Monday, May 30, 2016

சித்தர்களின் வாழ்வியல் நெறி

யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா?

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும்.''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாதபெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறுது.சித்தர்களின் வாழ்வியல் நெறி. சென்னை அரசு சித்த மருத்துக் கல்லூரி்.

'1-ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’
தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட்என்கிறது நவீன அறிவியல்.
இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.
2 -நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள
3 -மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக்கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாகவைத்திருக்கும்.
4- மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக்கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்

5-காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!
6 -ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

7 -''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும்வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சருமநோய்கள் சரியாகும்.

8 -ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

9 -நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

10 -அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும்.சைவம் சாப்பிடுபவர்கள்அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

11 -வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன்,சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

12 -சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

13- காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

14 -முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால்,மேலிருந்து கீழ்நோக்கிஅழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

 15-குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

16 -வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள்உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.

17 -செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

18- கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு,20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ்க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.

19 -தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான். ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.

20- தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும்சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்லமருந்து.

21 -உடல் 'ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத்
தக்கவைக்கும்.

22 -யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.

23 -இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

24 -வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.

25- புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால்,இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?

கற்பம்

மூதண்டக்கியாழ கற்பம்  . .  ...         அருகம்புலை  வேரோடு  இரண்டு  கைப்பிடியளவு  பறித்து  வந்து   வேர்களில் இருக்கும்    முடிச்சுகளை  மட்டும்   நீக்கி   சுத்தம்  செய்து  இரண்டுபடி  தண்ணீருடன்  ஒரு பாத்திரத்தில்  . அருகம்புல்லுடன்  25   மிளகுகளை  முழுதாக   போட வேண்டும் .   அப்பாத்திரத்தை  அடுப்பில்  வைத்து  8ல் 1 பங்காக  சுண்டக் காய்ச்சி .  அடுப்பில் இருந்து  பாத்திரத்தை  இறக்கி    பின் ஒரு தம்ளரில் வடிகட்டி  .. எடுத்த கசாயத்தில் ... ஒரு முழு பாக்களவு (1gm) வெண்ணெய் போட்டு    . உட் கொள்ள  ஞானம் கிட்டும்    .. எனவும்    அனைத்து  பிணியும்  . தீர்த்து  வைக்கும் ..   இது  மூதண்டக்கியாழன்  எனும்  அருமருந்து  என்றார் கொங்கணச் சித்தர்..   .. . அருகம்புல்லில்   சிவன்  சக்தியும்  .  மிளகில்  .. அம்பாள் சக்தியும்  .     வெண்ணெயில்  விஷ்ணு   சக்தியும்   இருப்பதாகவும்  இது  யோகியருக்கான கற்பம்  என கொங்கணச் சித்தர்  வாக்கு

Sunday, May 29, 2016

நிலக்கடலை / வேர்க்கடலை

நிலக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
Image result for வேர்க்கடலைImage result for வேர்க்கடலை

நாற்பது நாட்களுக்கு வேர்க்கடலையை மட்டுமே சாப்பிட்டு, தான் பெற்ற சக்தியினைப்பற்றி:

           பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது.

மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும்.
நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலை ஸ்பெஷல்.

சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.

வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.

       பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.

 ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். வயிற்றில் நிகோடினிக் அமிலம் குறையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படும்.
 வேர்க்கடலையில் உள்ள நையாசின் இந்நிலையைச் சீர்செய்கிறது.

புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும்.

✴ வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும்.

 வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

🌱வேர்க்கடலையை வேகவைத்துச் சாப்பிடலாமா?
வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நன்று.

🌱வேர்க்கடலை உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்காதா? ஒரு தோசை வார்த்து எடுக்க இரண்டு, மூன்று தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்துகிறோம். ஒரு பிடி வேர்க்கடலையிலில் இருப்பதோ ஓரிரு துளிகள். அவை உடலின் கொழுப்புச் சத்தை அதிகரித்து விடாது.

🌱உடலின் பித்தஅளவு வேர்க்கடலை சாப்பிடுவதால் அதிகரிக்காதா?
வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். இதனை நன்கு கழுவிவிட்டுச் சாப்பிடலாம். ஊறவைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

🌱வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது.
உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்!

🌱வேர்க்கடலை பால்! வேர்க்கடலை 2 கைப்பிடி அளவு (8 மணி நேரம் ஊறவைக்கவும்), ஆப்பிள் 1 (அ) சப்போட்டா (அ) நேந்திரம் (அ) செவ்வாழை (அ) பேரீச்சை… துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்… தேன் 2 டீ ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப…) ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, சல்லடையில் அரித்து அல்லது அரிக்காமல் அப்படியே பருகலாம்

Wednesday, May 25, 2016

மலர் / பூ

*மலர்களும் அதன் குணங்களும்*

மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல. சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன.

இதோ அவ்வாறன மலர்களும் அதில் உள்ள குணங்களும் எவை என பார்ப்போம்.

*செம்பருத்திப்பூ*:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்புவலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் இட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். குழந்தைகளுக்கு இப்பூவை சிறிது சுடுநீரில் தலையில் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி நன்கு வளரும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

*ரோஜாப்பூ*:

இருதயத்திற்கும், மனதிற்கும் வலிமை தரக்கூடியது. பசும் பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்துவந்தால் நெஞ்சில் சளி பிடிக்காது நீங்கிவிடும். இரத்தவிருத்திக்கும் துணைசெய்யும். சிவப்பு ரோஜாக்கள் மிகவும் உபயோகமானது.

*மல்லிகைப்பூ*:

தலையில் சூடிக்கொள்வதால் கண்பார்வை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. உணர்ச்சிகளைத்தூண்டும் ஆற்றலும் அதிகரிக்கும். கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

*அகத்திப்பூ* :

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலோடு சேர்த்து காய்ச்சி சக்கரை சிறிது சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு பித்த சூடு நீங்கும்.

*முருங்கைப்பூ* :

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச்செய்து தாதுப்பெருக்கம் அடையச்செய்யும் தன்மையது. அதை சுண்டல் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

*குங்குமப்பூ* :

கர்ப்பம் தரித்த பெண்கள் ஒருநேரம் 5 முதல் 10 வரை குங்குமப்பூ இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சிக் குடித்து வர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

*வேப்பம்பூ* :

சிறந்த கிருமி நாசினி இப்பூவாகும். இப்பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. இப்பூவை சுண்டல் செய்து சாப்பிட வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்துவிடும். சிறிது கசப்புத்தன்மை கொண்ட இப்பூவை வடகம் போன்று செய்து வெயிலில் உலர்த்தி காயவைத்து நல்லெண்ணெய் நெய் இவற்றில் பொரித்து சாப்பிடுவதால் கற்பப்பை பூச்சிகள் கோளாறுகள் நீங்கி சிறந்தபலனை அடையலாம். சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது.

*ஆவாராம்பூ* :

இரத்தத்துக்கு மிகவும் பயன்தரும், ஆவாரம்பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால் ,சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்குமாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்து வர வியர்வையால் ஏற்படும் நாற்றம் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் குணமாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஆவாரம்பூ சிறிதளவு சிறு இஞ்சித்துண்டு, சிறுசீரகம் சிறிதளவு சேர்த்து அவற்றை கசாயம் போல் நீர்விட்டு காய்ச்சி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

*வாழைப்பூ* :

வாழவைக்கும் வாழைப்பூ மிகுந்தமருத்துவ குணம் கொண்டது. இதை சுத்தம் செய்து சுண்டல் செய்து சாப்பிடுவதால் மலச்சிக்கலை நீக்கிவிடும். அத்துடன் உடலின் தேவையற்ற கழிவுப்பொருள்களை அகற்றும் தன்மை இப்பூவுக்கு உண்டு. வாரத்தில் ஒருமுறையேனும் உணவாக உட்கொள்ளும் போது உணவு செரிமாணம் அடைவது மட்டுமல்லாது எமக்கு மேலதிகமாக தேங்கப்படும் சத்துக்கள் கல்லாகமாறிவிடுவதையும் வாழைப்பூ கட்டுப்படுத்தி கரைத்து விடுகிறது.

கல்லாகும் தன்மை அளவுக்கு அதிகமான உணவால் ஏற்படுகிறது. அது மனிதர்க்கு உடல் உபாதையை மட்டுமல்ல உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தும். மருந்தாகும் உணவுவககளை அதாவது இலை பூ வகைகள் அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடுவதால் நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழலாம்

நலக்குறிப்புகள் 1


"மூலநோயை குணமாக்கும் இலகு வைத்தியம் "

வேப்பமரத்தின் விதைகளைக் கொண்டுவந்து உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து மைபோல் அரைத்து காலை மாலை பாக்களவு வெந்நீரில் 40 நாட்கள் குடித்துவர பூரணமாக குணமாகும், இச்சா பத்தியம்
+++++++++++++++++++++++
பல் துலக்கப் பற்பொடி

சாக் பவுடர் - 1 கிலோ
பொரித்த படிகாரம் - 1 கிலோ
இந்துப்பு - 1/4 கிலோ

இவைகளை தனித்தனியே அரைத்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். அவ்வளவு தான்.

தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் உயிருள்ளவரை பாது காக்கலாம்.
+++++++++++++++++++++++++++++
தூக்கம் வர

தூக்கம் வர மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்.

கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடியை எடுத்து 1 டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
+++++++++++++++++++++++++
"கற்றாழை நாற்றம்  நீங்குவதற்கு இலகு வைத்தியம்"

ஆவாரை பஞ்சாங்க சூரணம் [இலை,பூ,காய்,பட்டை,வேர்] 300 கிராம் ,கோரைக்கிழங்கு  சூரணம் 50 கிராம் ,கிச்சிலிக்கிழங்கு சூரணம் 50 கிராம் ஒன்றாய் கலந்து வைத்துக்கொண்டு தினந்தோறும் உடம்பிற்குத் தேய்த்து குளித்து வந்தால் கற்றாழை நாற்றம் தீரும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
"மூட்டுவீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்"

சுக்கு 50 கிராம் பெருங்காயம் 50 எடுத்து பசும்பால் விட்டு அரைத்து மூட்டுகளில் பற்று போட்டு வர வலியும் வீக்கமும் தீரும் 
நன்றி 
வர்மக்கலைஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.aadhisakthivarmakalai.blogspot.com
www.aadhisakthivarmakalai.com

Varmakalai Gopalakrishnan /facebook
++++++++++++++++++++++++++++++
"பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் பெரும்பாடு எனும் அதிக ரத்தப்போக்கு தீர அனுபவ வைத்தியம்"

இது கர்ப்பபையில் புண் இருப்பதனால் உண்டாகும் பிணி , அளவுக்கு மீறி ரத்தப்போக்கு ஏற்படும் ,

இதற்கு மருந்து 'வில்வ இலையுடன் சிறிய வெங்காயம் சேர்த்திடித்து சாறு பிழிந்து சம எடை சுத்தமான விளக்கெண்ணை சேர்த்து காய்ச்சி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு காலை வெறும் வயிற்றில் ஒருதேக்கரண்டி வீதம் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட கர்ப்பப்பை புண்கள் ஆறும் ,ரத்தப்போக்கு நிற்கும்
++++++++++++++++++++++++++++
"இரத்த விருத்தியடைய இலகுமுறை வைத்தியம்"

சிறுகீரையை சுத்தம் செய்து  பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டுவர இரத்தவிருத்தி ஏற்படுவதுடன் உடலும்அழகு பெறும்

கொத்துமல்லி கீரையை பசுமையாக வாங்கி வந்து நறுக்கி நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இரும்பு சத்து ஏராளமாக கிடைத்து இரத்த விருத்தி அடையும்.
++++++++++++++++++++++
ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்*!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.

"உடலில் நஞ்சை ஏற்றும் ரகசிய வித்தை"

கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும்போது அதிகாலை வேளையில் வேப்ப மரத்தின் கொழுந்தை ஒரு கைப்பிடி நிறைய எடுத்து நன்றாக மென்று தின்னவும் ,இப்படியே ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர நமது உடல் நஞ்சாக மாறும் ,நம்மைகண்டதும் விஷ பூச்சிகள் பயந்து ஓடிவிடும் ,பாம்புகூடநம்மைகடித்தாலும் அதுஇறந்து விடும் ,நாம்யாரையும்கடித்துவிட கூடாது ,
[சாப்பிடும் போது பால் சாதம் மட்டும் சாப்பிட்டு பத்தியம் காக்கவேண்டும் ]
கருவூரார் வாத காவியம்
+++++++++++++++++++++++++++++
"நரைமுடி  கருப்பாக மாறுவதற்கு அனுபவமுறை"

கறிவேப்பிலையை  மூன்று கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அரைலிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில்  கலக்கி நன்றாக தைலமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலைக்கு தேய்த்துவரவும்.
தாமரை பூவை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கசாயம் வைத்து காலை மாலை பருகி வரவும்.
நரை,திரை மாறும்.
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
+++++++++++++++++++++++++
சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
++++++++++++++++++++++++++++
1. உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
2. முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
3. முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
4. வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
5. இரத்த சோகையை போக்க
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.
6. பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
7. சேற்றுபுண் குணமாக
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
8. வெட்டுக்காயம் குணமாக
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
9. பற்கள் உறுதியாக இருக்க
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
10. தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
11. தும்மல் நிற்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
12. படர்தாமரை போக்க
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
13. வயிற்று வலி நீங்க
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
14. அஜீரணசக்திக்கு
சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
15. அறிவு கூர்மை அடைய
வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் .
16. சிலந்தி கடிக்கு
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
17. வயிற்று நோய் குணமாக
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.
18. உடல் வலிமை பெற
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
19. சீதள பேதியை குணப்படுத்த
100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
20. சுகப்பிரசவம் ஆக
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
21. வீக்கம் குறைய
மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.
22. குடல் புண் ஆற
வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
23. நரம்பு தளர்ச்சி நீங்க
தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
24. காய்ச்சல் குணமாக
செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
25. நாக்கில் புண் ஆற
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

Wednesday, May 18, 2016

ஞானம்

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று
கூறுவதில்லை? ஏனெனில் சித்தத்தை
உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன்
என்ற நினைப்பில் தம்மை முழுமையும்
அர்பணித்து விடுவார்கள்.கடவுளைத்தேடி
எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப்
பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே
பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது
சித்தர் கொள்கை.

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை
சந்தித்து வந்த நான். கடவுளை காண
முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல
இதயங்களை போல என் இதயமும் காத்து
இருந்தது என்பது உண்மை. அதிகப் பட்சமாக
அதை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு அனுமதி
இல்லை என்பதே உண்மை.. அவனையே
குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும்
போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.அவன்
அருளால் அவன் தாள் வணங்க, அனைத்தும்
அம்சமாக கிடைக்கும்.அதற்காக உங்களின்
நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என்
கருத்து.
அவன் செயலும் அவனை அன்றி யாரும்
அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ
எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது
ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.அண்ட
சராசரங்களும் அகில லோகத்தையும்
ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது
தேடல் என்னவென்று? தேவை என்னவென்று?
அவனை நாடி,அவன் அருளை தேடி, அவன்
பாதம் தொழுவோர்க்குஅன்பே உருவாக அவன்
காட்சி கிடைக்கும்!உங்களுக்கும் குருவருளால்
எல்லாம் சித்திக்க வேண்டுகிறேன்.

ஞானத்தேடலில் இருப்பவர்கள் முடிந்தவரை
அடுத்தவருடன் அரட்டை அடிப்பதை
நிறுத்திவிடுங்கள். உங்கள் எண்ணங்கள்
எல்லாமே இறைவெளியிலேயே லயித்து
இருக்கட்டும். ஞானம் என்பது அவரவர்
மனநிலையை பொறுத்தது எனவே
முடிந்தவரை குண்டலினி தியானம்
கற்றக்கொள்ளுங்கள் இத்தியானம் முடிந்தவரை
உங்களை இப்பிறவியிலேயே ஞானம்
அடையசெய்யும் . இடை இடையே சில
சித்துக்கள் தோன்றும் அதன் பின் செல்லாமல்
இறைவெளி தியானம் என்ற செயலிலேயே
மனத்தை வையுங்கள் வெற்றி நிச்சியம். ஆன்ம
தேடல் உள்ளவர்களுக்கு எனது அறிவுரை
இதுதான். மவுனம் தான் முக்கியம். விந்து
நாசம் செய்யக்கூடாது இது போல் தொடர்ந்து
10 வருடம் இருந்தால் உங்களுக்கு ஞானம்
நிச்சியம்.
ஆத்ம ஞானம் அடையாதமுன் சரீரம் அழிக்கப்படுமானால், திரும்பவும் திரும்பவும் சரீரம் பெற்றே தீர வேண்டும்.  இச்சரீரத்தின் மூலமாக ஒருவன் ஆத்ம ஞானம் அடைய வேண்டும். ஒருவன் இதன் மூலமாக ஆத்ம சாக்ஷாத்காரம் எய்த வேண்டும். அதன் பிறகு இச்சரீரம் எக்கதி அடைந்தாலும் பரவாயில்லை.

நாக்கு

நாக்கில் காலையில் பல்விளக்கும்
போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின்
நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால்
வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நீல நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட
குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற
வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால்
உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக
கிரகிக்கப் படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு
சக்தியின் குறைபாடு என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால்
உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று
பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை
பார்த்தது போல் நாக்கிலும் உடல்
உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை
கண்டுபிடிக்கலாம

Tuesday, May 17, 2016

ஏலக்காய்

லவீனம் நீக்கும் ஏலக்காய்

வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏழக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான
ஒன்று. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான் செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை.
நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன. நறுமணம் கொண்ட
விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை
சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.
பலவீனம் நீக்கும் ஏலக்காய்
ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல்,கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன்,கெரியோஃபில்லென், கார்வோன்,
யூகேலிப்டோல், டெர்பினின்,சேபினின், இவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும். இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல்
அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்குகட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய்
பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.
மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீ
மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்
அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!
நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக்
கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.
தலைசுற்றல், மயக்கம் போக்கும்
வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர்
தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலை உடனே
நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில்
நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.
வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் , கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு
முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.⁠⁠[03:41, 17/5/2016] +91 99407 72384: 

தியானம்

தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகள் !

உடல் ரீதியான நன்மைகள்

1. பிராணவாயுவின் தேவையை குறைக்கிறது

2. மூச்சு விடும் சுற்றை குறைக்கிறது (ஒரு நிமிடத்துக்கு நாம் எவ்வளவு முறை மூச்சு விடுகிறோம் என்பது நமது ஆயுள் சம்பந்தப்பட்டது. குறைந்த மூச்சு நிறைந்த ஆயுள்!)

3. இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை  இயங்க செய்கிறது

4. உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையை மாற்றி உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்கிறது.

5. நம் உடலுக்கு அவ்வப்போது மிகவும் தேவையான ஆழ்ந்த ஓய்வை தருகிறது

6. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தியானம் ஒரு மிகச் சிறந்த மருந்து



7. இரத்தத்தில் உள்ள lactic acid அளவை R குறைத்து அச்ச உணர்வினால் ஏற்படும் நோய்களை பூரணமாக விரட்டுகிறது.

8. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது.

9. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது

10. பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பயங்களை போக்கி அது சீராக இருக்க உதவுகிறது.

11. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்துகிறது

12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

13. வைரஸ்களின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. மனக்கவலையை போக்குகிறது.

14. ஆற்றல், சக்தி, வீரியத்தை அத்கிகரிக்கிறது

15. உடல் எடையை கட்டுக்கள் I வைக்க உதவுகிறது

16. திசுக்களை பாதுக்காக்க உதவுகிறது.

17. தோலுக்கு பலம் கூடுகிறது. (Higher skin resistance)

18. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது

19. நுரையீரலுக்கு சரியான அளவு பிராணவாயு செல்ல உதவுகிறது.

20. முதுமையை ஒத்திப்போடுகிறது.
[10/19, 4:01 PM] ‪+91 82200 63745‬: தியானம் என்றால் என்ன?

அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும். தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானத்தில் இறை அன்பு இருக்கிறது.
தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும்.
தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும்.
தியானம் என்பது மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை நினைப்பது. தியானம் செய்பவரின் நோக்கம் மற்றவர்களையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

தியானம் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிக மிக எளிதான ஒன்று.

தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகளை இத்துடன்  பட்டியலிட்டிருக்கிறோம். படித்து முடிக்கும்போது, நீங்களும் உடனே தியானம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் என்பது உறுதி.

தினசரி தியானம் செய்வோம். அளப்பரிய பலன்களை பெறுவோம்.
[10/19, 4:03 PM] ‪+91 82200 63745‬: 21. நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் Dehydroepiandrosterone என்ற ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உதவுகிறது.

22. நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த G உதவுகிறது.

23. வியர்வையை கட்டுப்படுகிறது

24. மைக்ரேன் மற்றும் தலைவழியை போக்குகிறது

25. மூளையை நன்கு இயங்கச் செய்கிறது

26. உடலுக்கான மருத்தவ தேவையை குறைக்கிறது

27. நமது சக்தி (எனர்ஜி) விரயமாகாமல் பாதுகாக்கிறது.

28. விளையாட்டு மற்றும் H இதர செயல்பாடுகிளில் ஆர்வத்தை தூண்டுகிறது

29. ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது

30. விளையாட்டு போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாட உதவுகிறது

31, உங்கள் உடலுக்கு தேவையான எடையை அளிக்கிறது

32. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது

33. நமது நரம்பு மண்டலத்தை பாதுக்கக்கிறது

34. மூளையின் மின் செயல்பாடுகளை பராமரிக்கிறது (brain electrical activity).

35. ஆண்மைக்குறைவை போக்குகிறது.
[10/19, 4:04 PM] ‪+91 82200 63745‬: மன ரீதியான நன்மைகள்

36. தன்னமபிக்கையை அதிகரிக்கிறது

37. நமது இரத்தத்தில் செரோடொனின் அளவை அதகரித்து நமது மனோநிலையையும் நடத்தையையும் சரியாக இருக்க செய்கிறது

38. தேவையற்ற அச்சத்தை போக்கி பயம் சார்ந்த நோய்களை விரட்டுகிறது

39. நமது எண்ணங்களை M கட்டுப்படுத்துகிறது

40. நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.
[10/19, 4:05 PM] ‪+91 82200 63745‬: 41. கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது

42.  மூளையின் மொத்த சமச்சீர் செயல்பாட்டை (Brain wave coherence) அதிகரிக்கிறது

43. கற்கும் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது

44. மனதுக்கு உற்சாகத்தையும் இளமையையும் தருகிறது

45. உணர்சிகளை கட்டுக்கள் வைக்க உதவுகிறது

46. உறவுமுறைகளை மேம்படுத்துகிறது

47. மூளைக்கு முதுமை ஒத்திப்போடப்படுகிறது.

48. தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விரட்டி விடுகிறது

49. உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

50. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது

51. வீட்டிலும் பணியிடத்திலும் சுமூகமான ஒரு சூழலை நமக்கு ஏற்படுத்தி தந்து உதவுகிறது

52. ஒரு சூழ்நிலையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது

53. சின்னஞ்சிறு அற்பத்தனமான A சச்சரவுகளில் ஈடுபடாமல் நம்மை காக்கிறது

54. மிக கடினமான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்க்க உதவுகிறது

55. நமது நடத்தையை சுத்தப்படுத்துகிறது

56. நமது WILL POWER அதிகரிக்க உதவுகிறது

57. வலப்பக்க மூளைக்கும் இடப்பக்க N மூளைக்கும் சரியான தொடர்பை ஏற்படுத்தி தருகிறது

58. இக்கட்டான தருணங்களில் சமயோசிதத்துடன் முடிவுகளை மேற்கொள்ள உதவுகிறது.

59. பார்ப்பவற்றை சரியாக உள்வாங்கும் திறனையும் நமது உடலின் தசைக்கூறு செயல்ப்பாட்டையும் மேம்படுத்துகிறது. (Perceptual ability and motor performance).

60. புத்தி சாதுரியம் கூட உதவுகிறது
[10/19, 4:05 PM] ‪+91 82200 63745‬: 61. செய்யும் வேளையில் பரம திருப்தி கிடைக்கிறது

62. நாம் நேசிப்பவர்களுடன் சரியான ஒரு உறவு முறையை கையாள உதவுகிறது.

63. மனநல குறைபாடுக்கான சத்தியங்களை T குறைக்கிறது

64. நமது சமூக செயல்பாடு மேம்படுகிறது

65. தேவையற்ற போர்குணத்தை (எதிர்மறையான) கட்டுப்படுத்துகிறது.

66. மதுப் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கங்களை கைவிட உதவுகிறது

67. மருந்து, மாத்திரைகளுக்கான தேவைகளை குறைக்கிறது

68. உடலுக்கு தேவையான தூக்கத்தை கிடைக்க உதவுகிறது

69. ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் செல்ல R எடுத்துக்கொள்ள நேரத்தை குறைத்து தூக்கமின்மை நோயை விரட்டுகிறது

70. பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது

71. சாலையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் a வெறுப்புணர்வை போக்குகிறது. (Road rage).

72. அர்த்தமற்ற சிந்தனையை கட்டுபடுத்துகிறது

73. கவலையை போக்குகிறது

74. கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது. இரக்க குணத்தை A ஏற்படுத்துகிறது.

75. சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

76. சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது

77. ஆக்கப்பூர்வமான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் சிந்தனையை செலுத்தவும் உதவுகிறது

78. நமது ஆளுமையை மிக மிக சரியாக பராமரித்து சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தருகிறது.

79. உணர்வு ரீதியான பக்குவத்தை தருகிறது. (Emotional Maturity).
[10/19, 4:06 PM] ‪+91 82200 63745‬: ஆன்மீக ரீதியிலான பலன்கள்

80. சரியான இடத்தில் சரியானதை வைத்து பார்க்க உதவுகிறது

81. மனஅமைதி, t மகிழ்ச்சியை தருகிறது

82. நமது வாழ்வின் குறிக்கோளை கண்டுபிடிக்க உதவுகிறது

83. நம்மை உணர்ந்துகொள்ள வழி செய்கிறது. (உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்….)

84. சகமனிதர்களிடம் கருணை காட்ட r உதவுகிறது

85. ஞானத்தை அதிகரிக்கிறது

86. நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது

87. உடல், மனம், ஆன்மா மூன்றையும் மகிழ்ச்சியான சமனுக்கு கொண்டுவருகிறது.

88. ஆன்மீக m ரீதியில் மனம் லயிக்க உதவுகிறது

89. நம்மை நாமே விரும்ப உதவுகிறது.

90. பிறரின் தவறுகளை i மன்னிக்கும் சுபாவத்தை வளர்க்கிறது

91. வாழ்க்கை குறித்த நமது மனப்பாங்கை மாற்றுகிறது

92. கடவுளுக்கும் நமக்கும் ஒரு g நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது

93. வாழ்விற்கு தேவையானவற்றை செய்ய உதவுகிறது. (Synchronization in your life)

94. மனசாட்சியை விஜிஹிப்புடன் வைத்திருந்து நாம் சரியான பாதையில் செல்ல n உதவுகிறது

95. நிகழ்காலத்தின் அருமையை h உணர்த்தி, நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது

96. பிறரால் நேசிக்கப்படுவதற்க்கான சாத்தியங்களை மேம்படுத்துகிறது.

97. ஈகோவை வெல்ல உதவுகிறது

98. நம் ஆழ்மனதின் ஆற்றலை அறிய உதவுகிறது

99. எல்லாம் அவன் செயல் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, இறைவனுடன் நமது பந்தத்தை அதிகரிக்கிறது.

100. ஞானோதயம் பெற வழி காட்டுகிறது.

++++++++++++++++++++++++++++++++
தினம் மூன்று வேளை தியானம் செய்தால் இளமையைப் பாதுகாக்கலாம் என்கிறார்.

அஞ்சனம் போன்றுடல் ஐயறும் அந்தியில்
வஞ்சக வாதமறும் மத்தி யானத்தில்;
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே

என்ன லாஜிக் என்றால் மனித உடம்புக்கு வரும் சீக்குகள் அடிப்படையில் வாதம், பித்தம், சளி என்கிற மூன்று அகண்ட வகைகளாகப் பிரித்தது சித்த வைத்தியம். அதே அடிப்படையில்தான் மருத்துவ விஞ்ஞானமும் தொடங்கி வளர்ந்தது.

மாலைத் தியானம் சளியையும், நண்பகல் தியானம் வாதத்தையும், அதிகாலைத் தியானம் பித்தத்தையும் கட்டில் வைக்குமாம். அதெல்லாம் சரிதான், இளமை? அதற்கென்ன லாஜிக்?

தியானப் பயிற்சி மனதை எண்ணங்கள் இல்லாத நிச்சலமான நிலையில் வைக்கும். எண்ணம் இல்லாத நிலை நிகழ்காலம். எண்ணங்களில் இறந்தகாலமோ (துக்கம்), எதிர்காலமோ (அச்சம்)தான் இருக்கும். நிகழ்காலத்தில் எண்ணமில்லை, செயல் மாத்திரமே.

துக்கமும், அச்சமும் மாறி மாறி வரும் Fatigue தான் முதுமை.

நிலையாக நிகழ்காலம் இருப்பதே Fatigue இன்மை. அதாவது முதுமை இன்மை.

விரிவான வகையில், பார்ப்போம்.

தியானத்தில் அமர வேண்டும் என்றாலே அதற்கு அடிப்படையாக 1-மணிநேரம் உட்காரும் அளவுக்கு உடல்நிலை திடமாக இருக்க கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அந்த வகையில் கால்களை மடக்கி உட்கார, முதுகுத் தண்டை நிமிர்ந்து உட்காரத் தேவையான அளவு உடம்பு சரி செய்யப்படுகிறது. அடுத்து மூச்சுப்பயிற்சி செய்வதின் மூலம் எங்கு சளியிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடல் வெளித்தள்ளி விடும்.

மூச்சு வெளியே,உள்ளே செல்லும் அளவை வைத்துதான் தியானம் நீடிக்கும் அல்லது குறையும். (கால அளவு) தியானத்தில் (பல விதங்களில் தியானம் இருக்கிறது.)

அமர்ந்துஒரளவு சத்சங்கங்களில் உட்கார்ந்து அவர்கள் சொல்வதை உள்வாங்கி எண்ணங்களற்ற நிலைக்கு மனதை கொண்டுவந்து தியானம் கைகூடும் பொழுது நம் மனதின் அலை நிலை வெகுவாக குறைந்து அதாவது (7 to 14) க்கு வந்து விடும்.

அதுவே ஆல்ஃபா நிலை எனப்படும்அந்த நிலைக்கு வரும் பொழுது தேவையானதை மட்டும் சாப்பிடுவோம், செய்வோம், பேசுவோம். வாதம், சளி, பித்தம் எல்லாம் குறைந்து விடும்.

இந்த நிலையில் முதிர்ச்சி வர வர ஜீவனானது தன்னை தாங்கிவந்துள்ள உடல் என்று தன்னையும்  உடலையும் பிரித்து பார்க்கும் அனுபவம் பெறும். முதுமை என்பது உடலுக்கே அன்றி நமக்கில்லை என்று புரிந்து கொள்ளும்.

Monday, May 16, 2016

அன்னாச்சிப்பழம்

அன்னாச்சி பழத்தில் உள்ள சத்துக்கள்:-Image result for அன்னாச்சிப்பழம்
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். 

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.. 

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். 

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்னாசிப்பழம்:
பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்போது எல்லா நாடுகளிலும் உற்பத்தி ஆகிறத.

அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.


பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு அன்னாசியில் கால்சியம், பொட்டாஷியம்,மாங்கனீஸ் அதிகளவில் இருக்கிறது. ஒரு கப் பைன் ஆப்பிள் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மாங்கனீஸில் 73%இதிலிருந்து பெற்று விடலாம்.இச்சத்து நம் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
*vit-c-யும்,நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.vit-c சக்தி வாய்ந்த anti oxidant-ம் கூட.நம் உடம்பில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

அன்னாசியில் அதிகளவில் காணப்படும் புரோமிலைன்[bromelain] என்கிற என்சைம் இருமலை குறைத்து,சளியை கெட்டிப்படாமல் நீர்த்துப் போகச் செய்கிறது.[suppresses the cough & loosen mucus],சீரண சக்தியை தூண்டுகிறது
.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த அன்னாசியை அப்படியேயும் சாப்பிடலாம்,பழச்சாறாகவும்,பதப்படுத்தியும் சாப்பிடலாம்.எப்பொழுதுமே எந்தப்பழமாக இருந்தாலும், அப்படியே fresh-ஆக சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்களின் முழுப்பயனையும் அடைய முடியும்.

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது.

நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும். இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.

தொப்பையை குறைக்கும்

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மருந்தாகும்

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..

அன்னாசி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அளிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அன்னாசி இலைச்சாறு டன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.

ஜீரணசக்தி அதிகரிக்கும்

அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.

ரத்த விருத்திக்கு

தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து . நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

சிறுநீரகக்கற்கள் கரையும்

அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

சுருங்கச்சொல்வதானால் (re-cap)


1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க… வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.

2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர… இடுப்பு வலி மாறும்.

3. அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.

4. அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும்.

5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட… இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.

8. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.

9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.

10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.


11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

அகத்திக்கீரை சூப்

அகத்திக்கீரை சூப்

தேவையான பொருட்கள்:

1. அகத்திக்கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)

2. சோள மாவு - 1 மேசைக்கரண்டி

3. தக்காளி - 2 எண்ணம்

4. பால் - 1/4 கப்

5. வெண்ணெய் - 1மேசைக்கரண்டி

6. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

7. உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. அகத்திக்கீரையைப் பொடியாக நறுக்கி நன்றாகச் சுத்தம் செய்து இலேசாக வேக வைக்கவும்.

2. வேகவைத்த அகத்திக் கீரையினை ஆறிய பின்பு விழுது போல அரைக்க வேண்டும்.

3. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து இலேசாக அரைக்க வேண்டும்.

4. ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் வெண்ணெய்யை உருக்கிச் சோள மாவைச் சேர்த்துப் பிரட்டவும்.

5. இத்துடன் தக்காளிச் சாறு, கீரை விழுது சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

6. நன்றாகக் கொதித்தவுடன் மிதமான வெப்பத்தில் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி இறக்கவும்.












நல்ல குழந்தை உண்டாக

"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக"
(நமது பாரம்பரிய ரகசியம்)
     
                                        உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.
             
                                       சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது            
 
                                      அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்
   
                                       தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.
         
                                        அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்

                                       அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
     
                                       முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.

                                       முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.
 
                                      பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

                                      புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

                                     பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

                                     உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

                                     பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

                                     ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்டபோது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

                                     நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

                                     ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

                                    ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

                                   ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

                                   எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

                                  ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

                                  பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

                                  பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

                                   பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

                                  பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

                                 பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

                                 பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால்   ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

                                பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.                                                                                                                                                                  
                          நன்றி
                                                                                             வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன்
                                                                                                             தீத்திபாளையம்,கோவை 9894285755.
www.aadhisakthivarmakalai.blogspot.com