Sunday, June 7, 2015

சர்க்கரை



சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயை உணவு மூலம் சரி 

செய்து கொள்ளலாம்.

நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி


துவர்ப்பு சுவை

கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்டு 

சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை 

பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும். 

இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் 

சேர்த்து அரைக்கவும். தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். 

இத்துடன் பத்து சொட்டுகள் எலுமிச்சை சாறு விடவும். ஒரு 

கரண்டி (பத்து மில்லி ) தேன் சேர்த்து கலக்கவும். காலை 

உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் மெதுவாய் சப்பி சப்பி 

அருந்தவும். சாப்பிட ஆரம்பிபதற்கு முன் சர்க்கரை அளவை 

பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து 

திரும்பவும் சர்க்கரை அளவை சோதிக்கவும். நிச்சயம் குறையும். 

உணவுதான் எனவே பயமின்றி தொடர்ந்து பயன் படுத்தலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++


சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்  கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில்நாயின் கணையத்திலிருந்து 'இன்சுலின்என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார். இந்தச் சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு, பன்றி ஆகியவற்றின்  கணையத்திலிருந்தும் இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது மரபணு தொழில்நுட்பத்தில் (Genetic Engineering) உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக, 1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங். ஆனால், இவர் செய்த இன்னொரு மிக முக்கியமான ஆராய்ச்சியை உலகம் மறந்துவிட்டது - அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் வேதனையான விஷயம்.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்த பண்ணையார்கள் / ஜமீன்தார்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு, தங்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, வெள்ளைச் சீனியையே உபயோகித்தார்கள்.  ஆனால்இவர்களின் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த கூலித்தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு ஏற்ப கருப்பட்டி, வெல்லம்  போன்றவற்றைத்தான் சொந்தத்துக்கு உபயோகித்தார்கள்.

பண்ணையார்கள் / மீன்தார்கள் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும், கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் குறைவாகவும் இருப்பதை டாக்டர் பான்டிங் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்பு  உலகத்தின் பார்வையில் படாமல் ஏனோ இருட்டடிப்பு செய்யப்பட்டு, நூல் நிலையங்களுக்குள் வரலாற்றுச் சுவடிகளில் புதைக்கப்பட்டு விட்டது.

பான்டிங்கின் இன்சுலின் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம், 'வெள்ளைச் சீனியால் சர்க்கரைநோய் அதிகம் வரும்ஆனால்... கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைச் சாப்பிட்டால் பாதிப்பில்லை' என்கிற அவரின் அரிய கண்டுபிடிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந்தால், இத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோயே வந்திருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது! காரணம், சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயாகவே இதுவரை கருதப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி சாமான்யர்களுக்கும் அந்நோய் வருவதைக் காண்கிறோம். சாமான்யர்களும் கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைச் சீனியையே உபயோகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவுதான் இது என்பதைத்தானே பான்டிங் அப்போதே தன் ஆராய்ச்சியில் கூறினார்!

இனி, இன்றைய ஆராய்ச்சிக்கு வருவோம். அமெரிக்காவில்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் அகச் சுரப்பியல் (Pediatric Endocrinology) நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராபர்ட் லஸ்டிக் என்பவர், சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.  ஸ்டான்ஃபோர்டு  பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் ஊர் டாக்டர் சஞ்சய் பாசுவும் இந்த ஆராய்ச்சி யில் இணைந்து பணியாற்றினார். 2000 - 2010 ஆண்டுகள் வரை, 175 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில்ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும் /இறக்குமதியாகும் / விற்பனையாகும் சர்க்கரையின் அளவுக்கும், சர்க்கரை நோய்த் தாக்கத்துக்கும் உள்ள தொடர்புதான் இந்த ஆராய்ச்சியின் கருப்பொருள்.  ஒவ்வொரு 150 கலோரி சர்க்கரைக்கும் (அதாவது 9 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கோலா பாட்டிலில் உள்ள சர்க்கரை) சர்க்கரை நோயின்  தாக்கம் 1 சதவிகிதம் அதிகரிக்கிறது.

அதேசமயம், மற்ற வகை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு 150 கலோரிக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் வெறும் 0.1 சதவிகிதம் தான் கூடுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளை 'நியூயார்க் டைம்ஸ்போன்ற பிரபல பத்திரிகைகள் பிரசுரித்தன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 
டாக்டர் வால்டர் வில்லட், யேல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டேவின் காட்ஸ் ஆகியோரும் இவருடைய கருத்துக்களை ஆதரித்தனர். ஆனால்
எதிர்பார்த்தபடியே மேலை நாட்டின் சக்திவாய்ந்த சர்க்கரை ஆலை அதிபர்கள், கோலா, சாக்லேட் நிறுவனங்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள். இவர்களின் ராட்சத பண பலத்துக்கு முன்பாக அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகமும், பிரிட்டிஷ் சர்க்கரை நோய்க் கழகமும் அடிபணிந்தன. இன்றைய நவீன மருத்துவத்தை 
ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்ட நாங்களும்
ஆங்கிலேயர்களின் கருத்தையே வேதவாக்காக எடுத்துக் கொண்டுசர்க்கரையின் பல்வேறு கேடுகளையும் உணராமல் / கண்டு கொள்ளாமல் மூடி மறைக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆனால், டாக்டர் ராபர்ட் லஸ்டிக் இதோடு விடவில்லை. அவருடைய ஆராய்ச்சியில் கலந்துகொண்ட 175 நாடுகளில், 4 நாடுகள் சுதாரித்துக்கொண்டன. தென்கொரியா, பங்களாதேஷ், அல்பேனியாநைஜீரியா அகிய அந்த 4 நாடுகளும் சர்க்கரை இறக்குமதியை/இருப்பை 
வெகுவாகக் குறைத்தன. விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது. இந்த நாடுகளிலும் புதிய சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது என்கிற உண்மையை, டாக்டர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுவரை அவர் சொன்னதெல்லாம், காதுகேளாதவர்களின் காதில் 
ஊதிய சங்கு என்று இருந்த நிலையில், சிலருக்கு மட்டும் இந்த அபாயச் சங்கு 
ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது. ஆம்... அமெரிக்க இதயநோய்க் கழகம் 
(American Heart Association) இவருடைய கண்டுபிடிப்புகளை 
முழுமனதோடு ஏற்றுக் கொண்டது. அதோடு நின்றுவிடாமல் அமெரிக்க மக்களுக்கு ஓர் பரிந்துரையும் வெளியிட்டது. 'ஆண்கள் 9 ஸ்பூன் சீனியும், பெண்கள் ஸ்பூன் சீனியும் மட்டுமே தினமும் உணவில் சேர்க்க வேண்டும்என்பதே அது. அதென்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி ஒரு வித்தியாசம்சர்க்கரையால் ஏற்படும் உடல்பருமன் நோயின் தாக்கம் ஆண்களைவிடப் 
பெண்களுக்குத்தான் அதிகம் என்பதே காரணம்.

உலக சுகாதார மையமும் (WHO -World Health Organization) சற்று விழித்துக் கொண்டது. உணவில் சுத்த சர்க்கரையின் அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக  இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அது எடுத்தது.

'6, 9 ஸ்பூன் சீனிதானே? அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நம் ஊரில் காபி, டீயில் 2 ஸ்பூன் சர்க்கரை வீதம் 2 - 3 வேளை எடுத்தாலும் இந்த  உச்ச வரம்பைத் தாண்டாது. அதனால், சீனியினால் நேரடி பாதிப்பு நம் ஊர் மக்களுக்குக் கிடையாதுஎன்று பிரபல சர்க்கரைநோய் நிபுணர்களே  இப்போதும் கூறிவருகிறார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் எல்லோரும் கவனிக்கத் தவறும் உண்மை என்னவென்றால் - சர்க்கரை மாறுவேஷத்தில் பல உணவுகளில் ஒளிந்திருக்கிறது (hidden sugar) என்பதுதான். கோலா பானங்கள்
சாக்லேட்டுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், ஜாம், ஐஸ்கிரீம்
பேக்கரி பதார்த்தங்கள் இன்னும் இத்யாதி இத்யாதி... எல்லாவற்றிலும் 
ஒளிந்திருப்பது சீனிதானே? இவற்றை அன்றாடம் உண்ணும் இன்றைய குழந்தைகளும் இளையதலைமுறையினரும் உடல் பருமன் நோய்க்கும்
மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய்க்கும் ஆளாவதில் என்ன ஆச்சர்யம்?

சிங்கப்பூர் அரசாங்கம் 1991-ல் ஓர் அதிரடிச் சட்டம் இயற்றியது. பள்ளிகள்இளைஞர்கள் விடுதிகள் போன்ற இடங்களைச் சுற்றி கோலா பானங்களும், மேலே குறிப்பிட்ட மற்ற இனிப்பு பதார்த்தங்களும் விற்பனை செய்வதை தடை செய்தது அந்தச் சட்டம். அமெரிக்காவில்நியூயார்க், கலிஃபோர்னியா மற்றும் பல மாகாணங்களில் இதே மாதிரிச் சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

நம் மத்திய அரசும் சென்ற மாதம் தன் பங்குக்கு ஓர் அறிவிப்பு 
வெளியிட்டது. 'கல்வி நிறுவனங்கள் அருகில் பீட்ஸா, பர்கர் போன்ற 
துரித உணவுகளும் பானங்களும் விற்பனை செய்வது 
தடைசெய்யப்படும்’ என்றது அந்த அறிவிப்பு

மொத்தத்தில் இப்போது பலருடைய காதுகளில் சர்க்கரையின் அபாயச் சங்கொலி கேட்க ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்தானே
---------------------------------------------------------
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
வரக்கொத்தமல்லி - 0.5 கிலோ (500 gram)
வெந்தயம் 0.25 கிலோ (250 gram)...
இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து
தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக காப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

White Sugar - உயிருக்கு எமன் Slow Poison


ஐயா தயவு செய்து இந்த விஷத்தை உண்ணாதீர்கள்.
நாய்க்கு கூட குடுக்கவேண்டாம்.
sugar disease is a slow poison இதுதான் இனிப்பான செய்தி
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so Can we avoid நண்பர்களே இன்றய ஊடகங்களால்மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம். பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!
நண்பர்களே (முக்கியம்)படித்துவிட்டு பகிருங்கள்

No comments:

Post a Comment