Saturday, April 25, 2015

நீர் / தண்ணீர் / குடிநீர்


நீர் [நீர்] [சிறுநீரகம்சிறுநீர்ப்பைவிதைப்பை (ஆண்களுக்கு)கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

  • நீரை வடிகட்டி குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
  • மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது காலிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது. 
  • தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
  • தண்ணீரில் உள்ள நீர்ச்சத்து தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்.
  • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தினால் அதிலுள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். அப்படி குடிக்க நேர்ந்தால் நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்] போன்றவற்றை பருக வேண்டும். 
  • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
  • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
  • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 
  • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
  • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

+++++++++++++++++++++++++++++++

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவரம்பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்துவந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை, உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.!

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

‪‎ஒருலிட்டர்‬ தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,முகத்தில் ஏற்படும் கருவளையம்,தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு. ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது. ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான். ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்
--------------------------------------------------------------------------

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை வழிமுறைகள்

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும்கருவிகள் ஆயிரம் வந்தாலும், 

இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை 

எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் 

காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை 
சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் 
நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை 
தந்த சுத்திகரிப்பான் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.
தேத்தான் கொட்டை:
நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை. 
தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் 
கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் 
நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் 
மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு 
வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் 
கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான 
தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.நாட்டு 

மருந்து 
கடையில் கிடைக்கும்


முருங்கை விதை:
தேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள 
பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு 
படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி 
குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
துளசி:
துளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. 
இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.

செப்புப் பாத்திரம்:
உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், 
உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், 
செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். 
நிலைவெள்ளி பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு 
குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் 
அடியோடு நீக்கிவிடும்.

வாழைப்பழத் தோல்:
வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் 
என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள 
நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். 
செலவும் 
குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் 



திரும்பப் பயன்படுத்தலாம்.



வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் 
கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் 
ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் 
குறைக்கும்
---------------------------------------------------
தண்ணீர் வகைகள்
1.மழை நீர்.

2.ஆலங்கட்டி நீர்.

3.பனி நீர்.

4.தண்ணீர்.

5.ஆற்று நீர்.

6.குளத்து நீர்.

7.ஏரி நீர்.

8.சுனை நீர்.

9.ஓடை நீர்.

10.கிணற்று நீர்.

11.ஊற்று நீர்.

12.அருவி நீர்.

13.நதி நீர்.

14.பாறை நீர்.

15.அடவி நீர்.

16.சிவந்த நீர்.

17.கருமை நீர்.

18.வயல் நீர்.

19.நண்டுக்குழி நீர்.

20.பாசி நீர்.

21.பலவகை நீர்.

22.குளிக்க.

23.குடிக்க உதவாத நீர்.

24.நீராகார நீர்.

25.காடி நீர்.

26.உப்பு நீர் .

27.கடல் நீர்.

28.நாவல் நீர்.

29.கருங்காலி நீர்.

30.இலவு நீர்.

31.வாழை நீர்.

32.மட்டை.

33.இளநீர்.

34வெந்நீர்.


மழை நீர்:

சீதளம் பொருந்திய மழை நீரால் இவ்வுலகில் வாழும் அனைத்து 

மக்களுக்கும் குளிர்ச்சி், நல்லறிவு, .சுக்கிலம், சோணிதம் ஆகிய 

நோய்கள் நீங்கும்.

ஆலங்கட்டி நீர்:

குளிர்ச்சியை உண்டாக்கும். சிலேஷ்மம், பிரமேகம், பெரும்பாடு, 

கண்ணின் புகைக் கம்மல், கை கால் எரிச்சல், விக்கல், சுவாசம், 

மயக்கம் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

பனி நீர்:

சூரிய உதயத்தின் போது பனி நீரைப் பருகினால் சொறி, கிரந்தி, 

குஷ்டம், தாபம், காசம், கிராணி, தனி வாதம், திரிதோஷம், தேக 

வறட்சி, நீரழிவு ஆகியவை அடியோடு நீங்கும்.

தண்ணீர்:

தண்ணீரின் குணமானது மண்ணின் குணமே அல்லாமல் வேறு 

இல்லை. ஆறு, குளம், ஏரி, மடு, கிணறு, சுனை என்னும் 

ஆறுவகை இடங்களில் தங்கி அவற்றின் குணங்களையே 

பெற்றுள்ள நீரைப் பருகினால், அந்தந்த நீருக்கு ஏற்ப இயல்பு 

என்று கூறுவர்.

ஆற்று நீர்:

வாதம், பித்த கோபம், கபதோஷம், தாகம், உடலில் பித்த 

சம்பந்தமான சில நோய்கள் இவற்றைப் போக்கும். சுக்கில 

விருத்தியை உண்டாக்கும்.
குளத்து நீர்:

வாத ரோகத்தை விருத்தி செய்வதோடு, மதுப்பிரமேகத்தையும், 

சீதளத்தையும் உண்டாக்கும்.
ஏரி நீர்:

துவர்ப்புச் சுவையுடைய ஏரி நீர் வாயுவை அதிகரிக்கச் செய்யும்.
சுனை நீர்:

கற்சுனை நீரானது வாத பித்த தோஷமாகும். அதை ஒருநாள்

வைத்து விட்டு மறுநாள் பருகினால் குளிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி

உண்டாகும். சுனை நீரை அருந்தியவருக்கும் அந்நீரில்

குளித்தவர்க்கும் இருமலோடு கூடிய சீதசுரம், வாதகோபம்,

கபவாத ரோகம், பயித்திய தோஷம் ஆகியவை உண்டாகும்.
ஓடை நீர்:

துவர்ப்பும் மதுரமும் உடைய ஓடை நீ்ர் அருந்துபவர்களுக்கத்

தாகம் உண்டாகும். தோள் வலிமை உண்டாகும்.
கிணற்று நீர்:

மிகுதியான தாகம், உஷ்ண தீபனம், தேக அழற்சி, சூலை, சரீரத்து

உட்கடுப்பு, இடுப்பு வலி, மயக்கம், வீக்கம், பித்த தோஷம்,

சுவாஷம் ஆகியவை நீங்கும்.
ஊற்று நீர்:

மதுராமான ஊற்று நீரானது மிகுந்த பித்தத்தை உண்டாக்கி

உடனே சாந்தி செய்யும்.
அருவி நீர்:

மலை அருவி நீரானது பிரமேகத்தையும் இரத்த பித்த

ரோகத்தையும் நீக்கும். சிலேஷ்மத்தையும் தேக பலத்தையும்

உண்டாக்கும்.
ஒன்பது வகையான நதி நீர்:

கங்கை நதி நீர்.


யமுனை நதி நீர்.

கோதாவரி நதி நீர்.

துங்கபத்திரா நதி நீர்.

நரமதா நதி நீர்.

சிந்து நதி நீர்.

வைகை நதி நீர்.

காவிரி நதி நீர்.

தாமிரபரணி நதி நீர்.

கங்கை நதி நீர்:

அக்கினியை நிகர்த்த கங்கை நதி நீரை அருந்தினால் உட்சூடு,

மந்தாக்கினி, ஷயம், பித்த கோபம், வாதாதிக்கம், கீழ்ப்பிரமேகம்,

தேக எரிச்சல், தாகம் ஆகியவை நீங்கும்.
யமுனை நதி நீர்:

அதிக சுரம், வெண்குஷ்ட ரோகம், இருமல், வெட்டை, தாகம்,

பித்த வாந்தி, சுவாசம், அயர்வு, விந்து நஷ்டம், வெண்பாண்டு

ரோகம் ஆகியவை அழியும்.
கோதாவரி நதி நீர்:

முத்தோஷ கோபம், பலவிதச் சொறிகள், உள்சிரங்கு, நடுக்கல்

சுரம் ஆகியவை நீங்கும்.
துங்கபத்திரா நதி நீர்:

வெப்பம், எலும்புருக்கி நோய், கரப்பான், விந்து நஷ்டம்,கண்

புகைச்சல், இருமல் மூத்திரக் கிரிச்சுரம், சரீரத்தின் நிற மாறுதல்

ஆகியவற்றை நீக்கம்.
நர்மதா நதி நீர்:

வாந்தி, சுரம், விக்கல், காமாலை, வயிற்று உப்புசம், கைகால்

எரிச்சல், பித்த வாந்தி, கிரிச்சரம், கபச் சேர்க்கை, சிலேஷ்ம வாத

தொந்தம் ஆகியவை நீங்கும்.
சிந்து நதி நீர்:

சரீரக் குடைச்சல், புத்தி மயக்கம், வெட்டைப் புண், வியர்வை,

தாது நஷ்டம், அஸ்தி சுரம், வெள்ளை, மூத்திர கிரிச்சரம், தாகம்

ஆகியவை விலகும்.
வைகை நதி நீர்:

வாத மேகம், குஷ்டம், சோபா ரோகம், கரப்பான், தேக எரிச்சல்,

தாகம் பாத‌ஷேபக வாதம், தாது நஷ்டம், சில விஷங்கள்

முதலியன நீங்கும்.
காவிரி நதி நீர்:

வயிற்று உப்பிசம், இருமல், இரைப்பு, வீக்கம் கபக்கட்டு, ஆயாசம்,

சலதோஷம், ரத்த குன்மம், நாவறட்சி, ஆகியவை நீங்கி அழகு

உண்டாகும்.
தாமிரபரணி நதி நீர்:

சகல சுரம், பித்ததோஷம், கண் புகைச்சல், உட்சுரம், சுவாசநோய்,

ஷயம், எலும்புருக்கி, கை கால் எரிவு, அதிக தாகம் ஆகியவை

விலகும்.
மூவகையான குளத்து நீர்:
தாமரைக் குளத்து நீர்.

அல்லிக்குளத்து நீர்.

அதிகக் குளிர்ச்சியுள்ள குளத்து நீர்.
தாமரைக் குளத்து நீர்:

வாத பித்த தொந்தம், புராதன சுரம், அதிக தாகம் ஆகியவை

விலகும்.
அல்லிக்குளத்து நீர்:

அஜீரண பேதி, சொறி, புண், சுரம், கண்ட நோய், தாது நஷ்டம்

இவைகளை உண்டாக்கும்.
அதிக குளிர்ச்சியுள்ள குளத்து நீர்:

தேகக் கட்டு விடல், விக்கல், வாத சிலேஷ்மம், தொந்தம்,

வண்டுக்கடி, வாந்தி, குளிர், காசம், வயிற்று வலி ஆகியவை

உண்டாகும். அதில் சரீரம் ஊறுமானால் பலநோய்கள்

உண்டாகும்.
பாறை நீர்:

உவர்ப்பைத் தருகின்ற பாறை நீரினால் தேகம் சில்லிடல், வாத

கோபம், தீராச்சுரம் ஆகியவை உண்டாகும்.
பாறை நீர் இருவகைப்படும்:

சுக்கான் பாறை நீர்.

கரும்பாறை நீர்.
சுக்கான் பாறை நீர்:

மூத்திரக் கடுப்பு, நெஞ்சில் கபக்கட்டு, பித்தாதிக்கம், கப

சம்பந்தமான நோய்கள், மனோ வியாதி ஆகியவற்றை

உண்டாக்கும். ஆனால் மகாவாத ரோகத்தை விலக்கும்.
கரும்பாறை நீர்:

வீக்கம், வாந்தி, பெரும்பாடு, பித்த சுரம் மயக்கம், நீர்க்கடுப்பு,

தாகம் இவற்றை விலக்கும். வீரியம், புத்தி, அழகு ஆகியவற்றை

உண்டாக்கும்.
அடவி நீர்:

காட்டாற்று நீரானது அதிக சீதளம், தேக பாரிப்பு, இளைப்பு சரீரம்,

வயிறு, நாவி ஆகிய இடங்களில் வெப்பம், தலைக்கனம், கடும்

விஷச் சுரம் இவை உண்டாகும்.
சிவந்த நீர்:

சிவந்த நிறமு‌டைய நீரால், இருமலால் உண்டான பித்த உஷ்ணம்

விலகும். சுரமும் எரிச்சலும் விந்து நஷ்டமும் உண்டாகும்.
கருமை நிற நீர்:

வாந்தி, கரப்பான், உஷ்ணம், எரிச்சல், மார்ப்புச் சளி, காசம்,

சுவாசம், விடாச்சுரம், புளித்த ஏப்பம், சலதோஷம், தாகம்,

நடுக்கல்ஆகியவற்றை விலக்கும். பசி உண்டாகும்.
வயல் நீர்:

நெல் கழனிகளில் இருக்கும் நீர் பிரமேகம், தாகம், தாகம்,

வெள்ளைச்சுரம், மூர்ச்சை, ரத்த காசம், சுரவேகம் இவற்றை

விலக்கும். சப்த தாதுக்களும் குளிர்ச்சியடைந்து தேகம்

வலுவாகும்.
நண்டுக் குழி நீர்:

வயல்களில் இருக்கின்ற நண்டுக் குழி நீரினால் வமனம்,

வெப்பம், நீங்காத விக்கல், எரிச்சல் ஆகியவை நீங்கும்.
பாசி நீர்:

வழு வழு என இருக்கும் பாசி நீரானது பல வியாதிகளை

உண்டாக்கும்.
பலவகை நீர்:

ஊற்றுள்ள ஓடை நீர் எல்லா விதமான நோய்களையும் தீர்க்கும்

கட்டுக் கடை நீரால் குடல் வாதம் உண்டாகும். பனி மாசுபடிந்த

நீரானது பித்த கோபத்தை விலக்கும். சருகு ஊறிய நீரானது சுர

ஆதிக்கத்தை உண்டாக்கும். ஜீவ நதி நீரால் அழகு உண்டாகும்.

நிழலை அடைந்த சுனை நீரால் பெரு வயிறு உண்டாகும்.

மழைநீர் தளர்ந்த தேகத்தை வலிமையுடையதாக்கும்.
இறைக்காத கிணற்று நீர் ஷயத்தை வளர்க்கும். வருவதும்

போவதுமாக உள்ள குளத்து நீரால் நோய் தோன்றாது. மாறாத

குளத்து நீர் நோயை உண்டாக்கும்.
குளிக்க, குடிக்க உதவாத நீர்:

சூரிய, சந்திர கிரணங்கள் காற்று முதலியவை அணுகாததும்,

கிருமி துர்வாசனை, சேறு தடித்தல், சருகு உதிர்தல், ருசி

இல்லாத 

நீர் குடிக்கவோ குளிக்கவோ ஆகாது. அவ்வாறு நேர்ந்தால் 
பலவிதமான நோய்கள் உண்டாகும்.
நீராகார நீர்:

மதுரமான நீராகார தெளிந்த நீரானது வாத பித்த சிலேஷ்ம

வறட்சிகளையும், தாபத்தையும் விலக்குவதோடு

சுக்கிலத்தையும், அழகையும் விருத்தி செய்யும்.
காடி நீர்:

பழைய காடி நீரால் பித்த மயக்கமும் சோபா ரோகமும் சிற்சில

ரோகங்களும் அசீரணமும் வாதாதி சாரமும் அதிகமாகி

ஔஷதங்களின் நற்குணங்களும் விலகும்.
உப்பு நீர்:

சரீரத்தில் குத்துகின்ற வாயுவும், அற்ப உணவும், பித்தம்

அதிகரிப்பும், வாய் துவர்ப்பாக ஊறும் நீரும் அதிகரிக்கும்.

குடல்வாதம் நீங்கும்.
கடல் நீர்:

கவிகை என்னும் ஒருவித உதரரோகம். பெருவியாதி, சரீரக்

குடைச்சல், ரத்த குன்மம், வாத குணம், உதிர வாதம்,

நீராமைக்கட்டி, பெருவயிறு, பிலிகம் பற்றிய நோய் ஆகியவை

நீங்கும். கடல் நீரைக் காய்ச்சிப் பருகினால் வாத குன்மம்,

குடற்கரி ரோகம், மல சல பந்தம், மிகுந்த உழைப்பினால் வந்த

நோய்கள், தேகக் கடுப்பு, சோணித வாதம், நடுக்கு வாதம்,

நாக்குப் பிடிப்பு, பல் இடுக்கில் ரத்தம் வருதல், பல் விழுதல், சந்நி

தோஷம் ஆகியவை விலகும்.
நாவல் நீர்:


நாவல் வேர் ஊறிய நீரானது பித்தாதி சாரத்தையும், மது

மேகத்தையம் நீக்கும். சுக்கில விருத்தி, அதிக குளிர்ச்சி, தேக

பலம், சுரம், சிலேஷ்ம கோபம், அக்கினி மந்தம் இவற்றை

உண்டாக்கும்.
கருங்காலி நீர்:

கருங்காலி வேர் ஊறிய நீரானது பித்த ஷயம், குஷ்டம், பித்த

குன்மம், மகோதரம் பெரும் பூநாகக்கிருமி, ரத்த பசையற்ற

திமிர்வாதம், நீரழிவு ஆகியவை நீங்கும்.
இலவு நீர்:

இலவமரத்தின் வேர் ஊறிய நீரால் அஷ்ட குன்மம், நீரழிவு,

உட்சூடு, ரத்தம் மற்றும் ரணக்கிருமி ஆகியவை விலகும்.
வாழை நீர்:

வாழைக் கிழங்கில் ஊறுகின்ற சீதோஷ்ண நீரானது பெருவயிறு,

ரத்த கிரீச்சுரம், எரி மூத்திரம், அற்பவிரணம், சோமரோகம்,

அயர்வு கழலை நோய்பாண்டு, எலும்பு உருக்கிமுதலியவற்றை

விலக்குவதோடு தேகத்துக்கு வலிமையை உண்டாக்கும்.
மட்டை நீர்:

தெங்கு, பனை முதலிய மட்டைகளில் பழிந்த நீரினால் மூத்திர

கிரிச்சரம், நீரழிவு, பவுத்திர ரோக விரணம், வயிற்றுக் கடுப்பு

ஆகியவை நீங்கும்.
இளநீர்:

இளநீரை முறையாகப் பருகினால் வாத கோபம், பித்த தோஷம்,

வெப்பம், தேகபாரிப்பு, சுபாதிக்கம், மன அழுத்தக் கோபம்,

வமனம், அதிசாரம் ஆகியவை நீங்கும். மனத்தெளிவு, நேத்திரத்

துலக்கம், குளிர்ச்சி, மூத்திரப் பெருக்கம், மலப்போக்கு

ஆகியவை

உண்டாகும். இது உஷ்ண சீதளத்தை உடையது.
இளநீரின் வகைகள்:
செவ்விள நீர்.

பழைய இளநீர்.

உணவுக்கு முன் அருந்தும் இளநீர்.

உணவுக்கு பின் அருந்தும் இளநீர்.

மூன்று வித இளநீர்.

புதிய பழைய இளநீர்.

கேளி இளநீர்.

பச்சை இளநீர்.

மஞ்சள் கச்சி இளநீர்.

அடுக்கு இளநீர்.

கரு இளநீர்.

சோரி இளநீர்.

ஆயிரங்கச்சி இளநீர்.

குண்டறக் கச்சி இளநீர்.
செவ்விள நீர்:

தினமும் செவ்விள நீரைப் பருகினால் பித்த விருத்தி, தாகம், வழி

நடையால் ஏற்பட்ட இளைப்பு, அயர்வு பற்பல ஷயம் ஆகியவை

நீங்கும்.
பழைய இளநீர்:

அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை நீங்கும்.

ஜடராக்கினி அதாவது வயிறு எரிதல் உண்டாகும்.

உணவுக்கு முன் அருந்தும் இளநீர்:

காலை ஆகாரத்துக்கு முன் இளநீர் பருகினால் பசி நீங்கும்.

குன்மம் உண்டாகும். மாலையில் அருந்தினால் பெரிய கிருமிகள்

ஒழியும்.
உணவுக்கு பின் அருந்தும் இளநீர்:

உணவு உண்டபின் இளநீரைப் பருகினால் வாத பித்த கோபம்

தனியும். தனிப்பித்த தோஷம் விலகும். தாராளமாக மலம்

கழியும். அதி தீபனமும் உண்டாகும். நோய் அணுகாது. தேகம்

மினுமினுக்கும்.
மூன்று வித இளநீர்:

மட்டை சீவி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி ‌ஆற்றிய இளநீரானது

இருமல், சலதோஷம், வறட்சி, சுரம் இவற்றைப் போக்கும்.

செவ்விள நீரானது பித்த தோஷத்தை நீக்கும். கெவுளி பாத்திரை

என்னும் இளநீரை அருந்தினால் உஷ்ணம் நீங்கும்.
புதிய பழைய இளநீர்:

இள வழுக்கையுடைய புதிதாகப் பறிக்கப்பட்ட இளநீரைப்

பருகினால் பித்த கோபம் விலகும். பழைய இளநீரைப்

பருகினால்

ஜலதோஷம் முதலான ரோகங்கள் உண்டாக

வாய்ப்பு உண்டு.
கேளி இளநீர்:

இதைப் பருகுபவர்க்கு ரத்த மேகம், மலக்கிருமி, விதாகம்,

மந்தாக்கினி, கரப்பான், அதிசுரம் ஆகியவை நீங்கும்.
பச்சை இளநீர்:

இதை அருந்தினால் சீழ்ப்பிரமேகம், பழைய சுரம், கபாதிக்கம்,

எரிகிருமி, யானைச் சொறி, கண்நோய் இவற்றைப் போக்கும்.
மஞ்சள் கச்சி இளநீர்:

பித்ததோஷம், சோபை, சிலேஷ்ம ஆதிக்கம், பழைய சுரம்

ஆகியவை விலகும்.
அடுக்கு இளநீர்:

நித்திரைக்கு முன் அடுக்கு இளநீரை அருந்தினால்

கபதோஷமும்,

மலப்பை பற்றிய கிருமியும் போகும். நன்மையும் உண்டாகும்.
கரு இளநீர்:

கருமை இளநீரால் கப ஆதிக்கமும், புழு நெளிகின்ற கரப்பானும்

நீங்கும். ஜேகம் மகிழ்ச்சியும் உண்டாகும்.
சோரி இளநீர்:

இதைப் பருகினால் வீக்கமும், வயிற்றிலுள்ள பூச்சியும், சன்ன

கிருமியும் போகும். தேகம் அழகாகும். தெளிவான பேச்சு

உண்டாகும்.
ஆயிரங்கச்சி இளநீர்:

வெப்பமும், பசியும் ஆமவாதமும் நீங்குவதோடு கபம், தொந்தம்,

நமைச்சல், பிரணஞ் சூழ் குன்மம் ஆகியவை தீரும்.

குண்டற கச்சி இளநீர்:

இதனால் அருசி, விதாகம், நாள்பட்ட பழைய மலம் ஆகியவை

நீங்கும். ஜடராக்கினி உண்டாகும்.
வெந்நீர்:

அளவோடு குடிக்கும் வெந்நீரினால் நெஞ்சு எரிவு, நெற்றி வலி,

நீங்காத புளியேப்பம், குன்மம் சீதக்கட்டுச்சுரம், காசம் இவை

நீங்கும்.
வெந்நீரின் வகைகள்:
காய்ச்சி ஆறிய வெந்நீர்.

கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்.

முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்.

உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்.

பொற்கெண்டி வெந்நீர்.

வெள்ளிக்கெண்டி வெந்நீர்.

உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்.

பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்.

இரும்புக் கெண்டி வெந்நீர்.
காய்ச்சி ஆறிய வெந்நீர்:

காய்ச்சி ஆறிய வெந்நீரைக் குடித்தால் உ‌ழலைநோய், வீக்கம்

பேதியால் இளைத்த பித்த கோபம், மூர்ச்சை, சில் விஷங்கள்,

வாந்தி, மயக்கம், சுக்கில மேகம், திரிதோஷம், கண்வலி,

செவிக்குத்தல், சூலை, குன்மம், சுரவேகம், கோழை வாதாதிக்கம்

இவை தீரும்.
கால்பாகம் அரைபாகம் காய்ந்த வெந்நீர்:

வைத்த அளவில் கால்பாகம் சுண்டிய வெந்நீரால் பித்த கோபம்

நீங்கும். அரைபாகம் சுண்டிய வெந்நீரால் வாத பித்த தோஷம்

நீங்கும். அதை மறுநாள் வைத்து அருந்தினால் திரிதோஷம்

கோபம் விலகும்.
உணவுக்கு முன், பின், மத்தியில் அருந்தும் வெந்நீர்:

உணவுக்கு முன் வெந்நீரைக் அருந்தினால் பசி குறையும். அதன்

பிறகு குடித்தால் நன்மை உண்டாகும். சாப்பிடும் போது நடுவில்

அருந்தினால் பசியும் மத்தியாகும். மேலும் இவை வாத சுரத்தை

நீக்க வல்லது.
முக்கால் பாகம் காய்ந்த வெந்நீர்:

முக்கால் பாகம் சுண்டிய வெந்நீரால் வாத விருத்தி, குளிர்

நடுக்கல், கொடுஞ்சுரம், பலவிதமான பேதி, திரிதோஷங்கள்

நீங்கும்.
பொற்கெண்டி வெந்நீர்:

வெந்நீரைப் பொற் கெண்டியில் ஆற வைத்து அருந்தினால்

வாதவிருத்தி, கபகோபம், அரோசகம், சரீர உஷ்ணம், சுரம் இவை

நீங்கும். சுக்கிலமும், நல்லறிவும் ஸ்பரிச ஞானமும் உண்டாகும்.
வெள்ளிக்கெண்டி வெந்நீர்:

எட்டில் ஒரு பாகம் காய்ச்சிய வெந்நீரை சரிகை

வெள்ளிக்கெண்டியில் ஊற்றிச் சாப்பிட்டால் உஷ்ணம், தாகம்,

குன்மம், பித்தம் இவை விலகும். தேகத்துக்கு வலிமையும்,

புஷ்டியும் உண்டாகும்.
உலோகங்களில் பயன்படுத்தும் வெந்நீர்:

தாமிரக் கிண்ணத்தின் வெந்நீர் கண் புகைச்ச‌லையும், ரத்த பித்த

நோயையும் நீக்கும். வெள்ளிக்கிண்ணத்து வெந்நீர் கப நோயை

அகற்றும்.
பஞ்சலோக் கிண்ணத்தின் வெந்நீர்:

மூன்று விதமான தோஷங்களை நீக்க வல்லது. வெண்கலப்

பாத்திர வெந்நீர் உதிரத்தைப் பெருக்கும். கெண்டில் காய்ந்த

வெந்நீரை ஆற்றிக் குடித்தால் சுரம், சிரங்கு, அசதி, கை கால்

இடுப்புக் குடைச்சல் நீங்கும்.
இரும்புக் கெண்டி வெந்நீர்:

பாண்டு ரோகம் நீங்கும். தாது, விருத்தி, நரம்புகளுக்கு உறுதி,

உடலில் சீதோஷ்ணம் உண்டாகும்.
“சுத்தமான நீரைப் பருகுவோம்; சுகாதாரமான வாழ்வு

வாழ்வோம்”
------------------------------------------

ஓய்வைப் பொறுத்த வரை உடலே தேவையின் போது அதைப்

பெற்றுக் கொள்ளும். தூக்கமும், ஓய்வும் ஒன்றுதானே? என்ற

சந்தேகம் உங்களுக்கு வரலாம். தூக்கம் என்பது உடலுக்கு

அவசியமான, இரவில் மட்டுமே முழுமையாக நடைபெறும் 

விஷயம். ஆனால் ஓய்வு என்பது நம் உடல் சோர்வுறும் 

போதெல்லாம் எடுத்துக் கொள்ளும் உடனடி புத்துணர்ச்சி.
தொடர்ந்து நாம் ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது,

இடையில் ஒரு அயர்ச்சி ஏற்படுகிறது அல்லவா? அந்த நேரத்தில்

ஒரு இடைவெளி தருவதுதான் ஓய்வு. நடக்க முடியாத போது

உட்காருவதும், உட்கார முடியாத போது எழுந்து நிற்பதும்,

வேலை செய்யும் போது சற்று இளைப்பாறிக் கொள்வதும்,

அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் உடல் சோர்வுறும்

போது படுத்து ஓய்வெடுத்துக் கொள்வதும் உடலைப்

புத்துணர்ச்சி


அடையச்செய்யும். இதுமாதிரியாக நாம் இடைவெளி தராமல் 
தொடர்ந்து வேலை செய்வோமானால் ஒரு கட்டத்தில் உடல் 
கட்டாய ஓய்வைக் கோரும். அப்போது நம்மால் இயங்க முடியாத 
அளவிற்கு உடல் களைத்துப் போகும். எனவே, உடலிற்கான 
ஓய்வை உடலே கேட்டுப் பெறும். உடல் கேட்கிற சிறு 
ஓய்வுகளை 
அவ்வப்போது நாம் கொடுத்து வருவோமானால், எதிர்ப்பு சக்தி 
என்னும் மருத்துவர் முழு பலத்தோடு நம்முடன் இருப்பார்.
அடுத்ததாக தாகம். தாகம் என்பது உடலின் நீர்த்தேவையைக்

குறிக்கிறது. பசி எவ்வாறு உணவு கேட்கிறதோ அதே போல

தாகம் என்பது தண்ணீர் கேட்கிறது. உடல் கேட்காமல் நாம்

தண்ணீர் தர வேண்டியதில்லை. உடலில் எப்போதெல்லாம்

நீர்த்தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நம் உடல்

தண்ணீரைக் கேட்டு தாகத்தை ஏற்படுத்துகிறது. பசியில்லாத

போது நாம் சாப்பிட்டால் எப்படி உடலுக்குச் சுமையாக மாறுமோ,

அது போலவே தாகமில்லாத போது அதிகமான தண்ணீர்

குடிப்பதும் உடலுக்குச் சுமையாக மாறும்.
இப்போது நமக்கு ஒரு சந்தேகம் ஏழலாம். அதிகாலையில்

இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது என்ற

கருத்து பொதுவாக இருக்கிறதே.. அதுவும் உடலுக்குச் சுமையை

ஏற்படுத்துமா? ஆம். கண்டிப்பாகச் சுமையை ஏற்படுத்தும். ஒரு

நாளைக்கு ஒரு மனிதனுக்கு ஏற்படும் மொத்தத் தண்ணீர்த்

தேவையின் அளவுதான் இரண்டு லிட்டர். இதுவும் ஒரு

சராசரியான கணக்குத் தான். சராசரி என்றாலே யாருக்கும்

பொருந்தாத ஒரு கணக்கு என்று பொருள். அப்படிக் கூறப்பட்ட

சராசரி அளவின் அடிப்படையில், ஒரு நாள் முழுக்கத்

தேவையான தண்ணீரை காலையிலேயே குடித்து விட்டால்

நல்லதுதான் என்ற கருத்தின் அடிப்படையில் அப்படிக்

கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவையும்

மொத்தமாகச் சாப்பிட்டு விட முடியுமா? அது போன்றதுதான்

மொத்தமாக தண்ணீர் குடிப்பதும்.

பொதுவாக ஒரு மனிதனுக்கு காலையில் தாகம் இருக்குமா?

இரவு முழுக்க தூக்கத்தில் கிடைத்த குளிர்ச்சியின்

புத்துணர்ச்சியில் பெரும்பாலான நபர்களுக்கு காலை

எழுந்தவுடன் தாகம் இருக்காது. அந்த நேரத்தில் தண்ணீர்

குடிப்பது தேவையற்ற வீண் வேலை. அப்படி இரண்டு லிட்டர்

தண்ணீரை ஒரே தடவையில் குடிக்க முயற்சி செய்து பாருங்கள்?

உங்கள் உடல் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். குமட்டல்

உணர்வு தோன்றும். அதையும் மீறி தண்ணீர் குடித்தால் வாந்தி

வந்துவிடும். அப்படியானால் உடல் என்ன சொல்ல

விரும்புகிறது? தண்ணீரை இப்போது குடிக்க வேண்டாம் என்று

உடல் தடுக்கிறது. எப்போது தாகம் இருக்கிறதோ அப்போது

தண்ணீர் குடித்தால் போதும். இங்கே நாம் கவனிக்க வேண்டிய

விஷயம் என்னவென்றால் தாகத்திற்கு தண்ணீருக்குப் பதிலாக

குளிர்பானங்களோ, டீ அல்லது காபி போன்றவைகளையோ

தரக்கூடாது. தாகத்திற்கு தண்ணீர் தான் பொருத்தமானது.

சுவையுள்ள பிற பானங்கள் அனைத்தும் உணவுப்பொருட்கள்.

அவற்றை தண்ணீருக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல, பசித்து சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க

வேண்டியதில்லை என்பது பொதுவிதி. ஏனென்றால் பசி

இருக்கும் போது தாகம் ஏற்படுவதில்லை. தாகம் இருக்கும்

போது


பசி ஏற்படுவதில்லை. ஆனால், இந்த பொதுவிதி நம் 
உணவுகளைப் பொருத்து மாறுபடும். நாம் சாப்பிடுகிற உணவு 
அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் தன்மையோடும், மசாலாப் 
பொருட்களின் மிகுதியால் தண்ணீர் தேவைப்படும் நிலையும் 
சில 
நேரங்களில் ஏற்படலாம். பொதுவிதியின் படி சாப்பிட்டு அரை 
மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் குடிப்பேன் என்று உடலை 
மறுக்க வேண்டியதில்லை. பொதுவிதியை விட, உங்கள் உணவு 
மாற்றத்தால் ஏற்படும் உடலின் தேவைதான் மிக முக்கியம். 
சாப்பிடும் போது தண்ணீர் தேவை ஏற்பட்டால் தேவையான 
அளவு தண்ணீர் குடிக்கலாம். அப்படி குடிப்பது செரிமானத்தை 
எளிமையாக்கும்.
தாகத்திற்கு தண்ணீர் குடிக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய

முக்கியமான விஷயம் தண்ணீரின் அளவு பற்றியதுதான்.

எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு தாகம்

இருக்கும் போது என்ற விடையையும், எப்போது தண்ணீர்

குடிக்கக்கூடாது என்ற கேள்விக்கு தேவையில்லாத போது என்ற

விடையையும் நாம் அறிந்து கொண்டோம். எவ்வளவு தண்ணீர்

குடிக்க வேண்டும் என்பது முக்கியமானது.
நாம் சாதாரணமாக தண்ணீர் குடிக்கும் போது ஒரு பாட்டிலில்

தண்ணீரை ஊற்றுவது போல உதடு ஒட்டாமல் தூக்கிப்பிடித்து

வாய்க்குள் ஊற்றுகிறோம். இப்படி ஊற்றும் போது பாட்டில்

நிறைவது போல நம் இரைப்பை நிறைகிற வரை தண்ணீர்

ஊற்றுவோம். ஆனால் உடலின் தேவை எவ்வளவு என்பதை நாம்

எப்படி உணர்வது? தண்ணீர் குடிக்கும் போது உதடுகள் நனையும்

படி, வாய் வைத்து குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும் போது

உடல் தேவையான அளவை மட்டுமே உள்ள அனுமதிக்கும். கட


கடவென்று உதடு படாமல் லிட்டர் கணக்கில் தண்ணீர் 
குடிப்பவர்கள், வாய் வைத்து உதடு பட்டு தண்ணீர் குடிக்கும் 
போது குறைந்து அளவு தண்ணீரே போதுமானதாக 
உணர்வார்கள். இந்த ஒரு மாற்றத்தை நாம் தண்ணீர் 
அருந்துவதில் செய்வோமானால் உடலின் நீர்ச்சமநிலை 
எப்போதும் சரியாக இருக்கும்.
....................................................................................................................
உடலின் அடிப்படைத் தேவைகளான பசி, தூக்கம், தாகம், ஓய்வு

போன்றவற்றை கவனித்து, அவற்றை நிறைவு

செய்வோமானால்

முழு ஆரோக்கியத்தை நாம் நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு நம்முடைய எதிர்ப்பு சக்தி என்னும் மருத்துவர் முழு

பலத்தோடு இயங்குவதற்கு துணைநிற்க முடியும். நம் அக

மருத்துவர் முழு பலத்தோடு இருக்கும்போது சராசரி

மனிதர்களைப் போல நாம் ஒவ்வொன்றையும் பார்த்து பயப்பட

வேண்டியதில்லை.
உடலின் எதிர்ப்பு சக்தியை வலுவானதாக வைத்திருந்தால்

எதிர்வரும் நோய்களைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. சரி.

இது நோயை வருமுன் காக்கிற ஒரு வாழ்வியல் திட்டமாக

இருக்கிறது. ஆனால் நோய்வாய்ப்பட்ட நிலையில், அதன்

தொந்தரவுகள் உடலைப் பாதித்த நிலையில் நாம் இதே

முறைகளைக் கையாளலாமா? இங்கே நாம் கற்றுக்கொண்ட

முறை என்பது எல்லா காலங்களிலும் பயன்படுவது. நம்முடைய

உடலில் தொந்தரவுகள் ஏற்படுவதற்கு நம் பழக்கவழக்கங்களின்

மூலம் உடலில் தேங்கிய கழிவுகள் தான் காரணம். இந்தக்

கழிவுகள் நம் எதிர்ப்பு சக்தியால் வெளியேற்றப்படுவதைத் தான்

நாம் தொந்தரவுகளாக உணர்கிறோம். நாம் விளங்கிக்கொண்ட

பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கும் போது புதிய கழிவுகள்

தேங்காமல் இருப்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே நம் உடலில்

தேங்கியுள்ள கழிவுகளும் வெளியேற்றப்படும். நம் உடல் எந்த

விதமான பாதிப்புகளை அடைந்திருந்தாலும், அது கழிவுகளால்

ஏற்பட்டதுதான். அக்கழிவுகளை வெளியேற்றுகிற வேலைகள்

நடைபெறவும், பாதிப்படைந்த உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி

அடையவும் மேற்கண்ட வாழ்வியல் முறை துணைபுரிகிறது.

நாம் இம்முறையைப் பின்பற்றும் போது நம் உடலில் சில

மாறுதல்கள்...? ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு நபர் தன்னுடைய இருபதாம் வயதிலிருந்து புகை

பிடிக்கிறார். இப்போது அவருக்கு வயது ஐம்பது. தன்னுடைய

ஐம்பதாம் வயதில் உடல் ரீதியான பலவிதத் தொந்தரவுகள்

ஏற்பட்டதால் அவர் புகைப் பழக்கத்தை கைவிடுகிறார். புகைப்

பிடிப்பதை நிறுத்தியவுடன் அவருக்கு இருமல் ஏற்படுகிறது. சளி

வெளியேறத் துவங்குகிறது. இத்தனை வருடங்களாக புகை

பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் மூலமாக உடலின் ஒவ்வொரு

செல்லிற்கும் பரவியிருக்கும் (நிகோடின்) ரசாயனத்தை உடல்

வெளியேற்றத் துவங்கியதுதான் அறிகுறிதான் இருமலும்,

சளியும். இத்தொந்தரவுகளைக் கண்டு பயந்து அவர் “முப்பது

வருடங்களாக புகை பிடித்த போது இல்லாத இருமலும், சளியும்

இப்போது வந்துவிட்டது. புகை பிடிப்பதை நிறுத்தியதால் தான்

இது வந்தது” என்று கூறிப் புகைப் பழக்கத்தை மறுபடியும்

துவங்கிவிடுவாரானால் அது சரியா? இப்போது புதிய

ரசாயனங்கள் உள்ளே அனுப்பப்படாததால் தான் உடலின்

உள்ளே


தேங்கிய ரசாயனங்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. 
மறுபடியும் புதிய ரசாயனங்களை அனுப்பத் துவங்கினால் 
கழிவுகளின் தேக்கம் கூடுதலாகி, அது தேங்கியுள்ள பகுதிகளில் 
பாதிப்பு துவங்கும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு புகைப் 
பழக்கத்தை நிறுத்தி விடுவாரானால், ஏற்கனவே கழிவுகளால் 
ஏற்பட்ட பாதிப்பும் படிப் படியாக நீங்கி ஆரோக்கியமான 
உடலைப் பெறுவார்.
இங்கே நாம் விளங்கிக்கொண்ட வாழ்வியல் முறையைக்

கடைப்பிடிக்கத் துவங்கும் போது ஏற்படும் சின்னச் சின்ன

தொந்தரவுகளும் இந்த வகையானது தான். படிப் படியாக

கழிவுகள் உடலில் இருந்து நீங்கும் போது முழுமையான

ஆரோக்கியம் நிலைக்கும். நாம் பயன்படுத்தும் உணவுகளில்

உள்ள ரசாயனங்கள், தண்ணீரில் உள்ள ரசாயனங்கள், காற்றின்

மாசுபாடு, கிருமிகள் பற்றிய பயமுறுத்தல் என எந்த ஒரு

அச்சுறுத்தலுக்கும் அசையாத நபராக நம்மால் வாழ முடியும்...

நம்முடைய எதிர்ப்பு சக்தி என்ற மருத்துவர் சரியாக இருந்தால்.
இந்த நூலின் துவக்கத்தில் பயத்திற்குப் பலியான ஒரு அமெரிக்க

நோயாளியைப் பற்றிப் பார்த்தோம். அதே அமெரிக்காவில் நடந்த

இன்னொரு சம்பவத்தைப் பார்த்து விட்டு நூலை நிறைவு

செய்வது பொருத்தமானதாக இருக்கும். அயர்லாந்தில் பிறந்து,

அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தவர் டாக்டர்.ஜோசப்

மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம்

வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய

ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய

கருத்துக்களை ஆய்வில் தேடிக் கொண்டிருந்த காலத்தில் அவர்

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தீவிரமான ஆய்வின்

விளைவால் ஒரு கட்டத்தில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட

புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவருக்கு

தன்னுடைய உடல் பற்றிய கவனம் வந்த போது தோல்

புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையிலிருந்து

வெளியேற்றப்பட்டார்.
புற்றுநோய் படிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார்

ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ஒரு

கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது

உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான

எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால்

பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை

அவரால் சரியாக்கிவிட முடியும். ஏனென்றால் அது

அவரால்தானே உருவாக்கப்பட்டது?” இந்த உவமை மர்பிக்கு

மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின்

இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்பதைப் புரிந்து

கொண்டார். மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும்

என்பதையும் டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில்

எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல்

புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி.

“புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு

வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என்

மனதைப் பொறுத்தவரை, உடலைப் பொறுத்தவரை குனமாதல்

என்பது அதன் இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி.

அவருடைய

முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன

உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன.
ஒற்றை செல்லில் இருந்து நம்மைப் படைத்து, இந்த நிமிடம்

வரை நம்மைப் பராமரித்துக் கொண்டிருக்கும் நம் உடல் என்னும்

மருத்துவரை முழு பலத்துடன் இயங்க அனுமதிப்போம். நம்

பழக்க வழக்கங்கள் மூலமும், பயத்தின் மூலமும் நாம்

ஏற்படுத்தும் செயற்கை இடையூறுகளைக் கைவிடுவோம்.

மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்!


மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்!

----------------------------------------------------------

No comments:

Post a Comment