Wednesday, June 10, 2015

புதினா

புதினாவில் உள்ள சத்துக்கள்
புதினாவில் பலவிதமான தாது சத்துக்களும், வைட்டமின் 

சத்துக்களும் 
நிறைந்துள்ளன. இதில் இருக்கும் மாங்கனீஸ், பொட்டாசியம் 

போன்ற 
தாதுக்கள் இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. ரத்த 

அழுத்தத்தை 
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் பயன்படுகிறது. ரத்தத்தை 

சுத்தி 
செய்து, ரத்த ஓட்டத்தையும் சீர் செய்கிறது.


புதினாவில் உள்ள நறுமண எண்ணெய்யும், வேதிப்

பொருட்களும் 
தசைகளின் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது. அதனால்

வயிற்றுப்பகுதி
குடல்கள் நெகிழ்ச்சியாகி, மலச்சிக்கல் நீங்குகிறது.

பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் ஆற்றல்

புதினாவுக்கு 
உள்ளது. வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஈகோலி மற்றும் 
ஹெலிகோபேக்டர் பைலோரி போன்ற பாக்டீரியாக்களை இது 
அழித்துவிடும்.

புதினா குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியது. 
வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் 
போன்றவைகளையும் புதினா கட்டுப்படுத்தும்.

வாயில் உள்ள பாக்டீரியாக்களையும் புதினா போக்கும். வாந்தி

வருவது 
போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறவர்கள் புதினாவை

உணவில் 
அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். நீண்ட நேரம் விக்கலால் 

பாதிக்கப்படுகிறவர்கள் ஒரு கைபிடி அளவு புதினாவை எடுத்து,

100 மி.லி. 
நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை வடிகட்டி

குடிக்கவேண்டும்.

புதினா பசியை தூண்டும். தலைவலி, உடல் வலி, பெண்களுக்கு

ஏற்படும் 
மாதவிடாய் கால வலி போன்றவைகளை கட்டுப்படுத்தும்.

மூக்கடைப்பு, 
சைனஸ் தொந்தரவு இருப்பவர்களும் புதினாவை உணவில்

அடிக்கடி 
சேர்த்துக்கொள்ள வேண்டும். நுரையீரலில் உள்ள சளியை 
வெளியேற்றும் சக்தி புதினாவுக்கு இருக்கிறது. ஆஸ்துமாவால்

ஏற்படும் 
நுரையீரல் இறுக்கத்தையும் புதினா கட்டுப்படுத்தும்.

புதினாவில் உள்ள ரோஸ்மானிக் ஆசிட் என்ற ஆன்டி

ஆக்சிடென்ட் 
ஒவ்வாமையை நீக்குகிறது. தோல் அரிப்பு, தடிப்பு போன்ற

பாதிப்பு 
அடிக்கடி ஏற்படுகிறவர்களும், மூக்கில் நீர்வடிதல், தும்மல் 
போன்றவைகளால் தொந்தரவு அனுபவிப்பவர்களும் தொடர்ந்து 
புதினாவை உணவில் சேர்த்து வந்தால், படிப்படியாய் அந்த

பாதிப்புகள் 
குறையும்

------------------------------------------
புதினா:-
நறுமணமும், நற்சுவையும், மூலிகைத் தன்மையும் புதினாவின் புகழுக்கு காரணம். இதில் அடங்கி உள்ள சத்துக்களை பார்க்கலாம்.
* புதினா ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம். தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. நிழல் மிகுந்த பகுதிகளில் இது நன்கு வளரும்.

* புதினாவில் தாவரங்களில் காணப்படும் சிறப்பு ரசாயன மூலக்கூறுகள் பல உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாகும்.

* புதினாவின் நோய் எதிர்ப்பு தன்மையை அளவிட்ட ஆய்வாளர்கள், 100 கிராம் புதினா 13 ஆயிரத்து 978 மைக்ரோ மூலக்கூறு டி.இ. அளவு நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என கூறுகிறார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் அளவைக் கொண்டு, நோய் எதிர்ப்பு அளவு கணக்கிடப்படுகிறது.

* கெட்ட கொழுப்புகள் எதுவும் புதினாவில் இல்லை. உடலுக்கு அவசியமான எண்ணெய்ப் பொருட்கள், வைட்டமின்கள், நார்ப் பொருட்கள் ஏராளம் உள்ளன.

* மென்த்தால், மென்த்தோன், மென்த்தால் அசிடேட் போன்ற எண்ணெய்ப் பொருட்கள் இதில் உள்ளன. இவை எளிதில் ஆவியாகக் கூடியது. தோல், தொண்டை, வாய்ப் பகுதிக்கு நன்மை அளிக்கக் கூடியது. உடலில் காணப்படும் துளைகள் சரியாகச் செயல்பட இவை துணை நிற்கும். அவற்றில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கும்.
* மென்த்தால் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. மயக்கமூட்டும் பொருளாகவும், எரிச்சலை குறைக்கும் பொருளாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
* ஐ.பீ.எஸ். மற்றும் கோலிக் பெயின் டிஸ்ஸாடர் போன்ற வியாதி பாதித்தவர்களுக்கு புதினா திரவம் உடலில் பூசப்படுகிறது. இது நோயின் திடீர் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.
* பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் புதினாவில் உள்ளன. 100 கிராம் புதினாவில் 569 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது உடல் வளவளப்பு தன்மையுடன் இருக்க அவசியமாகும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் பொட்டாசியம் பங்கு வகிக்கிறது.
* மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவை நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணைக் காரணியாக விளங்கும்.
* சிறந்த நோய் எதிர்ப்பு வைட்டமின் ஆன வைட்டமின் ஏ, புதினாவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற வைட்டமின்களும் உள்ளன. பி குழும வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், பைரிடாக்சின் மற்றும் வைட்டமின் கே ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன
====================================================

புதினா கீரையின் அற்புதங்கள்!

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

புதினா கஷாயம் தயாரிக்கும் முறை:

25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் தயாரான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா பல்பொடி தயாரிக்கும் முறை:

புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.

புதினா அனைத்துக்கும் தீர்வு தரும் காயகல்பம். எனவே அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்
====================================================

புதினா சாதம்:-

உதிர் உதிராக வடித்த சாதம் - 1/2 கப், 
புதினா இலை - 1/4 கப், 
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், 
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்,  
பச்சை மிளகாய் - 1, 
கிராம்பு - 2, 
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்), 
உப்பு - தேவையான அளவு, 
எண்ணெய் -  3 டீஸ்பூன், 
கடுகு - 1/4 டீஸ்பூன், 
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது, 
முந்திரிப் பருப்பு - 5. 


எப்படிச் செய்வது? 

கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, தனியா, கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். தேங்காய்த் துருவல் சேர்ப்பதானால்  அதையும் சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து புதினா இலைகளைச் சேர்த்து அந்தச் சூட்டிலேயே வதக்கவும். ஆறியவுடன், தண்ணீர் விடாமல் நன்கு  அரைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு, முந்திரிப்  பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து சாதக் கலவையில் சேர்க்கவும். கடைசியில் கறிவேப்பிலை சேர்க்கவும்

No comments:

Post a Comment