொடியும் தயாரிக்கலாம்.) 

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால்  கறைகள் இல்லாமல், பற்கள்  பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என  வாய்  சம்பந்தப்பட்ட அனைத்து  நோய்களையும், நீக்குவதுடன்  பற்களை  பளபளவென மின்னச் செய்யும்.

நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம்  அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும். 

முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு  வசிய மூலிகை என்றும்   கூறலாம்.

மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை  மருத்துவ  மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள்  அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல்,  அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர். 

சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய்  குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த  நாயுருவி. 

மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள்,  வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை,  நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும். 

மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு  போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.

இதன் விந்தையான குணத்தால்  சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து,  காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.

மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர,  உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.  

நாயுருவி இலையை வதக்கி  மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம்  இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள  மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.   

உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து. 
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.

இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.

ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!

ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை. 

மக்கள் நலனிற்காக  தன்னை முழுவதுமாக   அர்ப்பணிக்கும்  இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.

தேன், தேனும் லவங்கமும், லவங்க பொடி,

தேனும் லவங்கப் பட்டையும் .......... உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

**அற்புத மருந்து இதோ!**
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**

2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

**வாயு தொல்லை**இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

**எதிர்ப்பு சக்தி வளரும்**
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

**அஜீரணம் ** 
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

**நீண்ட ஆயுள்**
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.

**முகப்படுக்கள் அடியோடு மறைய!**
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

**எடை குறைய வேண்டுமா?**
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.

அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

**புற்று நோய்க்கு அருமருந்து**
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

**அயர்ச்சி**
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

**வாய் துர்நாற்றத்தை போக்க!**
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.

**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**
தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து வர காது மந்தம் போய்விடும்.

Sunday, March 6, 2016

நெய் Ghee

நெய் சேர்ப்பதன் பயன்கள்
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம் பெற விளக்கங்கள் கீழே. 

• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். 

• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. 

• வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும். 

• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது. 

• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

• விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும், 

•  உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறலாம்.


++++++++++++++++++++++++++++++++++++++++
BENEFITS OF GHEE
 

Ayurveda, Knowledge of Life has, described the numerous effects of ghee…
1. Action On the Brain

Brain is one of the main sites that ghee acts. Only Fat Soluble substances and alcohol soluble substances can cross the blood brain barrier. Ghee is a fat. Hence it can cross the Blood Brain Barrier. Ghee acts on the brain and increases the receptive power, cognitive power, remembering power. Brain development takes place mostly during the childhood. So giving 1 teaspoon of ghee everyday especially during this age, will enhance the intellectual power of brain. The effect is multiplied a 100 times if medicated ghee like Brahmi Ghritam, Saraswata Ghritam etc is used.
Wonderful effects have been seen in children whose mile stones of development was retarded. In Brain development retarded cases ghee like Kalyanaka, Paishachika, Brahmi Ghrita brings good results. If given in normal children, it will enhance the growth of brain, thus making, child sharper, smarter and with good memory.
Ghee also has immense effects on the psychatric complaints. People with psychatric complaints like mood disorders, schizoprenia etc have good results with Kalyanakam, Paishachika, Maha Kalyanakam, Mahapaishachikam Ghritam etc depending on condtion of patient.

2. Action on the metabolic pathways

Ghee is said be Agni Vardhaka. Agni is that factor which does bio-chemical transformations in body. It may be hormones, enzymes or co-factors. Daily taking 1 teaspoon of ghee on empty stomach in normal healthy state will result in proper production of Agni, thereby making the bio-chemical transformations proper.

3. Action on immunity

Ghee is said to be Bala Vardhaka. Bala is the resistance power of a person. When ghee is given to a person, his immune power increases thereby preventing him from common colds and other diseases. This has especially been seen when Indukantham, Amruthaprasham Ghritam etc is given.

4. Action against allergy

Ghee is a best anti-allergic substance. It has been found that people who were given Indukantham Ghritam, Mahatiktakam Ghritam etc where found to have very little allergic reactions of any kind like excess sneezing, itching around the eyes, allergic asthma, allergic dermatitis etc.

5. Action on GIT – Gastro-Intestinal Tract

Ghee smoothes and nourishes the mucosa thereby preventing the formation of gastric ulcer. It also heals the ulcer in stomach. This also reduces hyperacidity and prevents the burning sensation in chest. Ghee is also good for people who have constant gas formation due to the persistent gastritis. It also makes the digestion normal and increases the quality and functions of the gastric and pancreatic juices thereby providing complete digestion and thus prevents disorders of digestion.

6. Action on Male Reproductive System

Ghee acts on the reproductive system, especially on male reproductive system. Only Fat soluble substances can pass the blood testis barrier. Ghee increases the sperm count, increases the seminal fluid amount and increases the active motility of sperms. In many infertility cases where the reasons is due to the defects in male part treatment with medicated ghee like Phala Sarpis, Kalyanakam Ghritam, Dadimadi Ghritam etc have brought good results.

7. Action on Female Reproductive System

Ghee also has immense action on the female reproductive system. It is usually the medicine of choice in common gynecological conditions like menstrual abnormalities, infections of uterine tract, inferltility, repeated abortions, uterine prolapse and hormonal imbalance induced uterine and vaginal complaints etc. Usually used medication are Phala Sarpis, Dadimadi Ghritam, Satavaryadi Ghritam, Kalyanakam Ghritam depending upon the condition...

Ghee is also of special importance during pregnancy i.e ante-natal care. Vaginal deliveries are in decreasing trend and ceserean sections are increasing. Ghee medicated with certain medicinal plants are to be used in the three trimesters of pregnancy for a full term normal vaginal delivery.

8. Action on eyes

Another important site of action of ghee is the eyes. Daily intake of 1 teaspoon Triphala Churnam + 1 Teapsoon Ghee + ½ Teapsoon Honey will prevent all the eye diseases especially the refractive errors like myopia, hypermetropia, ambylopia. Usually in cases with eye complaints, Ayurveda advises to do Netra Tarpana i.e. making the ghee stand on eyes for some times with Jeevantyadi Ghritam, Triphala Ghritam, Satahwadi Tarpana Ghritam etc depending upon the condition of the patient. This has brought good result in a lot of people helping them to improve their vision.

9. Action on throat

Ghee is good for the throat. It is especially good for making the swara i.e. voice good smooth and tuned. It is especially indicated for singers. It also prevents fatigness of throat especially for those who talk for a long time.

10. Action on cuts and burns

It was in earlier times a practice that when ever there is a fresh burn people would immediately apply ghee. The results were very fantastic….they wouldn’t even get a single boil or scar…..the burning sensation and the scar was also absent……similarly in a small cut ghee with honey are applied to the cut area. It would heal the area very fast. In long standing ulcers like venous ulcers application of Jatyadi Ghritam + Honey has proven results..This Jatyadi Ghrita is also an anti-microbial. It prevents the secondary bacterial attack……….It is also used in fissures and fistulas for healing of the wound.

11. Action on the toxins that enters the body

Man is now a constant eater of a lots of toxins and poisons that are harmful to the body….the fruits and vegetables that we get today are covered with lots of insecticides and pesticides…..all the food that we eat are now adultered…..in meats especially there are lots of hormones in high quantity that causes hormonal imbalance to the body…These all may be compared with gara visha in Ayurveda and ghee is one of the best remover of visha. It will detoxify the body. Tiktakam, Maha Tiktakam, Kalyanakam Ghrita are best among them.

12. Action on Fevers

Each and every day, newer types of fevers are emerging. There are many people with getting attacks of fever repeatedly every month. Main reason for the increased susceptibility to fever is decreased body resistance. Ghee has a very special and important role…Ghee enhances the immune power, increases the body strength and prevents the person from getting recurrent fever. In this context, Indukantham Ghritam is very special.

13. Makes very thin people healthy

Ghee has a special property of increasing the Mamsa dhatus in body. So this is especially good in people who are very thin and weak….Ajamamsa Ghritam, Indukantham Ghritam, Amrithaprasham Ghritam can be used accordingly with milk to increase health.

14. Action on Joints

Ghee lubricates the joints and makes them functionally good. In treatment of osteo-arthritis and rheumatoid arthritis ghee is important. It strenghthens the back bone, knee joint etc thereby reducing pain and other complaints…

15. Actions as an anti aging agent

Ghee is a good anti-aging agent…a person who consumes ghee daily will have all aging changes very late and that too in decreased rate….It is good when applied to face along with pure Tumeric Powder. It brings brightness to the face. But should not be used by persons who have oily skin.

16. Action on preventing hair fall and premature greying

Ghee also helps in strengthening the hair roots, thus preventing the excess hair fall….Ghee also prevents and reduces the pre-mature greying of hairs….Indukantham Ghritam, Amrutaprasham Ghritam, Ajamamsa Ghritam, Kalyanakam Ghritam etc can be used according to the condition.

17. Action for making the respiratory system healthy

Ghee especially acts on the respiratory system and prevents the chances of lung disorders like asthma and other diseases. Indukantham Ghritam, Maha Tiktakam Ghritam, Amrutha Prasham Ghritam, Kalyanakam Ghritam etccan be done based on the condition of the patient.

WHEN TO TAKE GHEE AND WHEN NOT TO

Many people come to us and say that we have taken medicated ghees for many months but there has not been any result…

Ghee should be only taken after the digestive process of our body is good and our Kapha in the body has been decreased….if ghee is taken in this condition, it will get digested well and will act like a Nectar or Amrut.
In Contrast…

If ghee is taken during the acute infections or when there is high temperature or when there is no or less appetite with increased Kapha, it will not get digested and will act like a poison…..Either there will be aggravation of the condition or there will not be any affect on the system…

This has been very well mentioned in Ayurveda….
All the medicines prescribed above should be taken only after an expert medical advice from an Ayurvedic Doctor.

அரச மரம்

வழிபாட்டில் ஒரு அங்கமாகவே திகழ்கிறது அரச மரத்தை வலம் வருவது. குறிப்பாக, திங்கட்கிழமையன்று அமாவாசை வந்தால் அதிகாலையில் அரச மரத்தை சுற்றி வழிபடுவது பல நன்மைகளைத் தரும். இதை அமா - சோமவார பிரதட்சணம் என்பார்கள். அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
‘மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம’
108 முறை வலம் வருதல் மிகவும் சிறப்பு. இதனால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்!
‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு. அரச சமித்துகளை மந்திர பூர்வமாக அக்னியிலிட்டு ஹோமம் வளர்க்க, கபம், பித்தம் போன்ற நோய்களை நீக்கும். அரச மரத்தை தொடக் கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் தொட்டு வழிபடலாம்.
அரச மரம் சர்வ தேவதா ரூபம். வடமொழியில் இதன் பெயர் அஸ்வத்த விருட்சம். அரச மரத்தின் நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். சித்தார்த்தர் அரச மரத்தடியில் தவம் செய்து புத்தர் ஆனார். அதனால் இம்மரம் ‘போதிமரம்’ எனப் பெயர் பெற்றது. அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறுநாளுக்குள் அழிந்துவிடும்.
அரசமரத்தை திங்களன்று வலம் வந்தால் மங்கலம் உண்டாகும். செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன் வியாபாரம் பெருகும். வியாழன் கல்வி வளரும். வெள்ளியன்று வலம் வர, சகல சௌபாக்கியங்களும் கிட்டும். சனியன்று வலம் வர சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். ஞாயிறு வலம் வர நோய்கள் நீங்கும். 
தென்காசியை அடுத்த ஆயக்குடி பாலசுப்ரமணியர் கோயிலில் அரச இலைகளின் மீது விபூதி வைத்து பிரசாதமாகத் தரப்படுகிறது. திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நியமம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற வைணவத் தலங்களிலும் அரச மரமே தல விருட்சமாக விளங்குகிறது.
அறிவியல் விளக்கம்: அரசும், வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இவற்றை வலம் வரும்போது உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. அரச இலை அசையும்போது அதன் சத்து காற்றில் பரவுகிறது. விஞ்ஞான ஆய்வுப்படி ஓர் அரச மரம் நாள் ஒன்றுக்கு 1,800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2,400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரச மரத்தை அதிகாலையில் வலம் வந்தால் அது வெளிவிடும் பிராண வாயுவில் ஓசோனின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்கில விருத்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைப்பேறு உண்டாகும்.

மரமே! அரச மரமே! நீ தேவ விருட்சம்! தேச கடாட்க்ஷம்! நீயே ஆதிபிராணன்! சூரியனை முதலில் உணரும் நீயின்றி இந்த பூமியில் எங்களுக்கு வாழ்வேது? இந்த பூமிக்கு அழகையும், எங்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும் உன்னை பணிந்து வலம் வந்து வணங்கி வளம் பெறுவோம்!

http://hinduspritualarticles.blogspot.com/2016/03/blog-post_3.html